தமிழ் பழமொழிகள் - Tamil Proverbs

"அக்கப்போரு பிடிச்ச நாயி வைக்கப் போர்ல படுத்துக்கிட்டு தானும் திங்காதாம் திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்"
"அக்கம்பக்கம் பார்த்துப் பேசு."
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை."
"அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்."
"அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்."
"அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்."
"அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு."
"அக்காளைப் பழித்து தங்கச்சி மோசம் போனாள்."
"அக்காளோடு போயிற்று அத்தான் உறவு."
"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே"
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
"அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !"
"அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா."
"அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்."
"அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது."
"அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை."
"அகல இருந்தால் பகையும் உறவாம்."
"அகல உழுகிறதை விட ஆழ உழு."
"அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்"
"அகல் வட்டம் பகல் மழை."
"அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்."
"அகன்று இருந்தால் நீண்ட உறவு கிட்ட இருந்தால் முட்டப் பகை"
"அங்காடிக்காரிய சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயம்,கருவேப்பிலைன்னு பாடுவாள்"
"அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு."
"அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்."
"அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது"
"அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு."
"அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?"
"அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்."
"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்."
"அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்."
"அடக்கமே பெண்ணுக்கு அழகு."
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு."
"அடாது செய்தவன் படாது படுவான்."
"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்"
"அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்"
"அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?"
"அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்."
"அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்."
"அடிக்கிற கைதான் அணைக்கும்!"
"அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா"
"அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்."
"அடியாத மாடு படியாது."
"அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை"
"அடுக்களை குற்றம் சோறு குழைந்தது"
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்."
"அடை மழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும்"
"அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே."
"அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது."
"அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்."
"அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை."
"அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்."
"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது ."
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு."
"அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!"
"அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்."
"அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்."
"அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!.."
"அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி"
"அந்தி மழை அழுதாலும் விடாது."
"அப்பன் அருமை மாண்டால் தெரியும்."
"அப்பனே மட்டையப் பிடிச்சு தொங்கிகிட்டு இருந்தானாம், பையன் நல்ல நெத்துக்காயா போடச் சொன்னானாம்."
"அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே."
"அப்பியாச வித்தைக்கு அழிவில்லை."
"அப்பியாசம் கூசா வித்தை."
"அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல."
"அம்பலம் வேகுது .அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?.சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே."
"அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி."
"அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்."
"அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?"
"அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?"
"அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்."
"அயிரைக்கு எதுக்கு விலாங்கு சேட்டை"
"அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்."
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்"
"அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்."
"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."
"அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்"
"அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல."
"அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்."
"அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்."
"அரிசி உழக்குன்னாலும் அடுப்பங்கரை மூணு வேணும்"
"அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே"
"அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்."
"அரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயிலே மண்ணு."
"அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?"
"அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"
"அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது."
"அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது."
"அருமை சிந்தை, அற்புதம் செய்யும்."
"அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது."
"அரை கொத்தரிசி அன்ன தானம் . விடிய விடிய மேள தாளம் ."
"அரைக் குடம் தளும்பும், நிறைக் குடம் தளும்பாது."
"அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்."
"அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)"
"அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்."
"அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி."
"அரைக்கிணறு தாண்டினாற் போல/அரைக்கிணறு தாண்டாதே!"
"அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுக்க் குடிக்கிறான் ."
"அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி."
"அரைப்படி அரிசி அன்னதானத்துக்கு விடிய விடிய மேளதாளமாம்"
"அரைப்பணம் குடுத்து அழச்சொன்னங்களாம், ஒருப்பணம் கொடுத்து ஓயச்சொன்னாங்கலாம்."
"அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்."
"அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்."
"அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது."
"அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்."
"அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?"
"அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு."
"அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே."
"அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது."
"அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும்?"
"அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்."
"அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை."
"அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்."
"அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது."
"அவன் கெடக்குறான் குடிகாரப்பய எனக்கு கொஞ்சம் இருத்தாப்புல ஊத்துன்னானாம்"
"அவனவன் செய்த வினை அவனவனுக்கு."
"அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?"
"அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்."
"அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்."
"அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்."
"அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்."
"அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?"
"அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்."
"அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது."
"அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்"
"அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்"
"அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு"
"அளக்கிற நாழி அகவிலை அறியுமா?"
"அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை."
"அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்."
"அளந்த வல்லம் அட்டாலியிலே"
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு."
"அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது."
"அள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது ."
"அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி"
"அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்."
"அற நனெஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன?"
"அற முறுக்குனா அத்துப் போகும்."
"அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை."
"அறச் செட்டு முழு நட்டம் ."
"அற்ப அறிவு அல்லலுக்கு இடம்."
"அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்."
"அற்ப சகவாசம் பிராண சங்கடம்."
"அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்."
"அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்"
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்."
"அறமுறுக்கினால் அற்றும் போகும்."
"அற்றது பற்றெனில் உற்றது வீடு."
"அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்."
"அறிய அறியக் கெடுவார் உண்டா?"
"அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்."
"அறிவீன இடத்தில் புத்தி கேளாதே."
"அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்."
"அறிவீனனிடம் புத்தி கேட்காதே."
"அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை."
"அறிவுடையாரை அரசனும் விரும்புவான்."
"அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்."
"அறுக்க மாட்டாதான் கையில் அம்பெத்தெட்டு அரிவாளாம்"
"அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அரிவாளாம்!"
"அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி"
"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி."
"அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி."
"அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?"
"அன்பான நண்பனை ஆபத்தில் அறி."
"அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்."
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"
"அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?"
"அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்."
"அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்."
"அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?"
"அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்."
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
"அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை"
"அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்"
"அஷ்ட பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்"
"அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்"
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்"
"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்"
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்"
"அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி"
"அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்"
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
"அறிவற்ற கொள்கை ஒளியற்ற விளக்கு"
"அன்பிலான் இட்டது அமுதாகாது"
"அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்"
"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது"
"அழுத பிள்ளை பால் குடிக்கும்"
"அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்"
"அங்கத்தைத் தட்டி தங்கத்தைச் சேர்"
"அடித்தால் முதுகில் அடி வயிற்றில் அடிக்காதே"
"அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல"
"அவனவன் எழுத்தை அவனவனே அனுபவிக்கணும்"
"அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா"
"அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்"
"அரைகுறை படிப்பு ஆபத்தானது"
"அழுது அழுது பெற்றாலும் அவள்தான் பெற வேண்டும்"
"அறிவில்லா ஆர்வம் ஒளியில்லா நெருப்பு"
"அவசரம் அனைத்தையும் பாழாக்கும்"
"அதிகாரத்தால் முடியாததை அன்பால் முடிக்கலாம்"
"அதிகம் பேசுபவர்கள் பெரிய புளுகர்கள்"
"அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கு நெருப்பு அவசியம்"
"அடிப்பவர் அடித்தால் அம்மியும் நகரும்"
"அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவது மேல்"
"அதிகாரம் இல்லாவிட்டால் பரிகாரம் வேண்டும்"
"அலை ஓய்ந்த போது தலை முழுக முடியாது"
"அழையாத வீட்டில் நுழையாதே சம்மந்தி"
"அமுதுக்கு இட்டால் ஆபத்திற்கு உதவும்"
"அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்"
"அதிகாரியுடன் எதிர்வாதம் செய்யாதே"
"அகல் வட்டம் பகல் மழை"
"அடி அதிரசம் இடி கொழுக்கட்டை"
"அற்ப சகவாசம் பிராண கண்டம்"
"அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆட முடியும்"
"அரங்கம் ஏறினால்தான் அம்பலம் ஏற முடியும்"
"அள்ளிக் கொடுத்தால் சும்மா அளந்து கொடுத்தால் கடன்"
"அரியும் சிவனும் ஒன்னு இத அறியாதவன் வாயில மண்ணு"
"அழகு சோறு போடுமா அதிர்ஷ்டம் சோறு போடுமா"
"அன்ன நடை நடக்கப் போயி தன் நடையும் கெட்டான்"
"அரைத்து அரைத்து மீந்தது அம்மியாம் சிரைத்து சிரைத்து மீந்தது குடுமியாம்"
"அதை விட்டால் கதியுமில்ல அப்புறம் போனா வழியுமில்ல"
"அரை வைத்தியன் அவசரக் கொலைகாரன்"
"அறிவின் தந்தை நினைவாற்றல் அதனுடைய தாய் சிந்தனை"
"அக்கா உறவு மச்சான் பகையாகுமா"
"அங்காடி விலையை அதிரடிக்காதே"
"அடியேன்னு கூப்புட பொண்டாட்டி இல்லயாம் இதில புள்ளகுட்டி எத்தனன்னு கேக்குற மாதிரி"
"அயலான் உடமைக்கு பேயாய் பறக்காதே"
"அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோத்துக்கு பங்கும் இருப்பான்"
"அசை போட்டு திங்கிறது மாடு அசையாம திங்கிறது வீடு"
"அஞ்சாவது பொண்ணு பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்"
"அண்டை அயலைப் பார்த்துப் பேசு"
"அரணை கடிச்சத தெரிஞ்சா அப்பவே மரணமாம்"
"அறுக்க மாட்டாதவன் மடியில அம்பெத்தெட்டு கருக்கருவாளாம்"
"அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்"
"அவலை முக்கித் தின்னு எள்ளை நக்கித் தின்னு"
"அரைப் பணம் குடுத்து அழச்சொல்லி ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன மாதிரி"
"அவலை நினைத்து உரலை இடிச்ச மாதிரி"
"அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி"
"அரச மரத்தை சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பாத்தாளாம்"
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில குடை பிடிப்பானாம்"
"அள்ளாது குறையாது இல்லாதது பிறக்காது"
"அரையில புண்ணும் அண்டையில கடனும் ஆகவே ஆகாது"
"அய்யாச்சாமிக்கு கல்யாணம் அவரவர் வீட்டுல சாப்பாடு"
"அப்பன் சோத்துக்கு அலையிறான் புள்ள கோதானம் பண்றானாம்"
"அடித்தாலும புருஷன்தான் அணைத்தாலும் புருஷந்தான்"
"அஞ்செழுத்து பாவனையும் அப்பனப் போல"
"அஞ்சி நடக்குறவனுக்கு இது காலமில்ல"
"அந்தமில்லாதவன் ஆடக்கூடாது சந்தமில்லாதவன் பாடக்கூடாது"
"அழுகிற வீட்டுல இருந்தாலும் இருக்கலாம் ஒழுகிற வீட்டுல இருக்கவே கூடாது"
"அகம் பிடித்தவனை ஆறு அடித்துக் கொண்டு போகிறது"
"அக்கரை தீர்ந்தால் அக்கா புருஷன் என்ன கொக்கா"
"அறம் செய விரும்பு"
"அஃகஞ் சுருக்கேல்"
"அரவம் ஆட்டேல்"
"அழகு அலாதன செய்யேல்"
"அறனை மறவேல்"
"அனந்தல் ஆடேல்"
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
"அஃகமும் காசும் சிக்கெனத் தேடு"
"அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்"
"அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்"
"அமைதி ஊறு தராது"
"அண்ணன் என்னக்கிச் சாக திண்ண என்னக்கி காலியாக"
"அத்திரிபச்சா கொழுக்கட்டைன்னானாம்"
"அம்மி செஞ்சவன் குழவியும் செஞ்சிருப்பான்"
"அள்ளுவித்தான் துள்ளு வித்தான் அந்தச் சந்தையில; அதையும் கொண்டி வித்தானாம் துலுக்கன் சந்தையில"
"அரைக்காசுக்கு பரதேசம் போகதடா"
"அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும்."
"அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது"
"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்."
"அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் ."
"அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி."
"அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சித்தான ஆவணும்."
"அக்கரைக்குப் போகவும் செய்யனும், பரிசிலை கவிழ்த்தவும் செய்யனும்"
"அக்காளும் விருந்துக்கு வரணும், அரிசியும் தீரக்கூடாது"
"அக்காள் போனால் போகட்டும், தங்கச்சி வந்தா சந்தோசம்"
"அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா"
"அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே"
"அம்மி அடிச்சன்னைக்கே, குழவியும் அடிச்சு இருப்பான்"
"அழுதாலும் அந்தஸ்து வேண்டும் சிரித்தாலும் சீர் வேண்டும்"
"அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் குறையும்"
"அகோர தவசி விபரீத சோரன் அச்சாணி இல்லாத வண்டி முச்சாணும் ஓடாது"
"அயல்வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா"
"அகல இருந்தால் பகையும் உறவாகும்"
"அறியாமை அகல ஆற்றாது படி"
"அகிலத்தை அடக்க ஆசிரியருக்கு அடங்கு"
"அதற்கெல்லாம் குறைவில்லை ஆட்டடா பூசாரி"
"அவசரக் கோலம் அள்ளித் தெளிச்சதைப் போல"
"அன்பற்ற மாமிக்கு கும்பிடும் குற்றமே"
"அந்திச் செவ்வானம் அப்போதே மழை"
"அடியாத மாடு படியாது"
"அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை"
"அறிவுடையாரை அரசனும் விரும்புவான்"
"அல்லவை தேய அறம் பெருகும்"
"அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் என்ன சாப்பாடு"
"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி"
"அடிக்கும் பிடிக்கும் சரியாப் போச்சு"
"அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்"
"அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்"
"அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் ஒழுங்குபடாது"
"அறிவு தலைக்குக் கிரீடம் அடக்கம் காலுக்குச் செருப்பு"
"அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு."
"அடிக்காம அழுவுற பொம்பளையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்பமுடியாது."
"அல்லாம குறையாது, சொல்லாம வராது."
"அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?"
"அங்கிட்டும் இருப்பான் இங்கிட்டும் இருப்பான், ஆக்குற சோத்துல பங்கும் கேப்பான்."
"அய்யாச் சாமிக்கு கல்யாணமாம் அவரவர் வீட்டிலே சாப்பாடாம்"
"அறிவாளிக்கு ஆயிரம் கண்; முட்டாளுக்கு ஒரே கண்."
"அண்டையில் காவேரி, முழுகமாட்டாதவ மூதேவி."
"அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல்."
"அறையில் ஆடியபின் அம்பலத்தில் ஆடு."
"அடாது செய்தவன் படாது படுவான்."
"அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது."
"அற்ப சகவாசம் பிராண சங்கடம்."
"அந்தி மழை அழுதாலும் விடாது."
"அகல உழுகிறதை விட ஆழ உழு."
"அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்."
"அடுத்தவன் கைய தலைக்கு வச்சிக்கிட்டு எவ்வளவு நாளைக்குத் தூங்க முடியும்?"
"அஞ்சி மணியம் பண்ண வேண்டிய அவசியமும் இல்ல, கெஞ்சி பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயமும் இல்ல."
"அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்."
"அப்பாவிக் கொல்லனைக் கண்டால் குரங்கு குஞ்சுக்கு பூணு கட்டச் சொல்லுமாம்."
"அடுப்பே குலதெய்வம்; ஆம்படையானே திருப்பதி."
"அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு."
"அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மாட்டாள்."
"அன்னைக்கு உரிச்ச தோலு அன்னைக்கே காயும் ஐப்பசி மாசத்து வெயில்."
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்."
"அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை."
"அகல் வட்டம் பகல் மழை."
"அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்."
"அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது."
"அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?"
"அடக்கமே பெண்ணுக்கு அழகு."
"அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்."
"அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்."
"அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்."
"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்."
"அடியாத மாடு படியாது."
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்."
"அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்."
"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது."
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு."
"அப்பன் அருமை மாண்டால் தெரியும்."
"அப்பியாச வித்தைக்கு அழிவில்லை."
"அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்."
"அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்."
"அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்."
"அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது."
"அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்"
"அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்."
"அளக்கிற நாழி அகவிலை அறியுமா?"
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு."
"அறச் செட்டு முழு நட்டம்."
"அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்."
"அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை."
"அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்."
"அறமுறுக்கினால் அற்றும் போகும்."
"அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்."
"அறிய அறியக் கெடுவார் உண்டா?"
"அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்."
"அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்."
"அறிவீன இடத்தில் புத்தி கேளாதே."
"அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை."
"அறிவுடையாரை அரசனும் விரும்புவான்."
"அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்."
"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி."
"அற்ப அறிவு அல்லற் கிடம்."
"அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்."
"அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?"
"அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்."
"அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்."
"அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?"
"அரிதாகப் பார்ப்பவை விரைவாக மறந்துபோம்."
"அவையின் நீங்கினால் அக்கறையும் நீங்கிடும்."
"அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர்கள் ஒரு சிலரே வேண்டும்."
"அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள்."
"அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும்."
"அறிவுரை போல இலவசம் வேறெது?"
"அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது."
"அறிவுரை தேவைப்படும் பொழுதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும்."
"அனைவரும் பேசினால் கேட்பது யார்?"
"அவசர முன்னேற்றம் அடித்திடும் பல்டி."
"அடிவாரத்தில் தங்கிவிடுபவன் மலையைக் கடக்கமாட்டான் தேங்குபவன் முன்னேறான்."
"அழுக்கு அங்கியின் உள்ளும் உறைவான் அறிஞன்"
"அட்டையைப் பார்த்தால் நூல் அருமை புரியுமா"
"அழுகின பழங்களில் அதிகம் பொறுக்க முடியாது"
"அறிவாளிகள் காரணத்தை ஆய்ந்து கொண்டிருப்பார்கள் முட்டாள்கள் முன்னின்று முடிவெடுப்பார்கள்."
"அதிகம் கத்தும் கழுதை அதிகம் தின்னாது."
"அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது."
"அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்."
"அதிகமாகக் குரைப்பான் அரிதாகவே கடிப்பான்."
"அமைதியாய் இரு விரும்பியதை அடைவாய்."
"அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்துவிடும்."
"அழகின் ஆழம் தோலளவுதான்."
"அழகும் நேர்மையும் அரிதே இசைவுறும்."
"அழகிய முகத்திற்குப் பரிந்துரை தேவையில்லை."
"அழகு தப்பிக்க அருமையாய் உதவிடும்."
"அழகே ஒரு சக்தி புன்சிரிப்பே அதன் கூர்வாள்."
"அழகு ஒருமுறை களங்கப்பட்டாள் எப்போதும் துலங்காது."
"அழகு வயதைக் குறைத்துக் காட்டும்"
"அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது."
"அழகு ஒரு மலரே"
"அழகு உண்மை உண்மையே அழகு."
"அழகிருந்தால் உலை கொதிக்குமா"
"அந்தியில் படுக்கச்செல் வைகறையில் துயில் எழு."
"அது முடிவின் தொடக்கம்."
"அதிகாலை எழுபவள் அதிலாபம் பெறுவாள்."
"அழகிய இறக்கைகள் படைக்கும் அற்புதப் பறவைகளை."
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"
"அழகு வெறும் வசந்தகாலத்து மலரேயாகும்."
"அழகை அடையும் தகுதி வீரனை தவிர வேறு யாருக்கு?"
"அனைவரின் வேலை எவனுடைய வேலையும் அல்ல."
"அதிக்க கவலை அழிவில் முடியும்."
"அக்கறை போனால் சிகிச்சையும் போகும்."
"அறியும் ஆவலில் அக்குவேறு ஆணிவேறானதாம் பூனை."
"அப்பன் குதிருக்குள் இல்லை என்றானாம்."
"அடிக்கடி வேலை மாறுபவன் அதிகம் சாதிக்கமாட்டான்."
"அறிவிலியாய்ப் பிறந்தவன் ஒருநாளும் அறிஞனாகான்."
"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்."
"அதிக விலைக்கு விற்றாலும் எடையை குறைக்காதே."
"அழையா விருந்தாளிக்கு அறுசுவை விருந்தா கிடைக்கும்?"
"அலைந்து அடிபட்டு ஆரம்பத்திற்கே மீண்டும் வந்தோம்."
"அமைதியான வாழ்க்கை பெற எதையும் விட்டுக்கொடுக்கலாம்."
"அற்ப மனிதர்களுக்கு அற்ப விசயங்கள் பெரியவை."
"அதிருப்தியே முன்னேற்றத்தின் முதற்படி."
"அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் முழு அதிகாரம் ஊழல் புரிய முழுமையாக மயக்கும்."
"அதிர்ச்ட தேவதை வீரனையே அரவணைப்பாள்."
"அச்சம் அபாயத்திலிந்து தப்ப வைக்கும் ஆனால் வீரம் அதில் உறுதுணை ஆகும்."
"அபாயங்களை முன்னறிவிப்பவன் ஆற்றுவனோ வீரப் பயணம்?"
"அதிகத் தந்திரம் காரியத் தடையாம்."
"அனைத்தின் முடிவே மரணம்."
"அனைவருக்கும் மரணம் வருவது நிச்சயம்."
"அரசனும் சாவான் ஆண்டியும் சாவான்"
"அவப்பெயர் சூட்டு தூக்கில் மாட்டு."
"அவததூறு பேசுபவன் ஆயிரம் முறை கொல்வான் கொலைகாரன் ஒருமுறைதான் கொல்வான்."
"அதிகச் சேறு எறிந்தால் தான் ஒன்றிரண்டு ஒட்டாதிரா."
"அவனவனுக்கு அவனவன் ருசி."
"அதிகம் தெரிந்தவர் சந்தேகப்படார்."
"அழகிய உடை உடுத்தால் அழகனாகலாம்."
"அத்துமீறி அதிகமானால் அனைவர் செவிக்கும் எட்டும்."
"அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாய் வாழலாம்."
"அற்ப உண்டியே அதிகம் உண்பவன்."
"அனுபவமே அருமையான ஆசான்."
"அனுபவம் பிழைகளைச் செய்தபின் மெதுவாகக் கற்பிக்கிறது."
"அனுபவமே அறிவின் தாய்."
"அழகிய முகம் ஓர் அதிர்ச்டம்."
"அழகிய முகமே ஒரு சிபாரிசு கடிதம் தான்."
"அறியா முகங்கள் பொது இடங்களில் அழகானவை அறிவுடையவை அறிந்த முகங்கள் தனி இடங்களில் அப்படி இல்லை."
"அழகிய முகம் ஆனால் அழுகிய உள்ளம்."
"அழகிய முகமும் அழுகல் பேரமாகுமா"
"அன்பு நலிந்தால் தவறு தடிக்கும்."
"அச்சம் அனைத்தும் தளையே."
"அச்சத்தில் காதுகள் கூர்மையானவை."
"அச்சத்திற்கு மருந்தில்லை."
"அடுப்புக்கு நெருப்பு நல்லது."
"அளவுமீறி முகத்துதி செய்பவன் அநியாயமாய்க் கண்டனமும் செய்வான்."
"அர்த்தமற்ற பேச்சே அடிமுட்டாள் பேச்சு."
"அருவருப்பான உண்மையை அடிமுட்டாளைத் தவிர யாரும் கூற மாட்டார்கள்."
"அதிர்ச்டம் வரும்போது தவறவிடாதே."
"அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர் சிலரே வேண்டும்."
"அடிக்கடி நீர் வார்க்க வேண்டிய பயிரே நட்பு."
"அரசுக்கு ஆட்டுக்காரனும் வேண்டும் கசாப்புக்காரனும் வேண்டும்."
"அனைத்துக்கும் ஆசைப்படு அனைத்தையும் இழ"
"அரைக் கிணறு தாண்டுவதை விடத் தாண்டாதிருப்பது மேல்"
"அடுப்பு அனலில் ஆனந்தம் வளர்கிறது."
"அவசரம் அடிசறுக்கி விழும்."
"அவசரத்தில் உள்ளது தவறு"
"அவசரப்பட்டால் தவறு நிச்சயம்."
"அவசரப்பட்டு அடியெடுத்து வைப்பது ஆகாது."
"அவசரக் கோலம் அள்ளித் தெளித்தல்"
"அரைகுறை வேலையின் அன்னை அவசரம்."
"அவசரக் கல்யாணம் நிரந்தர மனவருத்தம்."
"அவசரக்காரனுக்கு புத்தி மட்டு."
"அன்பைப் போல் வெறுப்பும் குருடே."
"அளவற்ற நம்பிக்கை அளவில்லாத ஏமாற்றம்."
"அறியாமையே ஆனந்தம்."
"அறியாமையைப்போல் ஒரு குருட்டுத்தனம் இல்லை."
"அறியாமையே வாழ்க்கையின் அமைதி."
"அறியாமையே கலைக்கு எதிரி."
"அப்பாவிக்கும் அழகிக்கும் தமக்குத்தாமே எதிரி."
"அழகிய உடற்கட்டிற்கு விருப்புவெறுப்பற்ற காலம் வீரனையும் அப்பாவிகளையும் கண்டால் பொறாது."
"அறியும் ஆவலில் அக்குவேறு ஆணிவேறு ஆனது."
"அழகிய பொருள் என்றும் ஆனந்தம் தரும்."
"அநீதியின் கொடிய வடிவே பழிக்குப் பழி."
"அதீத நீதி அதீத அநீதியே."
"அதிகம் வரும்வரை கொஞ்சம் வைத்திரு."
"அன்பு இதயங்கள் அதிவிரைவில் அநீதிக்கு ஆட்படும்."
"அன்பே வெற்றிகொள்ள உன்னத ஆயுதம்."
"அன்பு ஒருபோதும் வீணாக்கப்படுவதில்லை."
"அரசனுக்கு செய்வது எல்லாம் சரியே."
"அறிவே ஆற்றல்."
"அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது."
"அனுபவமில்லாத அறிவு அரைக் கலைஞனையே உருவாக்கும்."
"அறிவு அனைத்து நற்பண்புகளின் தாய் அறியாமையிலிருந்துதான் அனைத்து தீயபண்புகளும் வெளிப்படுகின்றன."
"அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்."
"அறிவைப் பெருக்குபவன் துயரத்தைப் பெருக்குவான்."
"அறிவே நன் மனிதனைத் தொடங்கி வைக்கிறது ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது."
"அறிவு ஒரு சுமை அன்று."
"அறிவு தன் விலை அறியும்."
"அறிவு ஏழைகளிடையே வெண்பொன் பிரபுக்களிடையே செம்பொன் மன்னரிடையே அணிகலன்."
"அறிவு மட்டுமே அழியா அணிகலம்."
"அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு."
"அதிகத் தாமதத்தால் வலுவான நோய் மருந்தால் மெதுவாகவே தீரும்."
"அயோக்கியர்களுக்காக ஆக்கப்பட்டதுதான் சட்டம்."
"அளவு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும்."
"அற்ப விசயங்களே சிறிய மனங்களை உலுக்கும்."
"அரைகுறை அறிவு ஆபத்தானது."
"அழ வைப்பவனே நன்கு காதலிப்பான்."
"அடிக்கிற கையே அணைக்கும்."
"அதிர்ச்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை."
"அதிர்ச்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்."
"அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை."
"அளவறிந்த நடவடிக்கை சிறப்பாக வெற்றிபெறும்."
"அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்"
"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்"
"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்"
"அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்"
"ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை"
"ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்."
"ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?"
"ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்."
"ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்."
"ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை"
"ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்."
"ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!"
"ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க."
"ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!"
"ஆசை வெட்கம் அறியாது."
"ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!"
"ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல."
"ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!"
"ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது."
"ஆட்டுகிட்ட சண்டை போட்டுக்கிட்டு ,நரிகிட்ட பஞ்சாயத்துக்கு போனிச்சாம் ஆட்டுக்குட்டி"
"ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்."
"ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்"
"ஆடி உழுது அடர விதை"
"ஆடி வாழை தேடி நடு"
"ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு"
"ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்."
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!"
"ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்."
"ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்."
"ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்"
"ஆடிப்பட்டம் தேடி விதை"
"ஆடிப்பிள்ளை தேடிப் பிழை"
"ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்."
"ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம்."
"ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம் ."
"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்"
"ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்."
"ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா"
"ஆடு வளர்க்றது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சு பாக்றதுக்கு இல்லெ."
"ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்."
"ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற."
"ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?"
"ஆடையில்லாதவன் அரை மனிதன்."
"ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்."
"ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?"
"ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?"
"ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்."
"ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்"
"ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்."
"ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்."
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு."
"ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது."
"ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா."
"ஆபத்திற்குக் குற்றம் (தோஷம்) இல்லை!"
"ஆப்பை புடிச்சவன் நம்ம ஆளா இருந்தா ,அடி பந்தியா இருந்தா என்ன நுனி பந்தியா இருந்தா என்ன?"
"ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !"
"ஆமை அவிக்கிறது மல்லாக்க அதையும் சொன்னா பொல்லாப்பு"
"ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது."
"ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்"
"ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்."
"ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்."
"ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை"
"ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்து தீனி வாங்க முடியலையாம்!"
"ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல"
"ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது."
"ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்"
"ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை."
"ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே."
"ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்"
"ஆரால் கேடு, வாயால் கேடு."
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு."
"ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்."
"ஆலயம் தொழுவது சாலமும் நன்று."
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி."
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி."
"ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை."
"ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்"
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!"
"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?"
"ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்."
"ஆழம் தெரியாமல் காலை விடாதே."
"ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்"
"ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு"
"ஆள் கூடுனா பாம்பு சாகுமா?"
"ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு."
"ஆள் பாதி, ஆடை பாதி."
"ஆளப்பாத்து ஆசனம் போடு, பல்லைப்பாத்து பாக்குப்போடு."
"ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்."
"ஆளான ஆளு இருந்தாதான் ஆமணுக்கு கொட்டையிலயும் எண்ணை வடியுமாம்"
"ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்"
"ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே."
"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு"
"ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி."
"ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு."
"ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு."
"ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு."
"ஆறின கஞ்சி பழங் கஞ்சி."
"ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்."
"ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?"
"ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு."
"ஆறு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான்!"
"ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு."
"ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு."
"ஆறெல்லாம் பாலாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்"
"ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்."
"ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்."
"ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை"
"ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்."
"ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு."
"ஆனை படுத்தால் ஆள் மட்டம்."
"ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே"
"ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்."
"ஆனைக்கு கோவணம் கட்டு-(ரதைப்)-வதைப்போல..."
"ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு."
"ஆனைக்கும் அடி சறுக்கும்."
"ஆனைப் பசிக்கு சோளப் பொரி"
"ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்."
"ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி."
"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்"
"ஆத்தக் கண்டது யாரு அழகரக் கண்டது யாரு?"
"ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாம்"
"ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்"
"ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்"
"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு"
"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு"
"ஆடிப் பட்டம் தேடி விதை"
"ஆலும் வேலும் பல்லுக் குறுதி"
"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"
"ஆயிரம் பேரக் கொன்னாதான் அரை வைத்தியன்"
"ஆடு பகை குட்டி உறவோ"
"ஆறுவது சினம்"
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
"ஆதி உறவு அறுந்தாலும் கள்ளச் சோடி உறவு அறுபடாது"
"ஆயிரம் கிழிசலை ஒரு நூல் தைக்கும்"
"ஆழ்கடலில்தான் முத்துக் குளிக்க வேண்டும்"
"ஆளை நம்புனா அத்துவானம்;மகனை நம்புனா மத்தியானம்"
"ஆறடி நீட்டம்ன்னு ஆட்டம் போட்டானாமா;அவுத்துப் பாத்தா வேப்பிலையாமா"
"ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது."
"ஆசை இருக்குதாம் தாசில் பண்ண, அதிர்ஷ்ட்டம் இருக்குதாம் கழுத மேய்க்க"
"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"
"ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்."
"ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது."
"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்து."
"ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு ."
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி"
"ஆடற மாட்ட ஆடி கறக்கனும் பாடற மாட்ட பாடி கறக்கனும்"
"ஆத்த மாட்டாதவனுக்கு வாக்கப்பட்டு ஆயாளும் மவளும் தூக்கம் கெட்டாளாம்"
"ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்"
"ஆள் போனா அதர்மம் மகன் போறது மத்திமம் தான் போறது தர்மம்"
"ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட"
"ஆயிரம் ரூபா கையில இல்லாததாலெ பத்துரூபா வட்டி நட்டமாப் போச்சின்னானாம்"
"ஆசை அவன் மேல ஆதரவு பாய் மேல"
"ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இராது"
"ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்"
"ஆகாயத்தில் இட்ட கல் அங்கேயே நிற்காது"
"ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு"
"ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்"
"ஆனைப் பசிக்கு சோளப்பொறி போல"
"ஆனி அடியிடாதே கூனி குடி புகாதே"
"ஆனதுக்கு ஒரு ஆகாதது ஆகாததுக்கு ஒரு ஆனது"
"ஆவது அஞ்சிலே தெரியும் போவது பிஞ்சிலே தெரியும்"
"ஆணை அடித்து வள பெண்ணைப் போற்றி வள"
"ஆணவம் பிடித்தவன் அழிஞ்சு பழஞ்சோறானான்"
"ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு"
"ஆசையுள்ளவனுக்கு அலைச்சலும் உண்டு"
"ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போல"
"ஆண்டி பெத்தது அஞ்சும் அவலம்"
"ஆண்டி எப்போ சாவான் மடம் எப்ப ஒழியும்"
"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது"
"ஆள் இல்லாத மங்கைக்கு அழகு பாழ்"
"ஆனால் அச்சிலே வார் ஆகாட்டி மிடாவிலே வார்"
"ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பிசாசு"
"ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்"
"ஆள மாட்டாதவனுக்கு பொண்டாட்டி ஒரு கேடா"
"ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்"
"ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாம்"
"ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை"
"ஆன மேல போறவன் அந்து காலன், குதிரை மேல போறவன் குந்து காலன்."
"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளம்."
"ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம்."
"ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்."
"ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க."
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"
"ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை"
"ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் வரக்கூடாது."
"ஆட்டுக்கு பள்ளத்தில் வேகம், ஆனைக்கு காடு மேடெல்லாம் வேகம்."
"ஆளாகறதுக்கு முன்னாடியே அரச மரத்த சுத்தி வந்தாளாம் ஆம்பளப்புள்ள வேணும்னு."
"ஆட்டிக்கிட்டு போற கைய நீட்டிக்கிட்டு போனா, போடற மகராசன் போட்டுட்டுப் போறான்."
"ஆடுன காலும் அரைச்சக் கையும் சும்மா இருக்காது."
"ஆசை இருக்கிற இடத்தில்தான் பூசை இருக்கும்."
"ஆத்தோட போனாலும் போவேன், தெப்பக்காரனுக்குக் காசு தரமாட்டேன்."
"ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழை பொழியும்."
"ஆன கல்யாணத்துக்கு மோளம் என்ன, தாளம் என்ன?"
"ஆறிய புண்ணிலும் கசடு நிற்கும்."
"ஆடு பகை; குட்டி உறவு."
"ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை."
"ஆடையில்லாதவன் அரை மனிதன்."
"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு."
"ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்."
"ஆரால் கேடு, வாயால் கேடு."
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு."
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி."
"ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை."
"ஆழமறியாமல் காலை இடாதே."
"ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்."
"ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்."
"ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு."
"ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு."
"ஆறின கஞ்சி பழங் கஞ்சி."
"ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?"
"ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு."
"ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்"
"ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு."
"ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு."
"ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்."
"ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்."
"ஆனைக்கும் அடிசறுக்கும்."
"ஆனை படுத்தால் ஆள் மட்டம்."
"ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே."
"ஆழ்ந்து ஆராய்தல் பலர் பணியாயினும் செய்து முடித்தல் ஒருவன் பணியே."
"ஆதாமின் வீழ்ச்சியால் நாம் பாவிகள் ஆனோம்."
"ஆதாம் ஆப்பிளைக் கடித்ததால் நம் பல்வலி இன்னும் தீர்ந்தபாடில்லை!"
"ஆதாம் உறங்கினான் விலாவில் ஏவாள் ஊதினாள் விந்தை அவன் முதல் உறக்கமே இறுதி ஓய்வானது."
"ஆசைக்கு அளவில்லை."
"ஆர்வ முயற்சியால் அடையலாம் உச்சியை."
"ஆசைப்படுபவர் விடாது முயல்வர்."
"ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்."
"ஆளைப் புரிந்து கொள்ள அதிகாரம் அளித்துப் பார்."
"ஆசைகளே குதிரைகளானால் பிச்சைகாரர் சவாரி செய்வர்."
"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை"
"ஆலோசகர்கள் மழப்பினாலும் நூல்கள் உள்ளதை உள்ளபடி உரைக்கும்."
"ஆபத்து பாதுகாப்பின்அடுத்த வீட்டுக்காரன்."
"ஆபத்தை ஆபத்தால் வெல்ல முடியாது."
"ஆபத்து நீங்கிவிட்டால் பாதி தவிர்த்தது போல்."
"ஆபத்த நீங்கிவிட்டால் ஆண்டவனை நினைக்க மாட்டோம்."
"ஆபத்தில்லாமல் கலம் செலுத்த ஆழ் கடலுக்குச் செல்லாதே."
"ஆபத்து மனிதனை பக்திமானாக்கும்."
"ஆயத்தம் செய்யாதவனுக்கு அனைத்தும் திடீர் மரணமே."
"ஆள்வோர் அரக்கராய் மாறும் முன்னர் அவர்களை மாறவல்ல சனநாயகமே ஆட்சியுள் சிறந்தது."
"ஆசையின் வேகம் அனைத்தையும் பின் தள்ளும்."
"ஆசைப்படாதவன் அல்லல்பட மாட்டான்."
"ஆகாதவனை அழித்திட ஆயிரம் முறையுண்டு."
"ஆங்கிலேயன் மனதில் இடம்பிடிக்க அறுசுவை உண்டி படை."
"ஆலயம் சத்திரம் சவப்பெட்டி இங்கெல்லாம் யாரே உயர்ந்தவர்? யாரே தாழ்ந்தவர்?"
"ஆன்மாவின் சாளரமே கண்கள்."
"ஆயிரம் பூக்கள் மலரட்டும்."
"ஆசைகள் முட்டாள்தனமானவை."
"ஆபத்துக்கு உதவுபவனே உண்மையான நண்பன்."
"ஆதாயம் வருமானால் பட்டதெல்லாம் மறந்துவிடும்."
"ஆழமாக நேசிப்போர் ஆழமாக வெறுக்கவும் செய்வர்."
"ஆரோக்கியமே ஆனந்தம்."
"ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை பாழ்."
"ஆங்கிலேயன் வீடு அவனுக்குக் கோட்டை."
"ஆதாயம் சேர்ந்தால் நன்மதிப்பு அகலும்."
"ஆழ்ந்த நம்பிக்கை ஆனந்தம் கொடுக்கும்."
"ஆலயம் செல்லும் அனைவரும் புனிதர் அல்லர்."
"ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நீதி"
"ஆயுளால் வாழ்க்கை அளக்கப்படுவதில்லை."
"ஆன்மா வாழ்கின்ற இடத்தில் இல்லை காதலிக்கும் இடத்தில்தான்."
"ஆணுக்கு தன் உறுதியுண்டு பெண்ணிற்குத் தன் வழியுண்டு."
"ஆறு கெட நாணல் விடு, ஊரு கெட நூல விடு"
"ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது"
"ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ"
"ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவானா?"
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை."
"இக்கரைக்கு அக்கரை பச்சை."
"இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்."
"இஞ்சி இலாபம் மஞ்சளில்."
"இஞ்சி தின்ன குரங்கு மாதிரி...."
"இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று."
"இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு."
"இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்."
"இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்."
"இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை."
"இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக....."
"இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்."
"இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்."
"இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்."
"இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல."
"இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?"
"இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்."
"இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்."
"இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!"
"இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை."
"இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது."
"இரக்கப் போனாலும் சிறக்கப் போ."
"இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே."
"இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்."
"இரண்டு போன்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?"
"இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி."
"இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே."
"இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை"
"இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவனுமில்லை"
"இராச திசையில் கெட்டவணுமில்லை"
"இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்."
"இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்."
"இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்."
"இரிஷி பிண்டம் இராத் தாங்காது."
"இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான்."
"இருக்குறவ அள்ளி முடியறா."
"இருட்டுக்கு முந்தி இரவு உணவு."
"இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்."
"இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?"
"இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?"
"இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?"
"இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா."
"இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான்."
"இருவர் நட்பு ஒருவர் பொறை."
"இரைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்."
"இரைச்சல் இலாபம்."
"இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும்."
"இல்லது வாராது, உள்ளது போகாது."
"இல்லறம் அல்லது நல்லறமல்ல."
"இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)"
"இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்."
"இல்லாது பிறாவது அள்ளாது குறையாத"
"இலவு காத்த கிளி போல."
"இழவு சொன்னவன் பேரிலேயா பழி?"
"இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?"
"இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று."
"இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்."
"இளங்கன்று பயமறியாது"
"இளமையில் கல்."
"இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து"
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து."
"இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்."
"இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து."
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு!"
"இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல."
"இறங்கு பொழுதில் மருந்து குடி"
"இறுகினால் களி , இளகினால் கூழ்."
"இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்."
"இறைக்கிற ஊற்றே சுரக்கும்."
"இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்."
"இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே."
"இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே"
"இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?"
"இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்."
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)"
"இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்"
"இவன் பெரிய அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன்"
"இயல்வது கரவேல்"
"இடம்பட வீடு எடேல்"
"இணக்கம் அறிந்து இணங்கு"
"இயல்பு அலாதன செய்யேல்"
"இலவம் பஞ்சில் துயில்"
"இளமையில் கல்"
"இல் அறம் அல்லது நல் அறம் அன்று"
"இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்"
"இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்"
"இராகு திசையில் வாழ்ந்தவரும் இல்லை ராஜ திசையில் கெட்டவரும் இல்லை"
"இன்னியப் பொழுது எமப் பொழுது – நாளயப் பொழுது நல்ல பொழுது."
"இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு"
"இனம் இனத்தோட; வெள்ளாடு தன்னோட குட்டியோட"
"இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது"
"இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு"
"இடுக்கண் வரினும் நடுக்கம் கொள்ளேல்"
"இருப்பது பொய் இறப்பது மெய்"
"இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்குவான்"
"இரு கையும் தட்டினால்தான் ஓசை"
"இறங்கு பொழுதில் மருந்து குடி"
"இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை"
"இடிக்குக் குடை பிடிக்கலாமா"
"இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்"
"இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது"
"இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி"
"இன்றைக்கு நாளைக்கு என்பது இல்லையென்பதற்கு அடையாளம்"
"இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரக்குழியே கைலாசம்"
"இறைத்த கிணறு ஊறும் இறைக்காத கிணறு நாறும்"
"இனம் இனத்தைச் சேரும்"
"இழந்த சந்தர்ப்பம் மீண்டும் வாய்க்காது"
"இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை"
"இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி"
"இல்லாது பிறவாது அள்ளாது குறையாது"
"இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்"
"இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன"
"இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்"
"இன்றைய பங்காளி நாளைய எதிரி"
"இலவமரம் விழுந்து கிடந்தாலும் புல்லை விட உயரமே"
"இல்லை இல்லை என்பான் இடுக்கண்பட்டு அலைவான்"
"இல்லாமல் போனாலும் சொல்லாமல் போகாதே"
"இருப்பவனுக்கு எல்லோரும் உறவு இல்லாதவனுக்கு எல்லோரும் பகை"
"இன்சொல்லால் ஆகாத காரியம் இல்லை"
"இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் வேற நாதி இல்ல."
"இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான்."
"இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை."
"இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்."
"இரக்கப் போனாலும் சிறக்கப் போகணும்"
"இருட்டுக்கு போனாலும் திருட்டுக்கை நிக்காது."
"இருக்குதுன்னா பறக்குதும்பாங்க."
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை."
"இஞ்சி இலாபம் மஞ்சளில்."
"இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்."
"இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு."
"இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை."
"இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்."
"இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது."
"இரக்கப் போனாலும் சிறக்கப் போ."
"இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே."
"இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே."
"இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை."
"இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்."
"இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?"
"இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா."
"இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்."
"இருவர் நட்பு ஒருவர் பொறை."
"இல்லாது பிறாவது அள்ளாது குறையாது."
"இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?"
"இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று."
"இளங்கன்று பயமறியாது."
"இளமையில் கல்."
"இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து."
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து."
"இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்."
"இறங்கு பொழுதில் மருந்து குடி."
"இறுகினால் களி , இளகினால் கூழ்."
"இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்."
"இறைக்கிற ஊற்றே சுரக்கும்."
"இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே."
"இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்."
"இல்லாததற்கே ஏங்கிடும் இதயம்."
"இளமையில் கல்லாதது முதுமையில் வராது."
"இறுதியில் சிரிப்பவனே இடையறாது சிரிப்பான்."
"இக்கரைக்கு அக்கரை பச்சை"
"இரண்டு தவறுகள் ஒரு சரியாகாது."
"இருப்பதா இறப்பதா இதுவே பிரச்சனை."
"இயல்பாய் இரு."
"இருந்தால் இயல்பாய் இரு இல்லாவிட்டால் சும்மா இரு."
"இதயத்தூய்மையே உண்மை அழகு."
"இன்று தொடங்கு என்றும் முடிக்காதே."
"இறைவனுக்கு அஞ்சுவதே விவேகத்தின் தொடக்கம்."
"இனம் இனத்தோடு சேரும்."
"இன்று வீழ்பவன் நாளை எழுவான்."
"இன்றும் என்றும் நல்ல புத்தகம் உத்தம நண்பன்."
"இன்றைய உணவை இன்று எமக்களியுங்கள்."
"இலாபம் இல்லாத வியாபாரம் இனிப்பில்லாத கற்கண்டு."
"இறக்கும் வரையில் ஒருவரையும் மகிழ்ச்சியானவன் என்றழைக்காதே."
"இடையறா மாற்றம் முன்னேற்றத்தின் அறிகுறி"
"இன்பச் சிரிப்பே இல்லத்தின் ஒளி."
"இன்றைய குழந்தைகள் நாளைய மனிதன்."
"இருவர் நட்பு மூவர் கும்பல்."
"இலஞ்சம் கொடாதே உரிமையை விடாதே."
"இறப்பதை விட ஒரு கணம் கோழையாக இருந்து உயிர் பிழைப்பது மேல்."
"இன்பமும் களிப்பும் மிகுந்த நாட்கள் நீண்டவையல்ல."
"இரவில் செய்தது பகலில் தோன்றும்"
"இருண்ட நாளும் இனிது விடிந்திடும் எக்கவலைக்கும் முடிவுண்டு."
"இன்று வருவது நாளை போகும்."
"இறந்தவரை ஏசாதே."
"இடுகாட்டில் உலவும் இறவாச் சமரசம்."
"இலட்சியமே செயலின் அளவுகோல்."
"இன்று செய்ய முடிந்ததை நாளைக்கு ஒத்திப் போடாதே."
"இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரு மணிக்கு சமம்."
"இனிய பண்டங்கள் பல்லுக்கு எதிரி"
"இலட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்."
"இலட்சியம் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்."
"இரத்தம் ஒரே நிறம்."
"இரு தீமைகளில் குறைந்ததைத் தேர்ந்தெடு."
"இன்று வீழ்பவன் நாளை எழவான்"
"இன்று தோற்றவன் நாளை செயிப்பான்."
"இறவாமையின் மெல்லிய நிழலே புகழ்."
"இசைபட வாழ்தலின் ஊதியமில்லை."
"இறைவனுக்கு அஞ்சதலே அறிவின் தொடக்கம்."
"இயன்றதைச் செய்தால் கடவுளட மிகச் சிறந்ததைச் செய்வார்."
"இதயம் இருக்கும் இடமே இல்லம்."
"இல்லத்தினும் சிறந்த நல்லிடம் இல்லை."
"இதயங்கள் இன்றி இல்லம் இல்லை."
"இயல்பலாதன செய்யேல்."
"இரு பக்கத்திலும் இருப்பவன் சாக்."
"இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்."
"இருப்பினும் மனிதன் தான் நேசித்ததையே கொல்லுகிறான்."
"இச்சையால் வருவதே அன்பு."
"இறுதியில் சிரிப்பவனே நன்றாகச் சிரிப்பான்."
"இளமையிற கல் நேர்மையைக் கல்."
"இழக்கத் தயாராக இருப்பதையே கடனாகக் கொடு."
"இறை அச்சமே அறிவின் தொடக்கம்."
"இறைவனே எனது ஒளியும் முக்தியும்."
"இரு எசமானர்களின் கீழ் எவரும் வேலை செய்ய முடியாது."
"இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது"
"இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்"
"இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்"
"இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு"
"இஞ்சி தின்ற குரங்கு போல"
"ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்."
"ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம்."
"ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்."
"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை."
"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்."
"ஈர நாவிற்கு எலும்பில்லை."
"ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது."
"ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்."
"ஈவது விலக்கேல்"
"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்"
"ஈட்டி எட்டின வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும்"
"ஈனன் எச்சிலைக்கு அஞ்சான்"
"ஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பான்"
"ஈனரை அறுத்தால் மானம் அழியும்"
"ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவான்"
"ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்."
"ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்."
"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்."
"ஈர நாவிற்கு எலும்பில்லை."
"ஈ அடிப்பதைத் தவிர எதிலும் அவசரம் கூடாது."
"ஈ யை பிடிக்கும் சட்டம் குளவியைக் கோட்டைவிடும்."
"உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்."
"உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்."
"உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்."
"உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?"
"உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்."
"உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை."
"உடல் ஒருவனுக்கு பிறந்தது , நாக்கு பலருக்கு பிறந்தது ."
"உடுத்தச் சேல இல்லன்னு சின்னாத்தா வீட்டுக்குப் போனா அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்"
"உடுத்திக் கெட்டான் வெள்ளைக்காரன், உண்டு கெட்டான் சோனகன், புதைத்துக் கெட்டான் தமிழன்."
"உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?"
"உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா"
"உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு."
"உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை."
"உடையவன் பாராப்ப பயிர் உருப்படுமா?"
"உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு."
"உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு."
"உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே."
"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே."
"உண்டால் தின்றால் உறவு கொண்டால் கொடுத்தால் உறவு"
"உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்"
"உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்."
"உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது."
"உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்."
"உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்"
"உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்."
"உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி."
"உதட்டில் உறவு உள்ளத்தில் பகை."
"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம்."
"உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு."
"உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்."
"உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது."
"உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை"
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை."
"உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!"
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே"
"உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்."
"உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு."
"உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்"
"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?"
"உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது."
"உயிர் காப்பான் தோழன்."
"உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை,"
"உரம் ஏற்றி உழவு செய்"
"உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?"
"உரலுக்கு சீலை கட்டினாலும் உத்து உத்து பாப்பா னாம்"
"உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்."
"உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை."
"உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய் ."
"உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை."
"உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!"
"உலோபிக்கு இரட்டை செலவு."
"உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்."
"உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல."
"உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை."
"உழுகிறநாளில் ஊருக்கு போய்ட்டு அருக்கிறநாளில் அரிவாள் எடுத்துகிட்டு போனானாம்"
"உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது."
"உளவு இல்லாமல் களவு இல்லை."
"உள்ள அளவும் உப்பிட்டவரை நினை."
"உள்ள புள்ள உரல நக்கிகிட்டு இருந்தப்ப இன்னொரு புள்ளைக்கு திருப்பதி போனாளாம்"
"உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?"
"உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்."
"உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல"
"உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல,"
"உள்ளது போகாது இல்லது வாராது."
"உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத விரோதி போலாகிறான் என்பது கருத்து."
"உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!"
"உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய"
"உள்ளூர் உறவும் சரி உழுத மாடும் சரி"
"உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?"
"உளறுவாயனுக்கு ஊமையனே மேல்."
"உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்."
"உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது."
"உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்."
"உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்"
"உன் சமர்த்திலே குண்டு பாயாது"
"உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி."
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு."
"உடையது விளம்பேல்"
"உத்தமனாய் இரு"
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு"
"உரவோர் என்கை இரவாது இருத்தல்"
"உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்"
"உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது"
"உளுசன் சந்தைக்கு போனா புழுத்த கத்தரிக்காய் ஊடு சேரும்"
"உப்பில்லா பத்தியகாரன் ஊறுகாயை தின்னானாம்"
"உங்கற நாளுல ஊருக்குப் போயி; திங்குற நாளுல தேருக்குப் போன கதை"
"உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு."
"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்"
"உள்ளங்கையும் புறங்கையும் மாதிரி"
"உடையவனே ஒண்ணுமில்லாமல் அலைகிறபோது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டிச்சாம்"
"உள்ளுக்குள்ள இருக்கு உப்புக்கண்டம் நெருப்புக் கண்ட இடம் சுட்டுத் திங்க"
"உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்"
"உடையார் வீட்டு மோருக்கு அகப்பை கணக்கில்லையாம்"
"உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது."
"உற்றார் திண்ணா புத்தா பூடும், ஊரார் திண்ணா பேரா விளங்கும்."
"உணவே மருந்து, உடலே வைத்தியர்."
"உனக்கு கோபமாச்சி, எனக்கு லாபமாச்சி."
"உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு."
"உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது."
"உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யாதே."
"உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது"
"உன் கால நீயே கும்பிடக்கூடாது."
"உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை."
"உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்."
"உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா."
"உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை."
"உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?"
"உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு."
"உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்."
"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே."
"உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்."
"உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது."
"உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்."
"உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்."
"உதட்டில் உறவு உள்ளத்தில் பகை."
"உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்."
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை."
"உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?"
"உயிர் காப்பான் தோழன்."
"உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?"
"உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை."
"உலோபிக்கு இரட்டை செலவு."
"உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை."
"உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது."
"உளவு இல்லாமல் களவு இல்லை."
"உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல"
"உள்ளது போகாது இல்லது வாராது."
"உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய."
"உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?"
"உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது."
"உயர்வாகக் கருதினால் உயர்ந்திட முடியும்"
"உழைக்கக் கற்றபின் பொறுக்கக் கற்க."
"உலகமே மூழ்கினும் நல்லதைச் சரியாகச் செய்."
"உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே."
"உன்னை நேசிப்பவனின் அறிவுரையை தற்போது கொள்ளாவிடினும் பிற்போது கொள்ள அதை எழுதி வைத்திடு."
"உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணுக்கு நோப்பாளம்"
"உண்மை எல்லாம் விள்ள வேண்டாம்."
"உச்சியில் என்றும் ஓர் இடம் உண்டு"
"உன்னால் உதவ முடியும் போதும் உதவ முடியாத போதும் ஒருபோதும் கோபங்கொள்ளதே."
"உருவத்தைப் பார்த்து எடைபோடாதே."
"உரத்துக் கேட்காதவன் மறுப்பைப் பெறுவான்"
"உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது."
"உனக்கு நீ நண்பனாய் இருந்தால் மற்றவர் உன்னை நண்பனாக்கிக் கொள்வர்."
"உணவு மட்டுமே மனிதனை வாழ்விக்காது."
"உணவே இல்லாமைக்கு ஒரு கவளம் மேல்."
"உலகம் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது."
"உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள் படுமோசமானது இனிமேல்தான் இருக்கிறது."
"உடைவதைவிட வளைவதுமேல்"
"உள்ளதைக்கொண்டு திருப்தி அடைந்தவன் உலகத்தில் இல்லை."
"உரையாடல் கலையின் மௌனத்திற்கும் பங்குண்டு"
"உரையாடல் ஒருவரைக் காட்டிக் கொடுத்துவிடும்."
"உரையாடலின் முதற்கூறு உண்மை அடுத்தது நகைச்சுவை."
"உரையாடல் ஒருவனை ஆயத்த மனிதனாக்கும்."
"உண்மை வீரனுக்கு உயிர் வெறும் துரும்பே."
"உறுதிகள் அளித்து ஒன்றும் செய்யாதவன் புதர் மண்டிய பூங்கா."
"உறுதியளித்துத் தாமதப்படுத்துபவன் நன்றி இழப்பான்."
"உழைப்பே ஆரோக்கியம்."
"உழைப்பைப் போல் ஓர் ஆசான் இல்லை."
"உழைப்பும் ஊக்கமும் உண்டாக்கும் திறமையை."
"உழைப்பே அதிர்ச்டத்தின் தாய்."
"உறங்கும் நாய் உறங்கட்டும்"
"உப்பதிகம் உண்டால் துயரதிகம் உண்டாம்"
"உப்புத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்."
"உண்ணுவதை வைத்து உடையவர் யார் என்று கூறிவிடலாம்."
"உண்டு பார்த்தால்தான் உணவின் சுவை தெரியும்."
"உனக்கு செய்யப்பட விரும்புவதைப் போலவே நீ பிறருக்குச் செய்."
"உனக்கு மற்றவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ அதை மற்றவருக்குச் செய்."
"உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை."
"உபதேசம் வழிகாட்டலாம் ஆனால் முன்னுதாரணம் நடத்திச் செல்லும்."
"உயர்வாகப் பார் தாழ்வாக வீழ்."
"உலர்ந்த நிலத்தில் மூழ்குவது முட்டாள்தனம்."
"உலகில் முட்டாள்கள் பாதி அயோக்கியர்கள் மீதி."
"உன்னைத் தவிர எல்லோரையும் மன்னித்துவிடு."
"உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ"
"உண்மையான நண்பனே உன்னதச் சொத்து."
"உண்மை நட்பிற்கு அழிவில்லை."
"உடனே கொடுத்தவன் இருமடங்கு கொடுத்தவனாவான்."
"உள்ளூரில் கஞ்சி குடித்தவன் வெளியூர் சென்று வெறும் தண்ணீர் குடித்தானாம்."
"உலக வரலாறு என்பது மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறே."
"உடல்நலம் உயர் செல்வம்"
"உடல்நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்றுத்தரும்."
"உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள்."
"உடல்நலமே மகிழ்ச்சி"
"உடல்நலத்துடன் இருக்கையிலேயே நோய் பற்றிப் படி."
"உடன் உதவுதலே உதவி தாமதித்த உதவி உதவியன்று."
"உயிர் இருக்கும் வரை நம்பிக்கையும் இருக்கும்."
"உயிரில்லாதவனே குறையில்லாதவன்."
"உச்சிமீது வான் இடிந்து வீழினும் நீதியை நிலைநாட்டு."
"உழைக்கக் கற்போம் காத்திருக்கவும் கற்போம்."
"உழைப்பே வழிபாடு உழைப்பே ஆராதனை."
"உண்மை வெற்றி உழைப்பிற்கே."
"உழைப்பைத் துருப்பிடிக்க வைக்காதே."
"உழைப்பே அனைத்தையும் வெல்லும்."
"உடைக்கப்படவே ஏற்பட்டது சட்டம்."
"உன் தவறுகளிலிருந்து நீ கற்றுக்கொள்."
"உடல் சிறியராயினும் மனம் பெரியர்"
"உணர்ச்சிமிக்க காதல் அவசரப் பழி தீர்த்தல்."
"உணவும் மதுவும் இன்றி காதல் இல்லை."
"உன் அதிர்ச்டம் உனக்கு தெரியாது தன் அதிர்ச்டம் தனக்குத் தெரியாது."
"உணவு முக்கியம் நடத்தை அதைவிட முக்கியம்."
"உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு"
"உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா"
"உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்"
"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா"
"உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு"
"உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது"
"ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல."
"ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்."
"ஊசி முனையில் மூன்று குளம்"
"ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன் பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்"
"ஊசியின் காதிலே ஒட்டகம் நுழையுமா?"
"ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்."
"ஊண் அற்றபோது உடலற்றது."
"ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்."
"ஊமை சொப்பனம் கண்டாற் போல.."
"ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு"
"ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு."
"ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?"
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்."
"ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்."
"ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு."
"ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?"
"ஊர் வாயை மூட உலைமுடி இல்லை."
"ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்?"
"ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே."
"ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே."
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்."
"ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே."
"ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?"
"ஊரு மெச்சும், உள்வீடு பட்டினி"
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி"
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி."
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி."
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?"
"ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே."
"ஊருடன் ஒட்டி வாழ்."
"ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்."
"ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்."
"ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்."
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்."
"ஊக்கமது கைவிடேல்"
"ஊருடன் கூடிவாழ்"
"ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்"
"ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு"
"ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்"
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்."
"ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி."
"ஊராங் கோழியை அறுத்து உம்மா பேர்ல பாத்திகா ஓதிட்டான்"
"ஊருக்கு வண்ணப்பெட்டி. வூட்டுக்குப் பீத்தப்பெட்டியாச்சே"
"ஊருக்கு ராஜான்னாலும் அம்மாவுக்கு பிள்ளைதான்"
"ஊருக்கு பொது, ஏரிக்கு மதகு"
"ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்."
"ஊரான் போவ பலபட்டர நீ ஏன் தெண்டம் கொடுக்க?"
"ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், ஊட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன்."
"ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்."
"ஊர அடிச்சி உலையில போடாதே."
"ஊரெல்லாம் சுட்டு ஒடம்ப புண்ணாக்கிக்காதே."
"ஊரார் பேச்சைக் கேட்டால் உள்ளதும் போயிடும்."
"ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்."
"ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்."
"ஊண் அற்றபோது உடலற்றது."
"ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு."
"ஊர் வாயை மூட உலைமுடி இல்லை."
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"
"ஊருடன் ஒட்டி வாழ்."
"ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்."
"ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்."
"ஊருடன் ஒத்து வாழ்."
"ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடிவரும்."
"ஊரோடு ஒத்து வாழ்ந்தால் ஊரார் உயர்வாய் மெச்சுவர்."
"ஊன் விற்ற காசு நாறாது."
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்"
"ஊரோடு ஒத்து வாழ்"
"ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்"
"ஊரான் போவ பலபட்டர ஏன் தெண்டம் கொடுக்க"
"ஊருக்கு பொது, ஏரிக்கு மது"
"எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை"
"எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல."
"எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்."
"எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?"
"எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்."
"எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு."
"எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?"
"எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?"
"எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?"
"எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே."
"எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்..(விடாதே!)"
"எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டுப் பணியாரம் முட்டுத் தேயச் சுட்டவளுக்கு மூணு பணியாரம்"
"எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?"
"எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது."
"எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்."
"எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்."
"எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு."
"எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!"
"எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்காதே!"
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,"
"எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்."
"எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!"
"எண்ணறக்கற்று எழுத்தறப் படித்தாலும், பெண்புத்தி பின்புத்திதான்!"
"எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி."
"எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை."
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்."
"எண்ணெய் கொடமும் கொறைய கூடாது,புள்ள தலையும் காயகூடாதுன்னானாம்"
"எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?"
"எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு."
"எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?"
"எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்."
"எத்தனைதரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான்."
"எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்."
"எத்துல புள்ள பெத்து எறவானத்துல தாலா ட்டுனாளாம்."
"எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?"
"எதார்த்தவாதி வெகுசன விரோதி."
"எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்."
"எதிரிக்கு எதிரி நண்பன்."
"எதிரிக்குச் சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல."
"எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்."
"எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா"
"எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா."
"எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?"
"எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?"
"எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்."
"எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்."
"எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்."
"எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?"
"எரியும் பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதைப்போல..."
"எருது நோய் காக்கைக்கு தெரியுமா?"
"எருது புண்ணு காக்கைக்குத் தெரியுமா?"
"எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே."
"எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல."
"எருவிலும் வலியது உழவே"
"எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்."
"எல்லாம் தெரிஞ்ச சாமியாரு பனங்கொட்டைய கரடி முட்டைனராம்"
"எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!"
"எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!"
"எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது"
"எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?"
"எலி அழுதால் பூனை விடுமா?"
"எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்."
"எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்."
"எலிக்கறி உடம்புக்கு நல்லதுன்னு பூனை சொல்லுச்சாம்."
"எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்"
"எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போல..(வைத்துக்கொள்ளுவார்களா?)"
"எலும்புகடிக்கிற நாய் இரும்பைக்கடிக்குமா?"
"எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி."
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."
"எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்."
"எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?"
"எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்."
"எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்"
"எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது"
"எள் எண்ணெய்க்கு காயுது எலிப் புழுக்கை எதுக்குக் காயுது"
"எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்."
"எள் என்றால் எண்ணெயாக நிற்பான்/இருப்பான்!"
"எள்ளு எண்ணெய்க்குக் காயுது எலிப்புழுக்கை எதுக்குக் காயுது"
"எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?"
"எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு."
"எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?"
"எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்."
"எள்ளூ என்கிறதற்குமுன்னே எண்ணெய்கொண்டு வருகிறான்."
"எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி."
"எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்"
"எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்."
"எளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு."
"எறும்பு ஊர கல்லுந் தேயும்."
"எறும்பு முட்டைகொண்டு திட்டை ஏறின் மழைவரும்"
"எறும்புந் தன் கையால் எண் சாண்"
"எறும்பூரக் கல்லும் தேயும்."
"என்றைக்கும் இல்லாத திருநாளாக....(சொலவடை)"
"என்னதான் நெருக்கமாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்தாலும் அவரவர் தேவைகள் வேறுவேறானவை/ மாறுபட்டவை...ஒருவர் தன்பசிக்கு உணவு உண்டால் மற்றவர் வயிறு நிறைந்து அவர் பசி அடங்காது என்றுப்பொருள்..."
"என்னமோ சொன்ன கதையில எலி ரவிக்கை கேட்டுச்சாம் சபையில"
"என்னைக்கும் சிரிக்காதவ சந்தைல சிரிச்சமாதிரி"
"எறும்பு ஊர கல்லும் தேயும்"
"எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு"
"எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்"
"எல்லாம் அவன் செயல்"
"என்றைக்கு அலை ஓய்வது என்றைக்கு தலைமுழுகுவது"
"எண் எழுத்து இகழேல்"
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்"
"எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்"
"எலிக்கு மரண வலி பூனைக்குக் கொண்டாட்டம்"
"எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலியில போய் சிரிச்சுதாம்"
"எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா"
"எள்ளுதான் எண்ணைக்கு காயுதுன்னா, எலிபுழுக்கை எதுக்கு காயுது"
"எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்"
"எட்டு மிளகு இருந்தா எதிரி வீட்டுலயும் சாப்புடலாம்."
"என்னெயும் தூக்கிவிட்டு என் கோவணத்தயும் கட்டிவிட்டா எட்டாள் வேல செய்வன்னு சொன்னானாம்"
"எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமல் செய்கிறவன் மட்டி"
"எடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்"
"எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்."
"எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது?"
"எறும்பும் தன் கையால் எண் ஜான்."
"எள்ளுன்னா எண்ணையா நிக்கணும்"
"என்னைக்கும் போடாத மகராசி இன்னைக்கு போட்டா என்னைக்கும் போட்டத் தேவுடியா இல்லன்னுட்டா."
"எரியிற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி."
"என்னைக்கும் சிரிக்காதவ திருநாளுல சிரிச்சாளாம்."
"எண்ணெய் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்."
"எட்டாம் பொறவு எட்டிப் பாத்தா வீடு குட்டிச் செவுரு."
"எழுதாத குறை அழுதாலும் தீராது."
"எலும்பு உடைந்தால் கூடும், மனசு உடைந்தால் கூடுமா?"
"எல்லாரும் அம்மணக் கட்டையா போற எடத்துல கோமணம் கட்டிட்டு போறவன் முட்டாள்."
"எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு."
"எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?"
"எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு."
"எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே."
"எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?"
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,"
"எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்."
"எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்."
"எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி."
"எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை."
"எண்ணை முந்துதோ திரி முந்துதோ?"
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்."
"எதார்த்தவாதி வெகுசன விரோதி."
"எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்."
"எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்."
"எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?"
"எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்."
"எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா."
"எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?"
"எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்."
"எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்."
"எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்."
"எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?"
"எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே."
"எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?"
"எலி அழுதால் பூனை விடுமா?"
"எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்."
"எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்"
"எலி வளையானாலும் தனி வலை வேண்டும்."
"எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?"
"எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?"
"எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?"
"எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்."
"எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்."
"எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி."
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."
"எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி."
"எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்."
"எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்."
"எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு."
"எறும்பு ஊர கல்லுந் தேயும்."
"எறும்புந் தன் கையால் எண் சாண்."
"எதிர்பாராததைத் தவிர எதுவும் சதமல்ல."
"எதையும் தாங்கும் இதயமே சிறந்தது"
"என் முதுகைச் சொறிந்தால் உன் முதுகைச் சொறிந்து விடுவேன்"
"எருது இறைப்பதை விட அழகு அதிகம் இறைத்துவிடும்."
"எல்லாவற்றையும் நம்புபவன் முட்டாள்."
"எல்லாம் நன்மைக்கே."
"என்றும் இறவாதது நூல்கள் ஒன்றே."
"எண்ணெய் எண்ணெயுடனே கலக்கும் வியாபாரம் வியாபாரத்துடனேயே கலக்கும்."
"எலும்புந் தோலுமாய்க் குழந்தையை வளர்க்காதே."
"எல்லாத் தாய்க்கும் தன் குழந்தையே அழகு."
"எளிய இதயங்களுக்கே எளிய ஆசைகள்."
"எளியாரை வாட்டுபவன் எப்போதும் கோழையே."
"எலும்பு ஒடியப் பணி செய்தால் பல் ஒடியத் தின்னலாம்."
"எல்லோரையும் திருப்திப்படுத்திட முடியுமா"
"எசமான் தூங்கு மூஞ்சியானால் வேலைக்காரன் மட்டி."
"எல்லோரிடமும் கேள் சிலருக்கு மட்டும் கூறு"
"எலி போல் தோன்றும் பகைவனையும் புலிபோல் எண்ணு."
"எல்லாப் பெண்களும் இருட்டினில் ரதியே."
"எல்லாக் கேடுகளின் மூலமும் பணமே."
"எங்கு சென்றாலும் நயன பாசை ஒன்றே."
"எல்லைப்புறக் கோட்டையும் அழகிய மனைவியும் சண்டையை உண்டாக்கும்."
"எழுவதற்கே வீழ்கிறோம் மேலும் நன்றாக் முயலவே தோல்வியடைகிறோம் விழிக்கவே உறங்குகிறோம்."
"எந்தப் பிரசாரமும் நல்ல பிரசாரமே."
"எரியும் வீட்டை அணைக்கக் கிணறு தோண்டுவது போல."
"எளிதில் முட்டாளாகுபவன் அயோக்கியனின் கருவி."
"எல்லாம் போனவர்க்கும் எதிர்காலம் உண்டு."
"எதிர்காலம் தற்காலத்தால்தான் வாங்கப்படுகிறது."
"எந்தப் பெரிய மனிதனும் பயனின்றி வாழ்வதில்லை."
"எல்லா உவகையும் உள்ளத்தின் உள்ளே."
"எதிர்ப்பை வரவேற்பதில் முந்து."
"எவனும் தன் மனைவிக்கு வீரனல்ல."
"எவனும் தன் தாதனுக்கு வீரன் இல்லை."
"எலி வளை ஆனாலும் தனி வளை நன்று."
"எல்லாக் கணவர்களும் ஒரே மாதிரிதான். ஆனால் முகங்கள் வெவ்வேறு இதனால் தான் அவர்களைப் பிரித்துக் கூற முடிகிறது."
"எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு எதுவும் சரியாகத் தெரியாது."
"எல்லாம் இழந்தபின் என்னைக் கண்டேன்."
"எவன் நன்கு தண்டிக்கிறானோ அவனே நன்கு காதலிப்பான்"
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது."
"ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது"
"ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை."
"ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை."
"ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்."
"ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்."
"ஏரி நிறைந்தால் கரை கசியும்."
"ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)"
"ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்."
"ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்."
"ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை"
"ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத்தலைச்சுமை."
"ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்."
"ஏழை என்றால் எவர்க்கும் எளிது"
"ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்."
"ஏழைக்கேத்த எள்ளுருண்டை."
"ஏழைபேச்சு அம்பலம் ஏறாது"
"ஏழையின் சொல் அம்பலம் ஏறாது."
"ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்."
"ஏற்கனவே மிகச்சிறந்த விடயங்களுக்கு, அலங்காரம் தேவையில்லை என்னும் பொருள்..."
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்."
"ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்."
"ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்."
"ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை."
"ஏற்றவன் குண்டிய எட்டனமுட்டும் தாங்கலாம்"
"ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம்."
"ஏற்பது இகழ்ச்சி"
"ஏவா மக்கள் மூவா மருந்து"
"ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்"
"ஏழை சொல் அம்பலம் ஏறாது"
"ஏந்தி ஏந்தி வளத்துனாலும் இளையகுடி புள்ள; தாங்கி தாங்கி வளத்துனாலும் தங்கச்சி புள்ள"
"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்."
"ஏழைக்கேத்த எள்ளுருண்டை."
"ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறாது."
"ஏறி விழுந்து போனவளே ஆதங்கத்த தோத்தவளே!"
"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் ஆள்."
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது."
"ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை."
"ஏரி நிறைந்தால் கரை கசியும்."
"ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்."
"ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்."
"ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை."
"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்."
"ஏழைபேச்சு அம்பலம் ஏறாது."
"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்."
"ஏற்றம் உயர உயர இறக்கம் அதிகம் அதிகம்."
"ஏனென்று கேட்காவிட்டால் எடுத்து எறிந்து போடுவார்கள்."
"ஏற்பதைவிட இடுவது சிறப்பு"
"ஏமாற்றுபவனுக்கு வாய் சர்க்கரை கை பொக்கரை."
"ஏமாற்றுபவனை ஏமாற்றுதல் ஏமாற்றன்று."
"ஏதேனும் ஆதாயம் இல்லாமல் பெறு நட்டம் இல்லை."
"ஏழையின் கஞ்சி நம்பிக்கையில் இருக்கிறது."
"ஏதேனும் செய்வதைவிட எதுவும் செய்யாதிருப்பது கடினமானது."
"ஏதும் செய்யாதவனே தவறு செய்யாதவன்."
"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"
"ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு."
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
"ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்."
"ஐப்பசி அடை மழை."
"ஐம்பதிலும் ஆசை வரும்"
"ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது"
"ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?"
"ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்."
"ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல."
"ஐயம் இட்டு உண்"
"ஐயம் புகினும் செய்வன செய்"
"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி."
"ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு."
"ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?"
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா"
"ஐயமுறுதலே அறிவின் திறவுகோல்."
"ஐயமே அறிவின் திறவுகோல்."
"ஐந்து வயதில் அறியாதவன் பதினைந்தில் முட்டாளாவான்."
"ஒட்டக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல."
"ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்."
"ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்."
"ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று."
"ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!"
"ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்."
"ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது."
"ஒரு காசு பேணின் இரு காசு தேறும்"
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு."
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்."
"ஒரு குடம்பாலுக்கு ஒரு துளிஉறை."
"ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?"
"ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க."
"ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?"
"ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?"
"ஒரு சுருட்டுப் பத்து நாள் பிடிப்பான்"
"ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை"
"ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?"
"ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?"
"ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது ."
"ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது."
"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்."
"ஒரு பிரச்சினையை மிகுந்த சிரமப்பட்டு போக்கிக்கொள்ளும்போது நம்மை அறியாமலேலே மற்றொரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும்போது பயன்படுத்தப்படும் பழமொழி...ஒரு பிரச்சினையை வெகு எச்சரிக்கையாக பின்/எதிர் விளைவுகளை யோசித்துக் கையாளவேண்டும் என்பதை உணர்த்தும்..."
"ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்."
"ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்."
"ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி."
"ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்."
"ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?"
"ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?"
"ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்."
"ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்."
"ஒருவர் தூங்கும்போது எந்தத் திசையில் தலையை வைத்துத் தூங்கவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது..."
"ஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்"
"ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை."
"ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்"
"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்."
"ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று."
"ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை."
"ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!"
"ஒற்றுமையே பலம்."
"ஒற்றைக் காலில் நிற்கிறான்."
"ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?"
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று)......."
"ஒப்புரவு ஒழுகு"
"ஒன்னாரைத் தேறேல்"
"ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு"
"ஒத்த இடத்து நித்திரை கொள்"
"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
"ஒண்ணு விதைக்க மூணு முளைக்க."
"ஒரு நாக்கு ஒரு சொல்லு"
"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்"
"ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்"
"ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும்."
"ஒப்புக்கு சின்னாத்தா உறவுமுறைக்கு நெய் வார்த்தா."
"ஒரு கை ஓசை போல."
"ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம்; உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம்."
"ஒன்னுன்னா ஒன்பதா சொல்வாங்க."
"ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்."
"ஒரு காசு பேணின் இரு காசு தேறும்."
"ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்."
"ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?"
"ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?"
"ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை."
"ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?"
"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்."
"ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்."
"ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்."
"ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்."
"ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை."
"ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று."
"ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!"
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
"ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை."
"ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்."
"ஒவ்வொரு விழுமிய செயலும் பழுதின்றி நிற்கும்."
"ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்."
"ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடுகள் இருக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் வம்பர்கள் இருப்பர்."
"ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் தின்றால் ஓட வேண்டாம் வைத்தியரிடம்."
"ஒரு போதும் செய்யாதிருப்பினும் தாமதமாகச் செய்வது மேல்."
"ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தல்."
"ஒருமுறை கடித்தால் இருமுறை தயக்கம்."
"ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு."
"ஒரே சமயத்தில் முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே."
"ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு."
"ஒருமுறை அயோக்கியன் எப்போதும் அயோக்கியன்."
"ஒவ்வொரு கல்லையும் அறுக்கும் வைரக்கல்லே நற்குணம்."
"ஒவ்வோர் இன்னலும் மின்னல் கீற்றென நன்மை கொண்டது."
"ஒருபோதும் தற்பெருமையைப் பீற்றாதே குழந்தையிலிருந்து உன்னைஅறிந்தவர் அங்கு எதிர்ப்படக் கூடும்."
"ஒரு கூடைப் பழத்திற்கு ஒரு அழுகல் போதும்."
"ஒரு கண்ணால் அழு மறு கண்ணால் சிரி."
"ஒவ்வொரு கல்லுக்கடியிலும் ஒவ்வொரு தேளிருக்கும்."
"ஒருமுறை கடனாளி எப்போதும் கடனாளி"
"ஒருமுறை கடன்பட்டால் எப்போதும் கடனாளி."
"ஒருமுறை ஏமாற்றுபவன் எப்போதும் சந்தேகிக்கப்படுவான்."
"ஒருவன் விரும்பாததை மற்றவன் விரும்புவான்."
"ஒரு ஊருக்குப் போகப் பல வழி உண்டு."
"ஒவ்வொரு தம்பதியும் சோடியாகாது."
"ஒவ்வவொரு காலுக்கு ஒவ்வொரு காலணி."
"ஒருவருக்கும் நிச்சயமாய்த் தெரியாததை சந்தேகப்படாதே."
"ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் உலகத்தில் போர் இல்லை."
"ஒரு தவறுக்கு அடி பணிந்தால் மற்றொன்றைக் கூட்டி வரும்."
"ஒரு பெண்ணின் நம்பிகைகையைப் பெறக் கற்றுக்கொள்."
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே."
"ஒன்றாக வழிபடும் குடும்பம் ஒரு நாளும் பிரியாது."
"ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடு ஒன்று உண்டு"
"ஒவ்வொரு குடும்பத்திலும் ஒழுங்கீனன் இருப்பான்."
"ஒரு தந்தை பத்து குழந்தைகளைப் பேணும் அளவுக்குப் பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேண முடியாது."
"ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு பாதி பரிகாரமாகும்."
"ஒரு பாராட்டுக் கடிதம் இன்னொன்றையும் கேட்கும்."
"ஒரு மலர் மாலையாகாது"
"ஒருவனது நட்டம் மற்றவனது இலாபம்."
"ஒன்றும் இல்லாததற்கு அரை ரொட்டி மேல்."
"ஒரு விருந்து ஒரு வீடு அது தரும் நிம்மதியான மகிழ்ச்சி."
"ஒரு தீமையிலிருந்து பிறக்கும் பல தீமைகள்."
"ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் உண்டு."
"ஒரே ஒரு கோட்டு வைத்திருப்பவன் அதைக் கடன் கொடுக்க முடியாது."
"ஒரு பொய்யை மெய்யாக்கப் பல பொய் வேண்டும்."
"ஒன்று நிச்சயம் வாழ்க்கை பறக்கிறது மீதி அனைத்தும் பொய்யே."
"ஒளி இருக்கையில் நட இல்லையேல் இருள் சூழ்ந்துவிடும்."
"ஒளி இருளில் ஒளிர்கிறது இருள் அதைப் புரிந்துகொள்வதில்லை."
"ஒருபோதும் மறக்காதவனே நன்கு காதலிப்பவன்."
"ஒரு திருடன் இன்னொரு திருடனிடம் திருடமாட்டான்."
"ஒரு கிலோ ஞானத்தைவிட ஒரு கிராம் அதிர்ச்டம் மதிப்பானது."
"ஒருமுறை மட்டுமே மனிதன் இறப்பான்."
"ஒற்றைக் காலில் நிற்கிறான்"
"ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க"
"ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று"
"ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை."
"ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்."
"ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!"
"ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்"
"ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி."
"ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்."
"ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை."
"ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி."
"ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்...."
"ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு."
"ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்."
"ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!"
"ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்."
"ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?"
"ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே."
"ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல ."
"ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு."
"ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி."
"ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு"
"ஓதுவது ஒழியேல்"
"ஓரஞ் சொல்லேல்"
"ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்"
"ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்"
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்"
"ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி"
"ஓணானோட ஓட்டம் வேலி வரைக்குந்தான்."
"ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?"
"ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்."
"ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி."
"ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்."
"ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு."
"ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி."
"ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்."
"ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே."
"ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி."
"ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு."
"ஓயா வேலை தீராச் சோர்வு."
"ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி."
"ஓடும் குதிரைக்குத் திறந்த கல்லறை."
"ஓதக்கோள் நாளையினும் வாதக்கோள் இல்லை இனிது."
"ஓடையில் நீர் குடிக்கும்பொழுது ஊற்றை நினை"
"ஔவியம் பேசேல்"
"ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு"
"கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?"
"கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?"
"கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை."
"கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் ."
"கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்."
"கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்."
"கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது."
"கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல."
"கட்டிக்கொடுத்த சாப்பாடும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் பல நாள் தாங்காது"
"கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்."
"கட்டியாத் திங்குறத கரைச்சுக் குடிச்சா போதும்"
"கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை."
"கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு."
"கடமை கண் போன்றது"
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே."
"கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?"
"கடல் திடலாகும், திடல் கடலாகும்."
"கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?"
"கடல் வத்தட்டும் காத்து கொடல் வத்தி செத்துசாம் கொக்கு"
"கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு."
"கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!"
"கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!"
"கடலுக்குக் கரை போடுவார் உண்டா?"
"கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை."
"கடவுளே கட்ட வண்டில போறப்ப பூசாரி புல்லட்டு பைக் கேட்டாராம்"
"கடவுளை நம்பினோர் கைவிடப் படார்."
"கடன் இல்லா கஞ்சி கால் வயிறு."
"கடன் பட்டார் நெஞ்சம் போல..."
"கடன் வாங்கிக்கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக்கைவிட்டனும் கெட்டான்."
"கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி."
"கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை."
"கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்."
"கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்."
"கடுகு சிறிதானாலும் காரம் பெரிது."
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"
"கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?"
"கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது."
"கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்."
"கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்."
"கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்."
"கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல."
"கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது."
"கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?"
"கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!"
"கண் கண்டது கை செய்யும்."
"கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?"
"கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்."
"கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்."
"கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்."
"கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்."
"கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்."
"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்"
"கண்டது சொன்னால் கொண்டிடும் பகை."
"கண்டதே காட்சி கொண்டதே கோலம்."
"கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்."
"கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு."
"கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்."
"கண்டால் காமாட்சி, காணாவிட்டால் மீனாட்சி."
"கண்ணடிச்சு வராத பொம்பள கையப்படிச்சு இழுத்தா வரவா போறா?"
"கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல"
"கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்."
"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்."
"கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?"
"கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?"
"கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது."
"கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு."
"கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல!"
"கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்."
"கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்."
"கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்."
"கதிரவன் சிலரை காயேன் என்குமோ?"
"கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே"
"கந்தையானாலும் கசக்கிக் கட்டு."
"கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்."
"கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே."
"கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி."
"கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி"
"கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு."
"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்."
"கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக."
"கரட்டுக் கட்டைக்கு முரட்டுக்கோடாரி"
"கரணம் தப்பினால் மரணம்."
"கரிச்சான் காவடி எடுதுச்சாம் வேல் மயில் சொல்ல தெரியாம வேலிக்குள் பூந்துச்சாம்"
"கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?"
"கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !?"
"கருப்பட்டிப் பானைக்குள்ள கையைவிட்டவன் நாக்குட்டு நக்காம டவுசர்லயா தொடப்பான்?"
"கருப்பே அழகு காந்தலே ருசி!"
"கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்."
"கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்"
"கரும்பு தின்ன கூலி வேண்டுமா?"
"கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?"
"கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?"
"கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று."
"கரும்பை விரும்ப விரும்ப வேம்பு."
"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்."
"கல் என்பது தோசைக்கல்லைக் குறிக்கும்..தலை என்பது ஆள்/நபர்...சாப்பிட ஆள் இருந்தால் மட்டுமே கல்லைப் போட்டு தோசை சுடு அதாவது தேவை/அவசியம் இல்லாமல் செலவு செய்யாதே என்னும் பொருள்..."
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!"
"கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?"
"கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்"
"கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல"
"கல்யாண வீட்டுல பாத்தாலே கட்டிக்கிட்டு அழுகிறவன் எழவு வீட்ட கண்டா என்ன செய்யமாட்டான்"
"கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்."
"கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்"
"கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!!"
"கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி."
"கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே."
"கல்லாதவரே கண்ணில்லாதவர்."
"கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்."
"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்"
"கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன்."
"கல்வி அழகே அழகு."
"கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு."
"கல்விக்கு அழகு கசடர மொழிதல்."
"கல்விக்கு இருவர், களவுக் கொருவர்."
"கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது."
"கழுத கோபம் கத்துனா தீரும்"
"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்காத"
"கழுதப் புண்ணுக்கு தெருப் புழுதிதான் மருந்து"
"கழுதை அறியுமா கற்பூர வாசனை?"
"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்."
"கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது."
"கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்."
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
"கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்."
"கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல."
"கள் குடித்த குரங்கு போல ..."
"கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்."
"களவுக்குப் போறவன் தும்பக் கூடாது, கடை வச்சவன் தூங்கக் கூடாது."
"களவும் கத்தும் மற"
"களவும் கற்று மர"
"களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள்."
"கள்ள மனம் துள்ளும்."
"கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!"
"கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்."
"கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்."
"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே."
"கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!"
"கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை!"
"கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்."
"களை பிடுங்காப் பயிர் காற்பயிர்."
"கறக்குறது உழக்கு பாலு ,உதை பல்லு போவ"
"கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு."
"கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ."
"கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு (ஔவையார்)"
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு."
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு."
"கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது."
"கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?"
"கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?"
"கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?"
"கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?"
"கனிந்த பழம் தானே விழும்."
"காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல."
"காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்"
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு"
"காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்."
"காகம் திட்டி மாடு சாகாது."
"காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்."
"காகிதப்பூ மணக்காது."
"காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்."
"காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்."
"காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம்."
"காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்."
"காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்."
"காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?"
"காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?"
"காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்."
"காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?"
"காணி ஆசை கோடி கேடு."
"காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்"
"காதலி சுட்டால் எதிரி மடியில் மரணம்"
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"
"காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்."
"காப்பு சொல்லும் கை மெலிவை."
"காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்."
"காய்ச்சுவார் காய்ச்சினால் கழுத மூத்திரம் கூட நல்லாயிருக்கும்"
"காய்த்த மரம்தான் கல்லடிபடும்"
"காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி.."
"காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது."
"காரண குரு, காரிய குரு."
"காரண குருவே காரிய குரு!"
"காரணம் சொல்பவன் காரியம் செய்யான்"
"கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை"
"காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?"
"காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி."
"காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம்."
"காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!"
"காலம் செய்கிறது ஞாலம் செய்யாது."
"காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ?"
"காலம் பொன் போன்றது"
"காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்"
"காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா."
"காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை."
"காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை."
"காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்."
"காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து."
"காலைக் கல்; மாலைப் புல்."
"காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது."
"காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்"
"காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!"
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்"
"காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே."
"காற்றில்லாமல் தூசி பறக்குமா?"
"காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்."
"காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்."
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"
"கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடுமாம்"
"கிட்டாதாயின் வெட்டென மற"
"கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!"
"கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்."
"கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது."
"கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?"
"கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி"
"கிரீடம் அரசனுக்கு மட்டுமே சொந்தம்."
"கிழவியும் காதம், குதிரையும் காதம்."
"கீர்த்தியால் பசி தீருமா?"
"கீறி ஆற்றினால் புண் ஆறும்."
"குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?"
"குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை."
"குஞ்சுக் கோழி ஆனாலும் குனிந்து அறுக்க வேண்டும்"
"குட்டக்குட்ட குனியாதே.."
"குட்டி செத்தா குடியா முழுகப்போகுது?"
"குட்டி யானையும் குட்டயக் கலக்கும்."
"குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்."
"குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்."
"குடல் கூழுக்கு அழுவுது கொண்ட பூவுக்கு அழுவுதாம்"
"குடி குடியக் கெடுக்கும்."
"குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?"
"குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்."
"குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு."
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு."
"குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு."
"குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது."
"குண்டி கொள்ளாம கோவணம் கட்டுனாப்ல."
"குண்டு போனவிடத்தில் குருவி நேர்ந்தது"
"குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்."
"குண்டுபட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்."
"குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று."
"குண்டுமில்லாமல் மருந்துமில்லாமல் குருவி சுடலாமா?"
"குணத்தை மாற்றக் குருவில்லை."
"குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை."
"குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று."
"குத்துக் கல்லுக்கு குளிரா காய்ச்சலா"
"குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்."
"குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது."
"குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!"
"குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை."
"குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?"
"குதிரை நல்லதுதான், சுழி கெட்டது."
"குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்."
"குந்தித் தின்றால் குன்றும் மாளும்!"
"குந்தித் தின்றால் குன்றும் மாளும்."
"குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை."
"குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம்."
"குப்பை உயரும் கோபுரம் தாழும்."
"குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?"
"குப்பையிற்கிடந்தாலும் குன்றிமணி நிறம்போகுமா?"
"குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்."
"கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா?"
"கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம்."
"கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல."
"கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........"
"கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு."
"குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது."
"குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை ."
"குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன் மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்"
"குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன் மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன் அதுக்கு மேல ஒண்ணுமில்ல"
"குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்."
"குரங்கின் கைப் பூமாலை."
"குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?"
"குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல...."
"குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்!"
"குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது."
"குரங்குப்புண் ஆறாது."
"குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை."
"குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை."
"குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை."
"குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்."
"குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?"
"குருவிக்கேத்த ராமேஸ்வரம்."
"குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல."
"குரைக்கிற நாய் கடிக்காது."
"குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது."
"குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?"
"குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது."
"குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல"
"குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே"
"குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி."
"குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து"
"குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது."
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே."
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே."
"குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல...."
"குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?"
"குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது."
"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை"
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை."
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்கும்."
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்"
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்."
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்."
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்:"
"குறி வைக்க ஏற்ற ராம சரம்"
"குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்"
"குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது."
"குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது."
"குறைந்த வயிற்றிற்கு கொள்ளுமாம் பலாக்காய்"
"குறையச் சொல்லி , நிறைய அள."
"குனிய குனியத்தான் குட்டு விழும்."
"குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்."
"கூடாநட்பு கேட்டில் முடியும்."
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை."
"கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்."
"கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்."
"கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன்"
"கூத்தியா ஒடம்பா கொள்ளை போவ போவுது"
"கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)"
"கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்."
"கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்."
"கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?"
"கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்."
"கூழானாலும் குளித்துக் குடி."
"கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு."
"கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்."
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
"கூழும் சிந்தல, கோப்பையும் உடையல"
"கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே."
"கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே."
"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்."
"கெட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தன நாளைக்கு"
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்."
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு."
"கெட்டும் பட்டணம் சேர்"
"கெடுக்கினும் கல்வி கேடுபடாது"
"கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது"
"கெடுவான் கேடு நினைப்பான்"
"கெண்டையைப் போட்டு வராலை இழு."
"கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்."
"கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்."
"கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல."
"கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?"
"கேட்பார் இல்லாவிட்டால் தம்பி சண்டபிரசண்டனாம்!"
"கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே."
"கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?"
"கேழ்வரகுல நெய் வடியும்னா கேக்குறவுனுக்கு புத்தி எங்க போச்சு"
"கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்."
"கேள்விப் பேச்சு மூளா நெருப்பு"
"கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை."
"கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்."
"கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை."
"கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா"
"கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்"
"கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?"
"கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?"
"கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி."
"கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்"
"கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?"
"கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்"
"கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்."
"கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை"
"கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்"
"கையிலே காசு வாயிலே தோசை"
"கையூன்றிக் கரணம் போடவேண்டும்."
"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"
"கொசு அடிக்க கோடரி வேண்டுமா?"
"கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்"
"கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்."
"கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது."
"கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?"
"கொடலு கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்"
"கொடிக்கு காய் கனமா?"
"கொடுக்கப்பட்ட வேலையை எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகச்சிறப்பாக செய்வான்/செய்யக்கூடியவன் என்றுப் பொருள்... நல்லெண்ணெய் தேவைப்படுபவன் எள்ளைப் பார்த்தவுடன் அது எண்ணெயாக மாறிவிட்டால் எப்படியோ, அப்படி எனக் கொள்ளவேண்டும்"
"கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக."
"கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்."
"கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது."
"கொடுங்கோலன் ஆட்சியிலே அம் என்றால் சிறை வாசம், உம் என்றால் வனவாசம்."
"கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை."
"கொண்டவன் சரியா இருந்தா கூரெ ஏறிக்கூட சண்டெ போடலாம்"
"கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு."
"கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர் கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்."
"கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?"
"கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?"
"கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல."
"கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்."
"கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?"
"கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு!"
"கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது."
"கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் ."
"கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?"
"கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்."
"கொன்றால் பாவம், தின்றால் போகும்."
"கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை."
"கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு."
"கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்"
"கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்"
"கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்"
"கோடி வித்தையும் கூழுக்குத்தான்"
"கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது."
"கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு."
"கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு."
"கோபம் சண்டாளம்."
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"
"கோபுர தரிசனம் பாப விநாசம்"
"கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!"
"கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது"
"கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?"
"கோல் ஆட, குரங்கு ஆடும்."
"கோல் உயரக் குடி உயரும்."
"கோவணத்தில ஒரு காசு இருந்தா கோழி கூப்பிட பாட்டு வரும்"
"கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்"
"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்"
"கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்"
"கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்"
"கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?"
"கோவில் விளங்கக் குடி விளங்கும்"
"கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?"
"கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்."
"கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?"
"கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா"
"கோழி கூவிதான் பொழுது விடியுதா?நாய் குரைச்சிதான்பொழுது விடியுதா?"
"கோழி மிதித்துக் குஞ்சு சாகாது."
"கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?"
"கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது"
"கோழியோட மொடத்துக்கு கெடா வெட்டி பூஜை போட்டாப்புல"
"கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை."
"கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு."
"கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?"
"காலம் பொன் போன்றது"
"களவும் கற்று மற"
"கண்டதை கற்க பண்டிதன் ஆவான்"
"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்"
"குரைக்கும் நாய் வேட்டைக்கு உதாவது"
"கண்டொன்று சொல்லேல்"
"கடிவது மற"
"காப்பது விரதம்"
"கிழமை பட வாழ்"
"கீழ்மை யகற்று"
"குணமது கைவிடேல்"
"கூடிப் பிரியேல்"
"கெடுப்ப தொழி"
"கேள்வி முயல்"
"கைவினை கரவேல்"
"கொள்ளை விரும்பேல்"
"கோதாட் டொழி"
"கௌவை அகற்று"
"கற்பு எனப் படுவது சொல்திறம்பாமை"
"காவல் தானே பாவையர்க்கு அழகு"
"கிட்டாதாயின் வெட்டென மற"
"கீழோர் ஆயினும் தாழ உரை"
"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை"
"கூர்அம்பு ஆயினும் வீரியம் பேசேல்"
"கெடுவது செய்யின் விடுவது கருமம்"
"கேட்டில் உறுதி கூட்டும் உடைமை"
"கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி"
"கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி"
"கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு"
"கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை"
"குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்"
"கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்"
"கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்"
"கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்"
"கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்"
"கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
"கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்"
"கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்"
"கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்"
"காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்"
"கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்"
"கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்"
"கெண்டைக்கு தேவையா விலாங்கு சேட்டை"
"கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே"
"காடும் மலையும் ஊற்றும் நதியும் அங்காளி பங்காளிகள்"
"கொடுமை கொடுமைன்னு போனா சின்னாயா ஈச்சம் பாயைக் கட்டிட்டு எதுக்கால வந்தாளாம்"
"கடஞ்சு எடுத்த பாலுல கொடஞ்சு எடுத்த வெண்ணெய்."
"கெழவன் கோமணம் கட்டுன மாதிரி"
"கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்னு கிழவிய தூக்கி நடுமனையில வச்சானாம்"
"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்"
"கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு"
"களவும் கற்று மற."
"குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்"
"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்."
"குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா..?"
"குந்தித் தின்றால் குன்றும் மாளும்.."
"கல்யாண வீட்டுல பந்தலகட்டி அழுதவன் சொந்த வீட்டுல சும்மா இருப்பானா"
"கிழிஞ்ச சேலயும், புழுங்கரிசி தின்ன வாயும் சும்மா இருக்காது."
"கவுரு இல்லாத பம்பரம் தான் கமலை இல்லாத கிணறுதான்."
"கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை"
"காரியமும் நடக்கணும். காசும் செலவாகி விடக்கூடாது"
"காத்துட்டுக்கு குதிரை வாங்க வேண்டும். அது காற்றாய் பறக்கவும் வேண்டும்"
"குடியான பிள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்"
"காத்திருக்கறப்பவே தூத்திக்கோணும்; ஆளிருக்கரப்பவே அடிச்சரோனும்"
"குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்"
"காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும் செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?"
"கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா"
"கோவணத்தில ஒரு காசு இருந்தா கோழி கூப்பிட பாட்டு வரும்"
"கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா"
"கொண்டவனை அறிஞ்சுதான் கூரை ஏறி சண்டை போடணும்"
"கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருக்குமா இல்ல,மாமன் மகளக் கண்டா வாய் சும்மா இருக்குமா"
"கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம்."
"கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும்."
"குடிக்க கூழு, கொப்பளிக்க பன்னீரா?"
"கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி."
"குத்தாலத்தில குளிக்க போக கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான்."
"கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது."
"கொழம்பன குட்டையில்தானே மீன் பிடிக்கலாம்!"
"கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்."
"குப்ப காட்டு நாய்க்கு தெரியுமா கொய்யாப்பழ வாசனை?"
"கடன் இல்லாக் கஞ்சி கால்வயிறு போதும்."
"காலம் போகும், வார்த்தை நிற்கும்."
"கத்தரிக்காய் முத்தினால் கடைதெருவுக்கு வந்துதானே ஆகனும்."
"கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்."
"குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா"
"கும்பிடுவது பசுமாட்டை, குருமா வைப்பது அதே பசுமாட்டை."
"கடப்பாரைய முழிங்கிட்டு கஷாயம் குடிச்ச கதை."
"கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது."
"குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?"
"கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே."
"கழுத விட்டையா இருந்தாலும் கை ரொம்பனா சரி."
"கோழியைக்கேட்டு மசாலா அரைப்பதில்லை."
"குடுமியை பிடிச்சிக்கிட்டுதான் கூலியை கேட்கணும்."
"கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு தம்பிக்கு பொண் பாத்த மாதிரியும்.ஆச்சு"
"கூற மேல சோத்த போட்டா ஆயிரம் காக்கா."
"கொட்டக் கொட்டக் குனிபவனும் முட்டாள்; குனியக் குனியக் கொட்டுபவனும் முட்டாள்."
"குத்தாலத்துல குளிக்கப் போயி குழாயில குளிச்ச கதையாட்டம்."
"கல்லுல வேர்த்தாலும் வேர்க்கும் அவன் நெஞ்சுல வேர்க்காது."
"கத்து வச்ச கைவேல காலத்துக்கும் உதவும்."
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்."
"காணாத கண்ட கம்மங்கூழ சிந்தாத குடிடா சிலி மூக்கா."
"கட்டுசோத்து மூட்டைய கும்பல்ல அவுக்காத."
"காய்ச்ச மரந்தான் கல்லடி படும்."
"காசிருந்தா கிழவி பேரு பாட்டி. இல்லேன்னா பாட்டி பேரு கிழவி;"
"கிட்ட வா என்றால் மூஞ்சை நக்கிடுவான்."
"கண சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாப்பு."
"குந்தித் தின்னா குன்றும் கரையும்."
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு."
"கண சிநேகிதம் என்றாலும் கருவாட்டுக் கூடையில் கை வைக்காதே."
"காலுக்கு மனைக்கட்டையா இருப்பதைவிட கைக்கு வளையலா இருக்கலாம்."
"கெட்டும் கெழக்கப் போலாம் வாழ வடக்கப் போலாம் மீந்தத எடுத்துட்டு மேற்கப் போகக்கூடாது."
"காண மாளாதவனுக்கு மையனூர் பொண்ணு"
"கடலாழம் கண்ட பெரியாரும் பெண்ணாழம் கண்டதில்லை."
"கை பட்டாதான் கண்ணாடி."
"காது காது என்றால் லேது லேதுன்னு கேட்குது."
"கூட வந்தவன் சரியில்லையென்றால் குடை சாய்வது நிச்சயம்."
"கொன்றால் பாவம் தின்றால் போவும்."
"கொண்டையைக் கலைக்க ஒரு பேனும் குடும்பத்தைக் கலைக்க ஒரு பொண்ணும்"
"காலில் பீ என்றால் தலையில் பீ என்பார்கள்."
"காசு கொடுத்து காண்டு வாங்குவதுபோல்."
"கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?"
"கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை."
"கடலுக்குக் கரை போடுவார் உண்டா?"
"கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை."
"கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?"
"கடல் திடலாகும், திடல் கடலாகும்."
"கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?"
"கடவுளை நம்பினோர் கைவிடப் படார்."
"கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்."
"கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி."
"கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை."
"கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்."
"கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?"
"கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது."
"கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்."
"கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்."
"கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது."
"கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்."
"கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்."
"கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு."
"கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை."
"கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்."
"கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்."
"கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்."
"கண் கண்டது கை செய்யும்."
"கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்."
"கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?"
"கண்டதே காட்சி கொண்டதே கோலம்."
"கண்டது சொன்னால் கொண்டிடும் பகை."
"கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு."
"கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?"
"கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?"
"கதிரவன் சிலரை காயேன் என்குமோ?"
"கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்."
"கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி."
"கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு."
"கரணம் தப்பினால் மரணம்."
"கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?"
"கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்."
"கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்"
"கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று."
"கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?"
"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்."
"கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்."
"கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி."
"கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே."
"கல்லாதவரே கண்ணில்லாதவர்."
"கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்."
"கல்வி அழகே அழகு."
"கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு."
"கல்விக்கு இருவர், களவுக் கொருவர்."
"கல்விக்கு அழகு கசடர மொழிதல்."
"கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது."
"கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?"
"களை பிடுங்காப் பயிர் காற்பயிர்."
"கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்."
"கள்ள மனம் துள்ளும்."
"கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்."
"கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!"
"கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!"
"கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்."
"கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது."
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு."
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு."
"கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?"
"கனிந்த பழம் தானே விழும்."
"கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு."
"கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ."
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"
"காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்."
"காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்."
"காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்."
"காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்."
"காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?"
"காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?"
"காணி ஆசை கோடி கேடு."
"காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்"
"காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே."
"காப்பு சொல்லும் கை மெலிவை."
"காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்."
"காய்த்த மரம் கல் அடிபடும்."
"காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது."
"காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி."
"காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?"
"கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை"
"காலம் செய்கிறது ஞாலம் செய்யாது."
"காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்."
"காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்."
"காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை."
"காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்."
"காற்றில்லாமல் தூசி பறக்குமா?"
"காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்."
"காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்."
"கிட்டாதாயின் வெட்டென மற."
"கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்."
"கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?"
"கீர்த்தியால் பசி தீருமா?"
"கீறி ஆற்றினால் புண் ஆறும்."
"குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?"
"குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை."
"குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்."
"குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்."
"குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?"
"குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்."
"குணத்தை மாற்றக் குருவில்லை."
"குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை."
"குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று."
"குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்."
"குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது."
"குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை."
"குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்."
"குப்பை உயரும் கோபுரம் தாழும்."
"குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?"
"குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்."
"குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?"
"குரைக்கிற நாய் கடிக்காது."
"குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே"
"குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி."
"குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது."
"குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது."
"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்."
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை."
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே."
"கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு."
"குரங்கின் கைப் பூமாலை."
"குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது."
"குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை."
"குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்."
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை."
"கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்."
"கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?"
"கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு."
"கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்."
"கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை."
"கெடுக்கினும் கல்வி கேடுபடாது."
"கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது."
"கெடுவான் கேடு நினைப்பான்."
"கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே."
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்."
"கெட்டும் பட்டணம் சேர்."
"கெண்டையைப் போட்டு வராலை இழு."
"கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்."
"கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல."
"கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே."
"கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?"
"கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை."
"கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்."
"கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை."
"கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா."
"கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?"
"கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்."
"கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி."
"கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்."
"கையிலே காசு வாயிலே தோசை."
"கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்."
"கையூன்றிக் கரணம் போடவேண்டும்."
"கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்."
"கொடிக்கு காய் கனமா?"
"கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்."
"கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது."
"கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை."
"கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?"
"கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு."
"கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்."
"கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?"
"கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?"
"கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது."
"கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்."
"கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை."
"கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு."
"கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது."
"கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு."
"கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு."
"கோபம் சண்டாளம்."
"கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?"
"கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?"
"கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?"
"கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்"
"கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்."
"கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்."
"கண்ணில் படாதது மனதிலும் படாது."
"கண்ணிற்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது."
"காற்று மெழுகுவர்த்தியை அணைக்கும் நெருப்பை மூட்டும் பிரிவு அற்பஉணர்வைத் தேய்க்கும் பேருணர்வைப் பெருக்கும்."
"கட்டுப்பாடு மிகும் குடும்பங்களில் கட்டவிழும் விபத்துகள்"
"கட்டுப்பாடுகள் மிகுந்தால் விபத்துகள் நேரும்."
"குறுகிய அறிமுகம் வருந்தவைக்கும்."
"கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது."
"கும்பலில் அறிவுரை ஒருபோதும் கூறாதே"
"கிழநாய் வித்தை கற்காது"
"கிழ நரிக்குத் தந்திரம் கற்க வேண்டுமா."
"கிழ வேடன் வலைவிரிப்பதில் கெட்டிக்காரன்."
"குறுகிய மனித வாழ்வில் காலத்தை வீணாக்காதே!"
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு."
"கேட்பதற்கு விரை பேசுவதற்கு நிதானி கோபத்திற்குச் சுணங்கு."
"கோபம் வருங்கால் பத்து வரை எண்ணு அதிகக் கோபம் எண்றால் நூறு வரை எண்ணு."
"கோபம் அரைப் பைத்தியம்."
"கோபி முடியாததையும் செய்ய முடியும் என நினைப்பான்."
"கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே."
"காண்பவை எப்போதும் காணப்பட்டவை போல் இரா."
"கூலியில்லா வேலை கொடுந் தண்டனை."
"கண்ணால் காண்பதும் பொய்."
"கண்ணால் காண்பதே கைக்குக் கிடைக்கும்."
"கோயிலுக்குப் போகிறவன் எல்லாம் பக்தனல்ல."
"காரணம் சிறிதானால் சொல் தோரணம் பெரிதாகும்"
"கலை சோறூட்டாவிட்டாலும் சோர்வூட்டாது."
"கலை ஒரு பொருள் அன்று அது ஒரு நெறி."
"கலைகள் அனைத்தும் இயற்கையின் நகலே."
"காலம் கடிது கலையோ நெடிது."
"கலைஞனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு."
"கலைக்குப் பகை அறியாமையே."
"கலை கலைக்காகவே பயன்பாட்டிற்கல்ல பயன்பாட்டிற்கென்றால் கலை நெறி பிறழும்."
"கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே."
"கொஞ்சம் பெற விஞ்சக் கேள்."
"கேள் கொடுக்கப்படும் தட்டு திறக்கப்படும்."
"கேள்வி கேட்கப்படும் முன் விடையைக் கொடுக்காதே."
"கோபுரத்தில் அமர்ந்தாலும் குருவி குருவிதான்."
"கும்பலால் ஆளப்படுவதைவிட கும்பலை ஆள்வது மேல்."
"கெட்ட வேலி பயிரை மேயும்."
"கல் நெஞ்சங்களையும் கரைத்திடும் அழகு"
"கருணை இல்லா அழகு பயனற்றது."
"காண்பவர் கண்ணே அழகின் அடித்தளம்."
"கேட்பதை நம்பவே நம்பாதே காண்பதை பாதி நம்பு."
"கேப்பையில் நெய் வடிந்தது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு"
"குறைந்த கட்டுப்பாடுகள் உடைய அரசாங்கமே மிகச் சிறந்த அரசாங்கம்."
"காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார்."
"கெட்டதை நினைப்பதைவிட ஏதும் நினையாமை மேல்."
"காதலிக்காமல் இருப்பதைவிட காதலித்து தோல்வியுறுவது மேல்."
"கொள்வதைவிடக் கொடுப்பது மேல்."
"கூவும் இசையால் பறவையை அறி கொடுக்கும் வாக்கால் மனிதனை அறி ."
"குருடன் நிறத்தைக் கூற முடியுமா"
"காணக் காத்திருப்பவனைப் போலக் குருடனானவன் வேறில்லை."
"குருட்டு ராச்சியத்தில் ஒற்றைக்கண்ணன் அரசன்."
"குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் கோபுரத்தில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்"
"குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் குடுகுடு பள்ளத்தில் விழ வேண்டியதுதான்"
"கணங்கணம் இறப்பான் மனிதன் கணம் கணம் பிறப்பான் ஒருவன்."
"கட்டுவதை விட இடிப்பது எளிது."
"கடன் வாங்கிக் கட்டுபவன் விற்கவே கட்டுகிறான்."
"கட்டுவதும் கடன் வாங்குவதும் கோணி நிறைய வேதனை தரும்."
"கொம்பைப் பிடித்து எருதை அடக்குதல்."
"காளை மிரளக் காட்டும் செந்துணி."
"கவலைப்பட்டால் மட்டும் கடன் தீர்ந்துவிடுமா"
"காலத்தே களையெடுத்தால் பயிருக்கு பாதுகாப்பு."
"கையுறை அணிந்த பூனை எலி பிடிக்காது."
"கோயில் பூனை கடவுளுக்கு அஞ்சாது."
"காலம் மாறிப்போனால் ஆளும் மாறிப்போவான்."
"கொடை பாவங்களை மறைக்கும் குடையாம்."
"கடந்தகால மகிழ்ச்சி எதிர்கால நம்பிக்கை."
"குழந்தைக்கும் முட்டாளுக்கும் பொய் சொல்லத் தெரியாது."
"குழந்தைகளைக் கேட்டறிவதிலும் பார்த்தறிவதே மேல்."
"குழந்தையும் கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும்."
"குழந்தையின் மீது எதையும் திணிக்காதே அதுவாகப் பற்றம்படி அறிவு கொளுத்து."
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
"கூழுக்கு ஆசைப்பட்டால் மீசையை மழித்துவிடு."
"கெட்ட நட்பைவிடத் தனித்திருப்பது மேல்."
"கல்மேல் குற்றஞ்சாட்டுபவன் தடுக்கி விழுவான் இருமுறை"
"கடல்மேல் பழிபோடுபவனின் கப்பல் இருமுறை உடையும்."
"குறை குடம் கூத்தாடும் நிறை குடம் நீர் தளும்பாது"
"குறைவானதற்குத் திருப்தியடைவதே நிறைவான செல்வம்."
"கட்டின இடத்தில்தான் ஆடு மேய வேண்டும்"
"கிணற்று மீன் சமுத்திரத்தில் நீந்த முடியாது."
"கையில் இருக்கும் மாவைக்கொண்டுதானே அப்பம் சுட வேண்டும்."
"குறைவாகப் பேசு அதிகம் சிந்தி."
"கதவைத் தட்டாமலே கையூட்டு வந்து சேரும்."
"கையூட்டு அளிப்பவன் காரியம் கைகூடும்."
"கோழைகள் பலமுறை மடிவர் வீரனுக்கு மரணம் ஒருமுறைதான்."
"கோழைகள் வரலாறு படைப்பதில்லை."
"கோழையை எழுச்சிபெறச் செய்தால் பேயோடும் போரிடுவான்."
"கொல்லைப்புறக் கதவு வீட்டையே திருடி விடும்."
"கொடியோனுக்குக் கருணை காட்டாதே."
"கரை சேரு மட்டும் கத்திக் கொண்டிரு."
"கெட்டிக்காரன் பிழைக்க எட்டூர் செல்வான்."
"கௌரவப் பதவியில் ஆபத்து அதிகம்."
"கடன் ஒரு பெரிய சிலந்தி வலை ஒட்டடை"
"கடனை வாங்குதல் கவலையை வாங்குதலாம்"
"கடன்பட்டால் எப்போதும் கடனாளி."
"கடன் வாங்கவும் செய்யாதே கொடுக்கவும் செய்யாதே."
"கடன் பட்டவன் பொய் சொல்ல அஞ்சான்."
"கடவுளை வஞ்சிக்க நினைப்பவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டவன்."
"கெட்ட செயல்கள் நாற்றம் போல மூடி மறைக்க முடியாதவை."
"கையாலாகாதவன் வாய் கிழியப் பேசுவான்."
"காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது."
"கொடுக்கும் கூலிக்கு ஏற்ற வேலையாள்."
"கடையை நடத்தினால் கடை உன்னை நடத்தும்."
"கவனமும் முயற்சியும் அதிர்ச்டத்தை கொண்டுவரும்."
"குரைத்துக் கடித்து மகிழ்ந்திட நாயை அவிழ்த்துவிடு."
"கிழ நாய்க்குப் புதிய தந்திரம் கற்பிப்பது போல."
"குடிகாரனும் முட்டாளும் பொய் பேச முடியாது."
"குடிகாரனுக்குப் பொல்லாப்புப் புரியாது."
"குடிகாரனைத் தனியே விட்டால் தள்ளாடித் தானே விழவான்."
"குடியும் செல்வமும் புத்திசாலியின் நடத்தையை மாற்றும்."
"கடலில் துளி."
"கடைசித்துளியில் பானை நிரம்பி வழியும்."
"கற்பதற்கு வயதில்லை"
"கற்கையில் கசப்பு கற்றபின் இனிப்பு."
"கல்விக்கு ராசபாட்டை கிடையாது"
"கற்காதவன் அறியாதவன்."
"கல்வியால் பரவும் நாகரிகம்."
"கல் மனம் போல் பொல்லாப்பில்லை கற்ற மனம்போல் நற்பேறில்லை."
"கல்வியே நாட்டின் முதல் அரண்."
"கேடு பயக்கும் கேடு."
"கெட்ட செய்தி விரைந்து ஓடும் நல்ல செய்தி பின் தங்கும்."
"காயம் ஆறினாலும் தழும்பு நிற்கும்."
"கல்வியில்லாத அனுபவம் அனுபவம் இல்லாத கல்வியைவிட மேல்."
"கேட்டதைச் சொல்லும் இரு சாட்சிகைள விட கண்ணால் பார்த்த ஒர சாட்சி மேல்."
"கண்கள் தம்மையே நம்புகின்றன காதுகள் பிறரை நம்புகின்றன."
"கண்ணால் காணாததற்கு இதயம் ஏங்காது."
"காணாப் பொருளின் சான்றாகவும் கருதிய பொருளின் உயிராகவும் இருப்பது நம்பிக்கை."
"கோயில் பூனை தேவருக்கு அஞ்சாது"
"கோயிலருகே இருப்போர் கடவுளைக் கேலி செய்வர்."
"கோவேறு கழுதையே குடும்பத்தை மறுக்கும்."
"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை."
"குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும்."
"கீழே இருப்போன் வீழ்ந்துவிடுவோம் என பயப்பட வேண்டாம்."
"கொழுப்பு எல்லாம் அக்னியில் ஆகுதியாகும்."
"காரியம் முடிந்த பின் கவனிப்பார் இல்லை."
"கழுதைகளுக்கு இடையே உதைகளைத் தவிர வேறென்ன நிகழும்?"
"குறுகிய கால முட்டாள்தனம் சாலச் சிறந்தது."
"கழுதையைப் பார்த்துக் கத்துபவன் கழுதையாவான்."
"குழந்தையும் முட்டாளும் உண்மை விளம்பிகள்."
"குற்றவாளிகளை மன்னிப்பது மக்களுக்கு இழைக்கும் மாபாதகம்."
"குபேரன் குருடன்."
"கடின வேலையைத் தவிர்க்கும் திறமையே மேதைமை."
"கூடுவிட்டு ஆவி போவதெங்கே கூறு"
"கடவுள் படைக்கிறார் மனிதன் வடிவமைக்கிறான்."
"கடவுளுக்கு தொண்டு புரிபவனே சிறந்த எசமானனுக்குத் தொண்டு புரிகிறான்."
"கடவுள் பெயரைச் சொல்லித் தொடங்கிய காரியம் கெட்டுப் போகாது."
"கடவுள் விரும்பியபடியே அனைவரும் இருப்பர்"
"கடவுள் விருப்பப்படியே இங்கு மானிட வாழ்வு."
"கடவுளை நம்பினோர் கைவிடப்படார்."
"கெட்டதைப் போலவே நல்ல பணியும் உடனடியாகப் பேசப்படும்."
"கிசுகிசுப்பவன் இரண்டு வீட்டை அழித்திடுவான்."
"கிசுகிசு வார்த்தைகள் நெடுந்தொலைவு கேட்கும்."
"குறைந்த அளவு ஆளும் அரசே மிகச் சிறந்த அரசு."
"குற்றவாளியின் காதுகள் கேட்ட மாத்திரத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சுறுசுறுப்பாக இயங்கும்."
"குற்றத்தன்மை எப்போதும் கோழையே."
"குற்றம் எப்போதும் வெறிபிடித்தது."
"குற்றம் வீரனைக் கோழையாக்கும்."
"குற்றவாளி பிறரையும் குற்றவாளி எனக் கருதுவான்."
"குற்றவாளி இன்னும் தன் தகுதியைச் சந்தேகிப்பான்."
"காதலும் வெறுப்பும் உடன்பிறப்புகள்."
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை."
"கள்வர்களுக்கிடையேயும் நல்ல மதிப்பு உண்டு."
"குதிரையைத் தொட்டிக்கு அழைத்துச் செல்லலாம் ஆனால் குடிக்க வைக்க முடியாது."
"கெட்டவர் உபதேசிக்கும் பொழுது நல்லவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."
"களைகள் இல்லாத தோட்டம் இல்லை."
"கடவுளின் கருணை இருந்தால் முடியாதது எதுவும் இல்லை."
"கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது."
"குற்றம் புரியாத அப்பாவி ஒருவன் துன்பப்படுவதைவிடப் பத்துக் குற்றவாளிகள் தண்டனைக்குத் தப்புவது மேல்."
"கேள்வி எதையும் கேட்காதே! பொய்களை பதிலாய் பெறாதே!"
"காதலிப்பவனுக்கு அழகு தெரியாது."
"கொடிய விலங்குகள் விளையாட்டுக்காகக் கொல்லாது."
"கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்."
"காலைக்கொரு சட்டம் மாலைக்கொரு சட்டம்."
"கற்பதற்கு வயது கிடையாது."
"கற்பிக்கும் போதே கற்கிறார்கள்."
"கேள்விகள் கேட்பவனே படிப்பாளி ஆகிறான்."
"கற்றவன் அதை விட்டுவிட அல்லல்படுவான்."
"கல்லாதவன் எதையும் தெரிந்து கொள்ளாதவன்."
"கல்வியே சிறந்த செல்வம்."
"கல்வி மனிதனைத் தனக்கே தகுந்த தோழனாக்கும்."
"கற்றல் மனத்தைத் தூய்மைப்படுத்தி உயர்த்தி விடும்."
"கடன் கொடுப்பது பகையை வளர்க்கும்."
"கடன் கொடுப்பவன் கொடுப்பவனாகிறான்."
"கடன் கொடுத்தால் சண்டையை விலைக்கு வாங்குவாய்."
"கொழுத்த அடிமையாக இருப்பதைவிட மெலிந்த சுதந்திரம் மேல்."
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும்."
"கனமில்லாத பணப்பை இதயத்தைக் கனமாக்குகிறது."
"காலத்திற்காக வாழாதே நின்று நிலைப்பதற்கா வாழ்."
"காலத்திற்கேற்ப நன்கு வாழ்வதே அதிகம் வாழும் வழியாகும்."
"கடவுளால் விரும்பப்படுவோர் தண்டித்துத் திருத்தப்படுவர்."
"கௌரவம் தவிர அனைத்தும் தொலைந்து போகலாம்."
"காதலர்கள் தொலைந்தாலும் காதல் தொலையாது."
"காதலைப் போன்றே காதலிக்கப்பட்டவரும் இருப்பர்."
"காதல் பெற்றெடுத்திடும் காதல்."
"காதலரின் பொய் வாக்குறுதி காதலைச் சிரிக்கவே வைத்திடும்."
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்"
"காதல் ஆபத்திற்கு அஞ்சவதில்லை."
"காதலுக்கு கண் இல்லை."
"காதல் வழியைக் கண்டுபிடிக்கும்."
"காதல் தெய்வீகமானது."
"குழந்தைகளுக்கு இடையே மனிதன் விரைவில் குழந்தையாய் விடுவான்."
"கால்கட்டுப் போட்டால் பெட்டிப் பாம்பு."
"கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு"
"கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா"
"கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக"
"கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்"
"கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்"
"கோல் ஆட, குரங்கு ஆடும்"
"குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்"
"கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா"
"குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா"
"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்"
"குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்"
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு"
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு"
"காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்"
"கற்றோறுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு."
"ஙப் போல் வளை"
"சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்."
"சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!"
"சட்டி சுட்டதும், கை விட்டதும்."
"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்"
"சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?"
"சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி"
"சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல."
"சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்."
"சதை உள்ள இடத்தில கத்தி நாடும்"
"சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?"
"சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல."
"சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்."
"சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்."
"சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்."
"சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை."
"சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா."
"சர்க்கரை என்றால் தித்திக்குமா?"
"சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?"
"சருகைக் கண்டு தணலஞ்சுமா?"
"சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!"
"சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு."
"சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?"
"சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்."
"சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?"
"சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்."
"சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்."
"சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்."
"சாண் ஏற முழம் சறுக்கிறது."
"சாண் பிள்ளையானாலும்,ஆண் பிள்ளை."
"சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்."
"சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்."
"சாதி இரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்."
"சாது மிரண்டால் காடு கொள்ளாது."
"சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது."
"சாமியே சைக்கிள்லே போகுது பூசாரி புல்லட் கேட்டானாம்"
"சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி."
"சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்."
"சிங்காரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்."
"சித்தன் போக்கே சிவன் போக்கு."
"சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!"
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."
"சித்திரமும் கைப்பழக்கம்."
"சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்"
"சித்திரையில் செல்வ மழை."
"சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?"
"சிரிக்கிற பெண்ணையும், அழுகிற ஆணையும் நம்பாதே!"
"சிரைத்தாலும் தலையெழுத்து அழியாது/போகாது!"
"சிவபூசையில் கரடி புகுந்தாற் போல!"
"சிறியோரெல்லாம் சிறியோரல்ல, பெரியோரெல்லாம் பெரியோருமல்ல."
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்."
"சிறு நுணலும் தன் வாயால் கெடும்"
"சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது."
"சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்."
"சிறுதுரும்பும் பல் குத்த உதவும்."
"சிறுதுளி பெரு வெள்ளம்."
"சின்ன நாய எறண்டுவானேன் செருப்படி வாங்குவானேன்."
"சின்ன நாய் குரைச்சி பெரிய நாய் தலையில் வச்ச மாதிரி"
"சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி."
"சீதை பிறக்க இலங்கை அழிய."
"சீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறிச்சாம்"
"சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் ."
"சுக துக்கம் சுழல் சக்கரம்."
"சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை!"
"சுட்ட சட்டி அறியுமா சுவை."
"சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?"
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்."
"சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது."
"சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்"
"சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்."
"சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு."
"சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்."
"சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை."
"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி."
"சும்மா கிடந்த மனியக்காரனை தூண்டி விட்டா ,அவன் போன வருடத்து வாய்தாவையும் சேர்த்து கேட்டானாம்"
"சும்மா கிடைச்சா எனக்கொன்னு எங்க அப்பனுக்கு ஒன்னுனானம்"
"சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்."
"சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல......."
"சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே"
"சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ."
"சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?"
"சுவர் இருந்தாதானெ சித்திரம் வரெய முடியும்."
"சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்."
"சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்."
"சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்."
"சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்."
"சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது ."
"சூடு கண்ட பூனை அடுப்படிக்கு செல்லாது."
"சூடு மண்ட பூனை பாலை குடிக்காது."
"சூதும் வாதும் வேதனை செய்யும்."
"செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?"
"செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?"
"செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்."
"செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?"
"செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்."
"செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்."
"செத்தும் கொடுத்தான் சீதக்காதி."
"செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்."
"செய்யும் தொழிலே தெய்வம்."
"செய்வதற்குக் கடினமான/முடியாத வேலையைப்பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்படும் வார்த்தைகள்"
"செயவன திருந்தச் செய்."
"செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்."
"செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?"
"செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?"
"செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?"
"செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்."
"செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்."
"செல்லுமிடம் சினம் காக்க."
"செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்."
"செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!"
"சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி."
"சேணியனுக்கு ஏன் குரங்கு?"
"சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்."
"சேலை இல்ல சேலை இல்லன்னு சின்னாயி வீட்டுக்கு போன அவ ஈச்சம் பாய கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்"
"சேலை கட்டிய மாதரை நம்பாதே !"
"சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்."
"சேற்றிலே செந்தாமரை போல."
"சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்."
"சைகை அறியாதவன் சற்றும் அறியான்."
"சொத்து பெரிசில்ல சொல்லுதான் பெரிசு"
"சொந்தக் காசில் சூனியம் வெச்சிக்கறது போல."
"சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?"
"சொல் அம்போ வில் அம்போ?"
"சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது."
"சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்."
"சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?"
"சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு."
"சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை."
"சொல்வல்லவனை வெல்லல் அரிது."
"சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்."
"சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்."
"சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை."
"சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா."
"சோம்பித் திரியேல்."
"சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே."
"சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.."
"சோழியன் குடுமி சும்மா ஆடாது!"
"சோளியன் குடுமி சும்மா ஆடுமா?"
"சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?"
"சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்."
"சோறு கண்ட எடம் சொர்க்கம் திண்ண கண்ட எடம் தூக்கம்."
"சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை"
"சுட்டாலும் பால் சுவையில் குறையாது"
"சனி நீராடு"
"சக்கர நெறி நில்"
"சான்றோ ரினத்திரு"
"சித்திரம் பேசேல்"
"சீர்மை மறவேல்"
"சுளிக்கச் சொல்லேல்"
"சூது விரும்பேல்"
"செய்வன திருந்தச் செய்"
"சேரிடமறிந்து சேர்"
"சையெனத் திரியேல்"
"சொற்சோர்வு படேல்"
"சோம்பித் திரியேல்"
"சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை"
"சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு"
"சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு"
"சீரைத் தேடின் ஏரைத் தேடு"
"சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்"
"சூதும் வாதும் வேதனை செய்யும்"
"செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் [கைதவம் = கபடம், பொய்]"
"சேமம் புகினும் யாமத்து உறங்கு"
"சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்"
"சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்"
"சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்"
"சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்"
"சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்"
"சேராத இடந்தனிலே சேர வேண்டாம்"
"செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்"
"சனிப் பிணம் துணை தேடும்"
"சுடுகளியை நாய் புரட்டுனாப்போல"
"சோத்துக்கு இருந்தா பாப்பான்- சொன்ன படியெல்லாம் கேட்பான்."
"சோறு முத்துனா சோமாரம்; அரிசி முத்துனா அமாவாசை"
"சுப்பி கிட்ட இருக்குது சூட்சுமம்; சுண்ணாம்பு கிட்ட இருக்குதாமா வேஷம்"
"சொம்பும் போச்சுடா கோயிந்தா"
"சுந்தரிக்கு வாக்கப்பட்டவன் எதுல போறாண்டி; சோள அரிசியில பொத்தல் பண்ணி அதுல போறாண்டி"
"செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி"
"சேலை கட்டும் பெண்ணை நம்பாதே"
"சோழியன் குடுமி சும்மா ஆடாது."
"சின்ன மச்சான் பெரிய மச்சான் சீப்பு வாங்கி எனக்கு வச்சான் அண்ட ஊட்டு பெரியப்பன் மவன் என் அடி வவுத்த பெருக்க வச்சான்"
"சொத்தழிஞ்சாலும் சொல்லழிய கூடாது"
"செட்டி நட்டம் குடியானவன் தலையில்"
"சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம்"
"சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டு சோறும் நிலைக்காது."
"செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்."
"செய்வன திருந்தச் செய்."
"சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை."
"சர்க்கரை என்றால் தித்திக்குமா?"
"சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?"
"சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை."
"சோறு கண்ட இடம் சொர்க்கம், கஞ்சி கண்ட இடம் கைலாசம்."
"சுட்ட சட்டி சுவை அறியாது."
"சொந்த காசுல சூன்யம் வைத்த கதைபோல்."
"சனியன தூக்கி பனியன்ல போடாத"
"சொன்னா பொண்டாட்டி செத்துடுவா; சொல்லலேனா புருஷன் செத்துடுவான்."
"சின்ன நாய்க்கிட்ட இடவாதே, சேம்பில புளிய ஊத்திக் கடையாதே."
"சுப்பனுக்குக் குப்பை; சொக்கனுக்குத் தங்கம்."
"சிங்கத்திடம் இருந்து தப்பித்து சிறுத்தையிடம் மாட்டியாச்சி."
"சுருட்டை சோறு போடும், கோர குடியக் கெடுக்கும்."
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை."
"சுடு வெல்லத்தை நாய் பார்ப்பதுபோல."
"சொந்த செலவுல சூன்யம் வைப்பதுபோல்."
"சனியனை தூக்கி பனியனில் போடாதே."
"சுத்தி சூர முள்ளு, பக்கமெல்லாம் இண்ட முள்ளு."
"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்."
"சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி."
"சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்."
"சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?"
"சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்."
"சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்."
"சருகைக் கண்டு தணலஞ்சுமா?"
"சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?"
"சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?"
"சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்."
"சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்."
"சாண் ஏற முழம் சறுக்கிறது."
"சாது மிரண்டால் காடு கொள்ளாது."
"சித்திரமும் கைப்பழக்கம்."
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்."
"சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி."
"சுக துக்கம் சுழல் சக்கரம்."
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்."
"சுட்ட சட்டி அறியுமா சுவை?"
"சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது."
"சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?"
"சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்."
"சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்."
"சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு."
"சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே."
"சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை."
"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி."
"சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?"
"சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்."
"சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்."
"சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது."
"செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?"
"செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?"
"செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்."
"செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்."
"செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?"
"செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்."
"சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி."
"சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்."
"சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்."
"சேற்றிலே செந்தாமரை போல."
"சைகை அறியாதவன் சற்றும் அறியான்."
"சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?"
"சொல் அம்போ வில் அம்போ?"
"சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது."
"சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்."
"சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு."
"சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை."
"சொல்வல்லவனை வெல்லல் அரிது."
"சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்."
"சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்."
"சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை."
"சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா."
"சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே."
"சோம்பித் திரியேல்."
"சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்."
"சிலர் பெருமை பிறப்பால் வரும் சிலர் பெருமை சாதனையால் வரும் சிலர் பெருமை பிறர் திணிப்பால் வரும்."
"செய்தவினைதான் செய்யாததாகுமா"
"செயல்படாதிருத்தல் செம்மையுற முடியாது."
"செய்கை வரும் முன்னே அறிவுரை வரும் பின்னே"
"செய்து முடித்தபின் சேர்ந்திடும் அறிவுரை."
"சாவினும் சாவச்சம் கொடியது."
"சேற்றில் முளைக்கும் செந்தாமரை"
"செத்த பாம்பை அடிக்கும் வீரமே வாய் வீரம்."
"சொல்லாமல் சொல்வதே ஓவியம்."
"சிறு தீமைக்கு இடம் கொடுத்தால் பெருந்தீமை புகுந்துவிடும்."
"சாத்தானுடன் விருந்துண்ணச் சட்டுவம் நீண்டிருக்க வேண்டும்."
"செல்லாக்காசு திரும்பியே தீரும்."
"சாலச் சிறந்தது நல்லதன் பகையே."
"செத்த பாம்பு கடிக்காது."
"சட்டங்கள் மாறலாம் நூல்கள் மாறாது."
"சுதந்திரமாய்ப் பிறந்த மனிதன் எங்கும் தளைப்பட்டிருக்கிறான்."
"சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா."
"சிறிய படகுகள் கரை காணாமல் போகக் கூடாது"
"சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றாது."
"செல்வம் இழந்தால் ஒன்றும் இழந்துவிடவில்லை உடல் நலம் இழந்தால் ஏதோ ஒன்று இழக்கப்பட்டது நற்பண்பு இழந்தால் அனைத்தும் இழந்ததாகும்."
"சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆவர்."
"செங்குத்தான மலை ஏறுபவன் தொடக்கத்தில் மெல்லடிதான் வைக்க வேண்டும்."
"சந்தேகத்திற்கு ஆளாகு."
"சமதரப்பு ஒத்துழைப்பு நம்பிக்கை தூண்போல் தாங்கும்."
"சொறிபிடித்த ஒரு ஆட்டால் மந்தையே கெடும்"
"சாக்கடையில் மூழ்குபவனிடம் சந்தன மணம் வீசுமா"
"சிறிய திருடனுக்குத் தூக்குமரம் பெரிய திருடனுக்கு சிம்மாசனம்."
"சிறு கையூட்டும் பெருஞ்செல்வத்தைக் குலைத்துவிடும்."
"சிறு திருட்டை மூடப் பெருந் திருட்டை செய்."
"சிலுவை இல்லையேல் மகுடமும் இல்லை"
"சிந்திய பாலுக்கு ஒப்பாரி வைக்காதே."
"சொற்கள் மண்ணின் புதல்விகள் அவை காட்டும் பொருட்கள் விண்ணின் புதல்வர்கள்."
"சாவு தமுக்கடித்துக்கொண்டு வராது."
"சாவு சாக்குப்போக்கைக் கேளாது."
"சொல்வது வேறு செய்வது வேறு."
"செயலின்றிப் பேச்சினிமை பயன் இன்மை ஆகிவிடும்."
"செயல்கள் தாம் நிலைக்கும் சொற்கள் மறைந்துபோகும்."
"செயல்களே மனிதனை அடையாளம் காட்டும்."
"சனநாயகமே படுமோசமான அரசாங்கம் துரதிருச்டவசமாக அதற்கு ஒரு மாற்று இன்னும் அறியவில்லையே நாம்."
"சுறுசுறுப்பானவனுக்கு வாரத்தில் இன்றே ஏழு நாள் சோம்பேறிக்கு ஏழு நாளும் நாளையே."
"சிறு தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிடடால் பெறுந்தவறுகளைத் தவிர்க்க முடியாது."
"செய்தது கையளவு செய்ய வேண்டியது கடலளவு."
"செய் அல்லது செத்துமடி"
"சந்தேகம் செயலை அழிக்கும்."
"சாராயத்தை ஊற்றிப் பூராயத்தைக் கேள்."
"சாப்பாட்டிற்கு இடையே குடிக்காதே."
"சிறு துளி பெரு வௌ;ளம்."
"சொல்வதினும் கேட்டல் நன்று."
"சமரசம் செய்த பகைவரிடம் கவனமாய் இரு."
"சூரிய ஒளிக்கு பேதம் உண்டோ"
"சமத்துவம் சுதந்திரத்தின் மூலத் தத்துவம்."
"சட்டத்தைச் செய்வோன் அதனை மீறக் கூடாது."
"சொன்னபடி செய் நான் செய்தபடி செய்யாதே."
"செய்வதில் நாம் கற்கிறோம்."
"செல்வத்தைவிட உயர்ந்தது புகழே"
"சந்தோசமான குடும்பமே தரணியில் சொர்க்கம்."
"சந்ததி பயன்பெற சால விருட்சம் நடுவோம்."
"சந்தோசமான குடும்பங்கள் ஒன்றுபோல இருக்கும் சந்தோசம் இல்லாவிட்டால் வேறுவேறாய் இருக்கும்."
"சிறிய குடும்பமே செல்வக் குடும்பம்."
"செல்வம் கவலையும் அச்சமும் கொண்டுவரும்."
"சாவுக்கு அஞ்சுபவன் வாழான்."
"செவிடன் காதில் சங்கூதுவது முட்டாள்தனம்."
"சரசுவதி இருக்குமிடத்தில் லட்சுமி இருந்திடாள்"
"சொல்வதையெல்லாம் யோசித்துச் சொல்பவன் புத்திசாலி நினைத்ததை எல்லாம் சொல்பவன் முட்டாள்."
"செய்யாதே என்பதை முதலில் செய்வான் முட்டாள்."
"சிறு தவறுகளைப் பார்க்காதே."
"செல்வம் செல்வத்தோடு சேரும்."
"செல்வம் நண்பர்களை ஆக்கும் வறுமை அவர்களைச் சோதிக்கும்."
"சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்."
"சூதாட்டத்தை வீசி எறிவதே சிறந்த பகடை வீச்சு."
"சீட்டாட்டத்தில் அதிர்ச்டம் காதலில் துரதிருச்டம்."
"சம்பாதிக்கின்ற கையே கொடுக்க முடியும்."
"சேகரிக்கும் கையே கொடுக்கும்."
"சிறுசிறு தியாகம் செய்தே நன்னடத்தை பெறமுடியும்."
"சிறு உதவிகளையும் மறக்காதே ஆனால் பெறுந்தவறுகளையும் மறந்துவிடு."
"சண்டையில் வீரனாய் இரு."
"சிறிதளவு கணப்பும் சிறிதளவு உணவும் பேரளவு அமைதியுமே நல்விருந்தாகும்."
"சோம்பேறி மனம் பேயின் பட்டறை."
"சோம்பேறி என்பவன் பேயின் மெத்தை."
"சோம்பேறியே பிச்சை எடுப்பான்."
"சோம்பேறிக்குச் சாக்கு சுள்ளென வரும்."
"சோம்பேறி ஆட்டுக்குத் தன் கம்பளம் சுமை."
"சோம்பேறி வெறுங்காலால் நடப்பதற்கு தனக்கே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்."
"சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே."
"சிறிதளவு குறுக்கீடு பேரளவு நிம்மதி."
"சூரியனை முறைத்துப் பார்பவன் கடைசியில் குருடனாவான்."
"சாக்கர் சீட்டு எல்லோருக்கும் பொதுவானது."
"செய்யாதிருப்பதைவிட தாமதித்துச் செய்வது மேல்."
"சிரிப்பே சிறந்த மருந்து."
"சொர்க்கத்திற்குப் போகிறவன் சிரித்துக்கொண்டே போவான்."
"சட்டம் இயற்றுவோர் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது."
"சட்டம் மதியால் உருவாக்கப்படுகிறது அதை ஏய்ப்பது சதியால் உருவாக்கப்படுகிறது."
"சட்டம் சட்டத்தைத் தவிர அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது."
"சட்டம் சில சமயம் தூங்கும் ஆனால் ஒருபோதும் சாகாது."
"சட்டம் அதிகமானால் நியாயம் குறையும்."
"சட்டம் பெருகினால் குற்றமும் பெருகும்."
"சுதந்திரம் எதையும் செய்யும் உரிமம் அன்று."
"சுதந்திரம் கொடு இல்லையேல் மரணம் கொடு."
"சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் உண்டு ஆனால் எல்லைகள் இல்லை."
"சுதந்திரம் என்பது பொறுப்புணர்வு எனவே அதற்கு அநேகர் அஞ்சுவர்."
"சிறு சிறு விசயங்களால் ஆனதே வாழ்க்கை."
"சூழ்ந்த காரிருளில் விளக்கே அன்புடன் நடத்திச்செல்."
"சிறு துளி பெருவௌளம்."
"சிறிய வெட்டுகளால் பெருமரமும் சாயும்"
"சிற்றுளியால் மலையும் தகரும்."
"சிற்றுடலிலும் பெருமனம் குடியிருக்கும்"
"சாதாரண மக்களையே ஆண்டவன் அதிகம் விரும்புகிறார் அதனாலேயே சாதாரண மக்களை அதிகம் படைக்கிறார்."
"சிறுவன் எப்படி மனிதன் அப்படி."
"சட்டத்தோடு ஒன்றியிருப்பதே பெரும்பான்மை."
"சரிக்குச் சரி பழிக்குப் பழி"
"சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்"
"சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்"
"சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்"
"ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே."
"ஞயம்பட உரை"
"டாக்டரை நம்பினால் ஆரோக்கியமானது எதுவும் இல்லை மதவாதியை நம்பினால் பாவமல்லாதது எதுவும் இல்லை சிப்பாயை நம்பினால் பாதுகாப்பானது எதுவும் இல்லை."
"தகப்பன் வெட்டுன கிணறுன்னா தலைகீழா விழ முடியுமா?"
"தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்வரா?"
"தங்கக்குடத்திற்கு சந்தனமென்ன? பொட்டென்ன?"
"தங்கம் தரையிலே தவிடு பானையிலே."
"தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது."
"தட்டத் தட்ட தட்டான், படிக்க படிக்க வாத்தியாரு."
"தட்டாம்பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்"
"தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ?"
"தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்."
"தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே."
"தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்."
"தட்டிப்போட்ட ரொட்டி பொறட்டிப்போட நாதியில்லை"
"தடி எடுத்தவன் தண்டல்காரனா ?"
"தண்ட சோற்றுக்காரா, குண்டு போட்டால் வாடா"
"தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவள்."
"தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் ."
"தண்ணீரில் அடிபிடிக்கிறது."
"தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்."
"தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்."
"தண்ணீரையும் தாயையும் பழிக்காதே."
"தணிந்த வில்லுத்தான் தைக்கும்."
"தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி."
"தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)"
"தந்தை தாய் பேண்."
"தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)"
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்."
"தரித்திரனுக்கு பவிசு (வாழ்வு) வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்."
"தருமம் தலைகாக்கும்."
"தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்."
"தலெ எழுத்து தலெய செரச்சா போவுமா?"
"தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்."
"தலை இருக்க வால் ஆடலாமா ?"
"தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?"
"தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம்!"
"தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்."
"தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?"
"தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது சாண் போனால் என்ன முழம் போனால் என்ன"
"தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன"
"தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்."
"தலையை தடவி மூளையை உரிவான்"
"தலையைப் பார்த்து கல்லைப் போடு!"
"தலைவலி போய் திருகுவலி வந்ததாம்!"
"தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்."
"தவளை தன் வாயாற் கெடும்."
"தவறு என்று நன்குத் தெரிந்தாலும், தனக்கு தனிப்பட்ட உபயோகம் ஒன்றுமில்லை என்றுத் தெரிந்தும் ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டு தேவையற்ற/வீணான ஆபத்து, வம்பு தும்பு, சண்டை, சச்சரவு அகியவைகளில் சிக்கித் தவிப்பதைக் குறிக்கும் பழமொழி..."
"தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்"
"தளுக்கு போச்சு மினுக்கு போச்சு தலை புள்ளையோட மொகத்தில் உள்ள பவுசும் போச்சு மூணாம் புள்ளையோட"
"தன் கையே தனக்குதவி."
"தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!"
"தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!"
"தன் வினை தன்னைச் சுடும் !"
"தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் ."
"தன் வினை தன்னைச் சுடும்."
"தன் வூட்டு நெருப்புன்னு முத்தம் கொடுக்க முடியுமா?"
"தனக்கு தவிடு இடிக்க மாட்டான், வூருக்கு இரும்பிடிப்பான்."
"தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!"
"தனக்கு மிஞ்சித் தான் தருமம்"
"தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும்."
"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்."
"தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்."
"தன்னாளைக் கண்டா தணிஞ்சு வரும் அகப்பை வேத்தாளைக் கண்டா மிதந்து வரும் அகப்பை"
"தன்னூர் கிழக்கே, தங்கினவூர் மேற்கே, வேண்டாம் தெற்கும், வடக்கும்."
"தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)!"
"தனி மரம் தோப்பாகாது!"
"தாட்சண்யம் தன நாசம்."
"தாடி பற்றிக் கொண்டு எரியச்சே சுருட்டுக்கு நெருப்புக் கேட்கிறான்."
"தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!"
"தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது."
"தாய்க்குப்பின் தாரம்."
"தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று."
"தாயில் சிறந்த கோயில் இல்லை."
"தாயில்லா தகப்பன் தாயாதி."
"தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
"தாயும், மகளுமே யானாலும் வாயும் வயிறும் வேறு, வேறுதான்!"
"தாயைப் பார்த்து பெண்ணை கொள்."
"தாயோடு அறுசுவை உணவு போம்."
"தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல."
"தாரம் இழந்தவரைப் பொண்ணு பாக்கச்சொன்னார் தனக்குப் பாப்பானா? தம்பிக்குப் பாப்பானா?"
"தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு."
"தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்."
"தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்."
"தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்."
"தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்."
"தான் தியாகம் வாங்கவேண்டும்."
"தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்!"
"தானத்தில் சிறந்தது நிதானம்."
"தானம் கொடுத்த மாட்ட பல்லப்புடுச்சு பதம் பாத்த கதெயா."
"தானா பழுக்குறத தடி கொண்து அடிக்கணுமா?"
"தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?"
"தானாடா விட்டாலும் சதையாடும்."
"தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்."
"தானே கனியாதக் காயைத் தடிக்கொண்டு அடித்தாலா கனியும்?"
"திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை"
"திண்ணைத்தூங்கி முண்டத்துக்கு பன்னீர்கண்ட மீசையாம்!"
"திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல..."
"திருடனுக்கு தேள் கொட்டினாற் போல..."
"திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சவன கண்டுபிடின்னானாம்"
"திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல...."
"திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?"
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!"
"திருவாரூரு தேவடியாள் தேர்ந்த கைக்காரி, பாலில்லாம புள்ளை வளர்ப்பாள் பலே கைக்காரி!"
"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)"
"தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்."
"தின்ன மனசு தேடுமாம், உண்ண உடம்பு உருகுமாம்."
"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்."
"தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல!"
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (திருக்குறள்)"
"தீர்க்கதரிசி பீங்கான் திருடி"
"துட்டனைக் கண்டால் தூர விலகு..."
"துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?"
"துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா?"
"துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை."
"துணியாதே , படபடப்பாகச் செய்யாதே."
"துப்பாக்கியிலே பீரங்கி பறந்தது போல"
"துரும்பும் பல் குத்த உதவும்."
"துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!"
"துள்ளுகிற மாடு பொதி சுமக்காது."
"துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது."
"துறவிக்கு வேந்தனும் துரும்பு."
"தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல"
"தூண்டிக்காரனுக்கு தக்க மேல கண்ணு."
"தூய மனதை திடுக்கிட வைத்தால் ஐயம் இல்லாமல் அனைத்தும் வரும்."
"தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே."
"தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி."
"தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே"
"தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!"
"தெய்வம் காட்டும், ஊட்டுமா?"
"தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்."
"தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல்"
"தென்னமரத்து நெழலும் சரி தேவடியாள் உறவும் சரி"
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? (கட்டியதாம்)"
"தேங்கா தின்னது ஒருத்தன் தெண்டங் கட்டனது ஒருத்தன்."
"தேடாது அழிக்கின் பாடாய் முடியும்."
"தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்"
"தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!.."
"தேளுக்கு கொடுக்கில் விஷம் தேவடியாளுக்கு உடம்பு பூராவும் விஷம்,"
"தேளுக்கு மானியம் கொடுத்தா நொடிக்கு நூறுதடவ கொட்டுமாம்."
"தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்."
"தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்."
"தேனெடுக்றது ஒருத்தன் பொறங்கைய நக்றது ஒருத்தன்."
"தை பிறந்தால் வழி பிறக்கும்."
"தை மாதம் தரையும் குளிரும்."
"தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்."
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."
"தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது."
"தொன்மை நாடி , நன்மை விடாதே."
"தோடு தொலஞ்சா தேடமாட்டங்க, சொரை தொலைஞ்சா தேடுவாங்க."
"தோண்டக்குறுணி துக்க முக்குறுணி."
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே"
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.."
"தாய்க்குப் பின் தாரம்"
"தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது"
"தோழனை ஆபத்தில் அறிந்து கொள்"
"தந்தை தாய்ப் பேண்"
"தக்கோ னெனத்திரி"
"தானமது விரும்பு"
"திருமாலுக்கு அடிமை செய்"
"தீவினை யகற்று"
"துன்பத்திற் கிடங்கொடேல்"
"தூக்கி வினைசெய்"
"தெய்வ மிகழேல்"
"தேசத்தோ டொத்துவாழ்"
"தையல்சொல் கேளேல்"
"தொன்மை மறவேல்"
"தோற்பன தொடரேல்"
"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"
"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை"
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு"
"தீராக் கோபம் போராய் முடியும்"
"துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு"
"தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்"
"தெய்வம் சீறின் கைதவம் மாளும்"
"தேடாது அழிக்கின் பாடாய் முடியும்"
"தையும் மாசியும் வையகத்து உறங்கு"
"தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது"
"தோழனோடும் ஏழைமை பேசேல்"
"தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்"
"தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்"
"தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்"
"தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
"திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்"
"தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்"
"தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்"
"துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்"
"தானா மெச்சிக்கிச்சாம் தவிட்டுக் கொழுக்கட்ட அதுவா மெச்சுக்கிச்சாம் அரிசிக் கொழுக்கட்ட"
"தர்மம் தலை காக்கும்"
"தாண்டிக் குதிச்சா நோண்டின பள்ளம்"
"தூங்குன மணியகாரனை எழுப்பினா பழைய கந்தாயம் கேட்பானாம்"
"துலுக்கன் துணியில கெட்ட மாதிரி; பாப்பான் பலகாரத்துல கெட்ட மாதிரி"
"துணை கண்ட நாயி சிதம்பரம் போயி சேராது"
"தாய் தந்தை செத்தா பொழைக்கலாம் நாணயம் செத்தா பொழைக்கலாமா"
"தட்டிப்போட்ட ரொட்டி பொறட்டிப்போட நாதியில்லை"
"துரைகளோடு சொக்கட்டான் ஆடினால் தோத்தாலும் குட்டு செயிச்சாலும் குட்டு"
"தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்."
"தனக்கே தகறாராம், தம்பிக்கு தயிர் சோறாம்."
"தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்."
"துணை போனாலும் பிணை போகாதே."
"தடிக்கும் நோகாம பாம்புக்கும் வலிக்காம"
"திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை."
"தன் காலுக்கு தானே முள் தேடுவது போன்று."
"தன் கையே தனக்கு உதவி"
"தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனா"
"தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா"
"தாய் முகம் பாக்காத சேயும், மழை முகம் முகராத பயிறும் புண்ணியப்படாது."
"தாயைப் பழித்தாலும் பழிக்கலாம், தண்ணீரைப் பழிக்கக்கூடாது."
"தனக்குத் தனக்குன்னா புடுக்கும் களை வெட்டும்."
"தாய்க்கு தலச்சன் பிள்ளை; தந்தைக்கு கடைப்பிள்ளை."
"தெரியாத ஸ்ரீதேவியைப் பார்க்கிலும் தெரிந்த மூதேவியே மேல்."
"துட்டுக்கு வாங்கினாலும் துளுக்கம்பிள்ளைய வாங்கணும்."
"தன் தலையில தானே மண் வாரிப் போடுவதுபோல்."
"தன் காலுக்குத் தானே முள் தேடுவதுபோல்."
"தனக்குத் தானே குழி வெட்டுவதுபோல்."
"தங்கம் தரையிலே தவிடு பானையிலே."
"தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது."
"தடி எடுத்தவன் தண்டல்காரனா ?"
"தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்."
"தணிந்த வில்லுத்தான் தைக்கும்."
"தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்."
"தண்ணீரையும் தாயையும் பழிக்காதே."
"தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்."
"தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி."
"தந்தை தாய் பேண்."
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்."
"தருமம் தலைகாக்கும்."
"தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்."
"தலை இருக்க வால் ஆடலாமா ?"
"தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?"
"தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?"
"தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்."
"தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்."
"தவளை தன் வாயாற் கெடும்."
"தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்."
"தனக்கு மிஞ்சித் தான் தருமம்"
"தனி மரம் தோப்பாகாது."
"தன் கையே தனக்குதவி."
"தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்."
"தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே."
"தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
"தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு."
"தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்."
"தானாடா விட்டாலும் சதையாடும்."
"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்."
"துள்ளுகிற மாடு பொதி சுமக்காது."
"தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி."
"தேடாது அழிக்கின் பாடாய் முடியும்."
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."
"திறமைப்படி பெறு தேவைப்படி கொடு."
"திறமைசாலி என நினைத்தால் திறமைசாலி ஆகலாம்."
"தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்."
"துருப்பிடிப்பதை விடத் தேய்ந்து போவது மேல்."
"துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்."
"துன்பமே போதிக்கும் நல்லாசான்."
"துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடினும் அறிவாளியாக்கும்."
"துயரங்கள் பகைவரையும் ஒன்றுபடுத்தும்."
"துன்பத்தின் பயன் இன்பமாகும்."
"துன்ப மழை தூறல் போடாது கொட்டித்தீர்த்துவிடும்."
"தினைத் துன்பம் பனையாகும்."
"தன்னை ஆள்பவன் எண்பதிலும் இளையவன் தன்னை ஆளாதவன் முப்பதில் முடிவான்."
"தேடுவார் காண்பர் தேடாதார் காணார்."
"தன்னையே கொல்லும் சினம்."
"தண்டிக்கும் போது கோபம் கொள்ளாதே."
"துருத்தி தீயை மூட்டும் கோபத்தை மூட்டும்."
"தங்கப்பூச்சினால் கழுதை குதிரையாகுமா"
"தின்னாவிட்டால் தெரியுமா தித்திப்பு புளிப்பு"
"தாமதங்கள் மறுப்புகள் ஆகா."
"தட்டிக்கேட்க ஆள் இல்லாவிடில் தம்பி சண்டப் பிரசண்டன்"
"தங்கப்பொதி சுமந்தாலும் கழுதை கழுதைதான்"
"தங்கப் பொதி சுமந்த கழுதை தடையின்றி உப்பரிகை ஏறும்."
"தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது"
"தன்னடக்கமில்லாதவன் பிறரை அடக்க முடியாது."
"தேளுக்கு மணியம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டும்."
"தீங்கு அழையாமலே நுழையும்."
"தீயார்க்குக் கருணை நல்லார்க்குக் கேடு."
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று."
"தீயோரிடமும் நல்லவை உண்டு நல்லோரிடமும் தீயவை உண்டு."
"துச்சனைக் கண்டால் தூர விலகு."
"தீயார் நட்பு அவர் பகையினும் கொடிது."
"தன்வினை தன்னைச் சுடும்"
"தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்."
"தியாகிகளின் குருதியே மாதாகோயிலின் வித்து."
"திடமான உடலில்தான் திடமான மனம்."
"துரதிருச்டமே உணவு இடரே குடிநீர்."
"திறந்தவெளிக்கு ஒரு மோசமான புதரே மேல்."
"தேள் செந்நிறமாய் வளர்ந்தாலும் கொட்டுவது நிற்குமா"
"தன் குணத்தை மறைத்திடுவான் பிறர் குணத்தைப் பிட்டு வைப்பான்."
"தனக்கு மிஞ்சியே தானதர்மம்."
"தான தர்மத்திற்கு அளவு இல்லை."
"தன் பெருமையைத் தம்பட்டமடிப்பவன் எதையும் செய்ய மாட்டான்."
"தன்னை விடவும் தற்புகழ்ச்சிக்கு ஆளில்லை."
"தம் புகழைத் தாம் பாடாதார் இல்."
"திறமையும் நம்பிக்கையும் வெல்ல முடியாத படை."
"துன்பத்தைப் பொறுத்துக்கொண்டாலும் வெறுப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது."
"திருப்தியுறாதவனுக்கு எது இருந்தாலும் இல்லைதான்"
"தவறோ சரியோ என் நாடு பொன் நாடு."
"திருடிய மாங்காய் இனிக்கும்."
"தினை திருடுபவன் பனை திருட மாட்டானர்"
"துயர் வந்த பின்பே வருந்து."
"துயர் இல்லையேல் முடியும் இல்லை."
"தானே தனக்குத் தடையாவதே தடைகளுள் பெருந்தடை."
"தடைகளே சொர்க்கத்தின் ஏணிப்படிகள்."
"துன்புறுத்துதலே கொடியோன் வலிமை."
"தந்திர அயோக்கியனுக்குத் தரகர் தேவையா"
"திடீர்ச் சாவே நல்ல சாவு."
"தாமதம் ஆசைகளை போதிக்கும்."
"தீங்கைத் தவிர்க்கும் தாமதம் நன்றே."
"துயரம் வலிமையை இரட்டிப்பாக்கம்."
"துயரம் சிலரைக் கெடுக்கும் ஊகம் பலரைக் கெடுக்கும்."
"தன் நோக்கம் நிறைவேறச் சாத்தான் கூடச் சாத்திரம் பேசுவான்."
"தேனீ இல்லையேல் தேன் இல்லை வேலை இல்லையேல் பணம் இல்லை"
"தன்னைக் கண்டித்துத் கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்."
"தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடாதே முடிந்ததை எல்லாம் செய்தும் விடாதே."
"தூங்குகிற போக்கிரி தூங்கட்டும்."
"தற்போதைய நவநாகரிகம் எப்போதும் அழகே."
"தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல்ல பண்பைப் பொலிவுறச் செய்யும்."
"தவறே மனிதரைப் பற்ற வைத்திருக்கும் சக்தி."
"தவறு யாவர் கண்ணிலும் படும்."
"தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகம்."
"தான் மடிந்தாலும் தான் செய்த கேடு மறையாது"
"தான் போன பின்பும் தன் கேடு நிற்கும்."
"தந்தை போல மகன்."
"தன் குழந்தையை தான் அறிபவன் அறிவாளி."
"தவறுகளைக் கண்டிக்கும் தந்தையே குழந்தைகளை நேசிப்பான்."
"தந்தையிடமிருந்து மதிப்பு வரும் தாயிடமிருந்து வசதி வரும்."
"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை."
"தந்தை சாது மகன் போக்கிரி."
"தந்தையின் நற்குணமே பிள்ளையின் சொத்து."
"தந்தையை நாம் மதிப்பது போல மகன் நம்மை மதிப்பான்."
"தரையில் தவிக்கும் மீன் போல."
"தனிமரம் தோப்பாகாது."
"தன் நிழலோடு தானே சண்டையிடுவான் முட்டாள்."
"தேவதை அடியெடுத்து வைக்க அஞ்சுமிடத்தில் முட்டாள் வேகமாக நுழைவான்."
"தாகம் வரும் முன் கிணறு வெட்டி விடு."
"துரதிருச்டம் நட்பைப் பகையாக்கும்."
"திடீர் நட்பு தீரா வருத்தம்."
"தாமதித்துக் கொடுப்பதும் மறுப்பதும் ஒன்றே."
"தமக்குத்தாமே உதவுபவருக்குக் கடவுள் உதவுகிறார்."
"தூரத்தில் இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது கடவுள் இறுதியில் வருகிறார்."
"தீமையை நன்மையால் வெல்."
"தீ நாக்கு செய்யும் தீமை அனைத்தும்."
"தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்று விடாதே."
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."
"தான் சொன்ன நல்லதை எல்லாம் செய்தவன் மகிழ்வான்."
"தனக்கு உதவாதவன் தரணிக்கு உதவான்."
"தோற்கும் நேரம் வீரர்கள் உண்டாக்கப்படுகிறார்கள்."
"திட்டாத மனைவியுடன் வாழ்பவர் சொர்க்கத்தில் வாழ்பவர்."
"தீய செயல்களை அழகிய வார்த்தைகள் மூடி மறைக்கும்."
"தவறான வழியில் சம்பாதித்தால் தவறான வழியில் செலவழியும்."
"தவறான வழியில் வந்த பொருட்கள் செழிக்கா."
"தீய வளர்ப்பே திருடரை ஆக்கும்."
"தீய களைகள் சீக்கிரம் விளையும்."
"தவறு செய்யாத மனிதன் இல்லை."
"தெரியாமல் எட்டிப்பார்பவன் குமட்டுவதைக் காண்பான்."
"தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி."
"தண்டிக்க முடியாத சட்டம் இணக்கத்தை ஏற்படுத்தாது."
"துன்பப்படாமலும் அவமானப்படாமலும் எவரும் கற்க முடியாது."
"தோற்பதால் கற்கிறோம்."
"தேனினும் விசத்திலும் காதல் மிகுந்திருக்கும்."
"தடைகள் காதலை வளர்க்கும்."
"துரதிருச்டம் பெரும்பாலும் அதிர்ச்டத்தைக் கொண்டு வரும்."
"தீய நடத்தை துரதிருச்டத்தைக் கொண்டு வரும்."
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன."
"திருமணம் ஒரு குலுக்கல் சீட்டு."
"திருமண வாழ்வில் துன்பமுண்டு ஆனால் பிரம்மச்சாரி வாழ்வில் இன்பமில்லை."
"திருமணம் ஒரு சிறை."
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை"
"தனி மரம் தோப்பாகாது"
"தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது"
"தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்"
"திமிங்கலங்கள் வலையில் சிக்குவதில்லை."
"நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?"
"நக்குமங்கலம் நக்கி நாறமங்கலம் குடி போனாளாம்.."
"நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா"
"நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா"
"நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?"
"நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி."
"நடக்கத் தெரியாதவன் நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா?"
"நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி."
"நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!"
"நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி"
"நடந்தால் நாடும் உறவாகும், படுத்தால் பாயும் பகையாகும்."
"நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது."
"நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்."
"நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே."
"நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்."
"நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை."
"நம்புறவனுக்கு மகராசா நம்பாதவனுக்கு எமராசா."
"நம்ம ஊட்டு வெளக்குன்னு முத்தம் கொடுக்க முடியுமா?"
"நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?"
"நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்."
"நமைச்சல் எடுத்தவன்தான் சொரிந்துக்கொள்ள வேண்டும்!"
"நயத்திலாகிறது பயத்திலாகாது."
"நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்."
"நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து கடிக்காம போனா சரி"
"நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்."
"நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்."
"நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை."
"நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்."
"நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்."
"நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை."
"நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை."
"நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்(லு)."
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை."
"நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது"
"நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?"
"நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா"
"நல்லது செய்து நடுவழியே போனால்,"
"நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது."
"நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்."
"நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்."
"நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்."
"நல்லவனா கெட்டவனா என்பது செத்தால்தான் தெரியும்."
"நல்லா கீது உந்நாயம், மண்டைலகீது காயம்."
"நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்."
"நன்மை கடைப்பிடி."
"நனைத்து சுமக்கிறதா?"
"நா அசைய நாடு அசையும்."
"நா ஏச்ச நரி தண்ணி குடிக்காம அலையுது நீ என்னிய ஏக்கப் பாக்குறயா"
"நாக்க தாண்டினா நரகல்."
"நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்."
"நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?"
"நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி."
"நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்."
"நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு."
"நாய ஏவுனா அது தான் வாலை ஏவுது."
"நாய் வாலை நிமிர்த்த முடியாது."
"நாய் விற்ற காசு குரைக்குமா?"
"நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்"
"நாய்க்கு வாக்கபட்டா குரைச்சிதான் ஆகணும்"
"நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை."
"நாய்கிட்ட கெடச்ச தேங்கா மூடிபோல"
"நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்."
"நாரதர் கலகம் நன்மையில் முடியும்."
"நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்."
"நாலாயிரம் இல்லையெனில் நம் பெருமான் இல்லை."
"நாலாறு கூடினால் பாலாறு."
"நாலு பேர் கூடற எடத்துல நல்ல வெளக்கு, விடிய விடிய இலுப்ப வெளக்கு."
"நாலு வீட்டுல கல்யாணம் நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்"
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி."
"நாவால் பிறக்கும் நன்மையும் தீமையும்."
"நாள் செய்வது நல்லார் செய்யார்."
"நாளுக்குநாளு நகர்ந்ததடி அம்மா (டி). சொலவடை"
"நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்."
"நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்."
"நான்கு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியில் சோறு."
"நித்தம் போனால் முத்தம் சலிக்கும்."
"நித்திய கண்டம் பூரண ஆயுசு."
"நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?"
"நித்திரை சுகம் அறியாது."
"நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்."
"நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்."
"நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது)."
"நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்"
"நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்."
"நிறைகுடம் தளம்பாது."
"நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்."
"நீ எதனால் அளக்கின்றாயோ அதனால் நீ அளக்கப்படுவாய்!"
"நீண்டது தச்சன், குறைந்தது கருமான்."
"நீந்த மாட்டாதவனை ஆறுகொண்டு போம்."
"நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது."
"நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்."
"நீர் மேல் எழுத்து போல்."
"நீரடிச்சு நீர் வெலகுமா?"
"நீரானாலும் மோர், பேயானாலும் தாய்."
"நீரில்லா நெற்றி பாழ்."
"நீலிக்குக் கண்ணீர் இமையிலே."
"நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்."
"நுங்கு குடிச்சவன் ஓடிப்பொயிட்டானாம், குதம்பைய கடிச்சவன் மாட்டிக்கிட்டானாம்."
"நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக."
"நுணலும் தன் வாயால் கெடும்."
"நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?"
"நூல் கற்றவனே மேலவன்."
"நூலளவே யாகுமாம் நுண்ணறிவு."
"நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு."
"நூற்றைக் கொடுத்தது குறுணி."
"நெய் முந்தியோ திரி முந்தியோ."
"நெய்யை உருக்கியுண், நீரைச்சுருக்கியுண், மோரைப்பெருக்கியுண்."
"நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு."
"நெருப்பில்லாமல் புகையாது!"
"நெருப்பின்மீது ஈ மொய்க்குமா?"
"நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?"
"நெருப்பு இல்லாமல் புகை எழும்புமா?"
"நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?"
"நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?"
"நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?"
"நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்."
"நேற்று உள்ளார் இன்று இல்லை."
"நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல."
"நைடதம் புலவர்க்கு ஒளடதம்."
"நொங்கு தின்னவன் போயிட்டான் நோண்டி தின்னவன் அம்புட்டுக்கிட்டான்"
"நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு."
"நொறுங்கத் தின்றால் நூறு வயது."
"நோய் கொண்டார் பேய் கொண்டார்."
"நோய்க்கு இடம் கொடேல்."
"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்."
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்"
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"
"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு"
"நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்"
"நன்றி மறவேல்"
"நன்மை கடைப்பிடி"
"நாடொப் பனசெய்"
"நிலையிற் பிரியேல்"
"நீர்விளை யாடேல்"
"நுண்மை நுகரேல்"
"நூல்பல கல்"
"நெற்பயிர் விளை"
"நேர்பட வொழுகு"
"நைவினை நணுகேல்"
"நொய்ய வுரையேல்"
"நோய்க்கிடங் கொடேல்"
"நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்"
"நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை"
"நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை"
"நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு"
"நுண்ணிய கருமமும் எண்ணித்துணி"
"நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு"
"நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை"
"நேரா நோன்பு சீர் ஆகாது"
"நைபவர் எனினும் நொய்ய உரையேல்"
"நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்"
"நோன்பு என்பது கொன்று தின்னாமை"
"நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்"
"நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்"
"நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்"
"நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்"
"நாய் குரைத்தால் நாமும் குரைக்கவா முடியும்"
"நாளை கிடைக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் கலாக்காய் மேல்"
"நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு"
"நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி"
"நாடறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் ஒரு கேடா?"
"நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான்."
"நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு இட்டாரிக்குத்தான் போகும்."
"நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத."
"நாய்க்கு பேரு முத்துமாலை."
"நேத்து பேஞ்ச மழைல இன்னைக்கு மொளச்ச காளாணாட்ட இருந்துட்டு"
"நல்ல புள்ள நாணயந்தான் ஆத்தூரு வெங்காயந்தான்."
"நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா"
"நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா"
"நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை."
"நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்."
"நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு."
"நொள்ளையன் கொல்லைல அள்ளாதவன் பாக்கி."
"நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்."
"நீருள்ள மட்டும் மீன் துள்ளும்."
"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்."
"நொய் அரிசி கொதிக்குத் தாங்காது."
"நெருப்பு நெருப்பா திங்கறவன் கரி கரியா பேளுவான்."
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிஷனுக்கு ஒரு சொல்லு."
"நடந்தா நாடெல்லாம் உறவு; படுத்தா பாயும் பகை."
"நல்லது நெனச்சு நடுவழி போனா பொல்லாதது பொறவழி போகும்."
"நல்லது வளர்வது குடிசையில்."
"நாற்பதுக்குமேல் நாய் குணம்."
"நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?"
"நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி."
"நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை."
"நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!"
"நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது."
"நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்."
"நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்."
"நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்."
"நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?"
"நயத்திலாகிறது பயத்திலாகாது."
"நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்."
"நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்."
"நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை."
"நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்."
"நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது."
"நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?"
"நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்."
"நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்."
"நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்."
"நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை."
"நன்மை கடைப்பிடி."
"நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்."
"நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்."
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்."
"நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு."
"நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை."
"நாய் விற்ற காசு குரைக்குமா?"
"நாய் வாலை நிமிர்த்த முடியாது."
"நாலாறு கூடினால் பாலாறு."
"நாள் செய்வது நல்லார் செய்யார்."
"நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்."
"நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்."
"நித்தம் போனால் முத்தம் சலிக்கும்."
"நித்திய கண்டம் பூரண ஆயிசு."
"நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?"
"நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்."
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்."
"நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்."
"நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்."
"நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்."
"நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது."
"நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்."
"நீர் மேல் எழுத்து போல்."
"நீலிக்குக் கண்ணீர் இமையிலே."
"நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்."
"நுணலும் தன் வாயால் கெடும்."
"நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக."
"நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?"
"நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு."
"நூல் கற்றவனே மேலவன்."
"நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு."
"நூற்றைக் கெடுத்தது குறுணி."
"நெய் முந்தியோ திரி முந்தியோ."
"நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?"
"நெருப்பில்லாமல் புகையாது."
"நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?"
"நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?"
"நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்."
"நேற்று உள்ளார் இன்று இல்லை."
"நைடதம் புலவர்க்கு ஒளடதம்."
"நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு."
"நொறுங்கத் தின்றால் நூறு வயது."
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."
"நோய் கொண்டார் பேய் கொண்டார்."
"நோய்க்கு இடம் கொடேல்."
"நெருப்புக்குக் காற்றுபோலக் காதலுக்குப் பிரிவு."
"நோக்கங்களே செயல்களின் உரைக்கல்."
"நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது."
"நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது."
"நல்ல அறிவுரைக்கு நாடிடு கிழவனை."
"நன்கு வாழ்பவன் நெடிது வாழ்வான் இளமையில் திருந்தாதவன் முதுமையில் தள்ளாடுவான்."
"நன்மையாக முடிபவை யாவும் நன்றே."
"நாய்க்குத் தவிசிட்டால் யானையாகாது"
"நிறைகுடம் தளும்பாது."
"நாம் எதற்கு ஆர்வம் கொள்வோமோ அதாகவே ஆவோம்."
"நாலுபேர் உதவியின்றி நாட்டையாள முடியுமா"
"நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரத் துதி."
"நல்லது வரும் என்று தீயதைச் செய்யாதே."
"நச்சுமரம் நற்கனி ஈனாது."
"நன்கு தொடங்குவது பாதி முடித்ததற்குச் சமம்."
"நம்பிக்கை மலைகளையும் அசைத்திடும்."
"நம்புவதிலும் நம்பாததிலும் இல்லை நம்பிக்கை துரோகம் நம்பாததை நம்புவதுபோல் காட்டிக்கொள்வதே நம்பிக்கைத் துரோகம்."
"நம்பாதவன் அழிவான்"
"நம்பினோர்க்கு நற்கதி"
"நம்பினோர்க்கு துயர் நாசமாகும்."
"நல்லது நடக்கும் என நம்பு தீயதை எதிர்கொள்ளத் தயாராயிரு."
"நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதில் ஐயம் ஏதும் இல்லை."
"நாளை கிடைக்கும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்காய் மேல்."
"நடைமுறைப்படுத்தப்படாத சட்டம் இருப்பதைவிட சட்டமே இல்லாமல் இருப்பது மேல்."
"நீண்ட நாள் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதே மேல்."
"நிறைந்த இரும்புச்சத்துள்ளதே சிறந்த ரத்தம்."
"நச்சுக்காற்று நன்மை தராது."
"நூல்களிலும் காதலிலும் மனம் ஓர் இலக்கையே நாடும்."
"நம்பிக்கையே ஏழையின் உணவு."
"நன்றாய்க் கட்டுவதே நமது நோக்கம்."
"நல்ல சாராயத்தைப் புதர் மறைவில் விற்க வேண்டியதில்லை."
"நீந்தத் தெரியாவிட்டால்ஆழம் போகாதே"
"நரி சாம்பல் நிறமாக வளரும் ஆனால் ஒருபோதும் நல்லதாக மாறாது."
"நாய் வாலை நிமிர்த்த முடியாது"
"நண்டை நேராக நடக்க வைக்க முடியாது."
"நம்மால் செய்ய முடிந்ததைச் செய்வதே தர்மம்."
"நாம் எப்படியோ நம் நண்பர் அப்படியே."
"நல்ல நண்பருடன் வாழ்க்கையில் நடந்தால் எதுவும் எளிதில் கைகூடும்"
"நம்பிக்கை நாட்டிடும் உறுதியை."
"நம்பிக்கை வளர நாள் பிடிக்கும்."
"நேர்மை இல்லாத கையாள் நேர்மையுள்ள அதிகாரியையும் கெடுத்துவிடுவான்"
"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேளாதே நாட்டுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுக்கொள்."
"நாட்டைக் காக்க ஒருமுறை தானே உயிர்விட முடியும்"
"நரியோடு பேரம் பேசத் தந்திரம் வேண்டாமா"
"நெருப்போடு விளையாடினால் தீப்புண் ஏற்படும்."
"நீந்தக் கற்காமல் நீர் அருகே செல்லாதே."
"நூலைப் போலச் சேலை தாயைப் போல பிள்ளை."
"நாளோ சிறிது நடக்க வேண்டிய வேலை பெரிது."
"நாளை நன்றாகத் தொடங்கினால் நாம் வருந்த வேண்டியதில்லை."
"நம்பிக்கைகளுக்கு இடையே மரணம் நம்மைத் திடுக்கிட வைக்கும்."
"நம்பிக்கையே ஏமாற்றின் தாய்."
"நம்பிக்கைத் துரோகி நரகம்சேர் பாவி."
"நற்செயல் என்றும் நிலைத்திருக்கும்"
"நற்செயல் என்றும் வீண் போவதில்லை"
"நன்மை செய்வதால் நட்டம் ஏதும் இல்லை."
"நாளையினும் இல்லை இனிது"
"நாளை என்பது நிச்சயமில்லை."
"நன்றாக ஊதத் தெரிந்தவனே நாயனம் ஏந்துவான்."
"நரகத் துயரையும் அன்பால் ஆனந்தப்படுத்தலாம்."
"நல்லது கெட்டது நாலும் சேர்ந்தது இந்த நானிலம்."
"நன்றாகச் செய்தால் நல்லது பெறலாம்"
"நன்றாகச் செய்தால் இருமுறை செய்ய வேண்டாம்."
"நம் சந்தேகங்களே நம்மை இழுத்துச் செல்லும்."
"நல்ல ஆடைகள் எல்லாக் கதவுகளையும் திறந்திடும்."
"நல்லன யாவும் கூட ஒரு முடிவுக்கு வந்தே தீரும்."
"நிரம்பி வழிவதற்கு முன் கோணியைக் கட்டு."
"நிரம்பிய நீர் வழிந்துதான் போகும்."
"நண்பனைப் பற்றி நல்லன சொல். பகைவனைப் பற்றி ஏதும் சொல்லாதே."
"நல்ல உதாரணமே சிறந்த புத்திமதி"
"நம்பிக்கையே வாழ்கையின் உந்து சக்தி."
"நேர்மையானவர் நம்பிக்கையால் வாழ்வர்."
"நாம் நடப்பது நம்பிக்கையால் பார்வையால் அன்று."
"நம்பிக்கை சொர்க்ததைத் தீட்டும் ஆன்மாவின் தூரிகை."
"நல்ல முகத்தைவிட நல்ல புகழே மேல்."
"நாட்டைவிடக் குடும்பம் புனிதமானது."
"நெருப்பின்றிப் புகையாது."
"நாற்பது வயதிலும் முட்டாள் உண்மையாகவே முட்டாள்தான்."
"நன்றி மறப்பது நன்றன்று."
"நன்றல்லது அன்றே மறப்பது நன்று."
"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்."
"நியாயத்தினும் கருணை மேம்பட்டது."
"நிழலருமை வெயிலில் தெரியும்."
"நண்பன் இல்லா வாழ்க்கை துயரில் பங்கு கொள்ள ஆள் இல்லாத சாவு."
"நண்பர்களுக்கு இடையில் யாவும் பொது"
"நண்பன் உதவி கேட்டால் நாளை என்பது இல்லை."
"நண்பனைப் பகைவனாகி விடுவானோ என்பது போல் நடத்து."
"நட்பு எப்போதும் நன்மை தரும் காதல் சில நேரம் துன்பம் தரும்."
"நிழல் தரும் மரமே நட்பு."
"நட்பைச் சந்தையில் வாங்க முடியாது."
"நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்."
"நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும்."
"நண்பனுக்காகத் துயர்பட்டால் இரட்டிக்கும் நட்பு."
"நொடியை நன்கு கவனித்தால் மணி தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்."
"நாய் விற்ற காசு குரைக்காது"
"நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கையில் போய்விடு."
"நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது."
"நல்லதை இறுகப் பற்று."
"நல்லதும் வேகமும் சந்திப்பது அரிது"
"நல்லது மெதுவாய்த்தான் நடக்கும் தீயது உடனே நடந்துவிடும்."
"நல்ல பட்டறைக்கல் சுத்தி அடிக்கு அஞ்சாது"
"நல்லவன் சோதனைக்கு அஞ்சான்."
"நல்ல வேடனை அம்பால் அல்ல குறியால்தான் அறிவர்."
"நல்ல குதிரையின் நிறம் மங்காது."
"நல்ல பெயர் இருட்டிலும் ஒளிரும்."
"நாட்டின் தகுதிக்கு ஏற்ற அரசே அமையும்."
"நன்றியுள்ளவன் கேட்கும்பொழுது பணம் கொடு"
"நன்றி உடையாருக்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணும் நன்றியில்லாதவனுக்குச் செய்த உதவி நீர்மேல் எழுத்துக்கு நேர்."
"நலவாழ்வே நற்செல்வம்"
"நோய்வரும் வரை நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை"
"நோய் வராதவரை உடல் நலத்திற்கு மதிப்பில்லை."
"நேரத்தே எழுந்து காலத்தே உண்டு நேரத்தே உறங்கினால் நூறாண்டு வாழலாம்."
"நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்."
"நாணயமே நனிசிறந்த கொள்கை."
"நேர்மையான பார்வைக்குப் பல தவறுகள் மறையும்."
"நாணயம் காலத்துக்கு ஒவ்வாத அற்புத அணிகலன்."
"நாணயமானவனின் வார்த்தை உறுதிப்பத்திரம் போன்றது."
"நாணயத்தைப் போன்றதோர் பரம்பரைச் சொத்தில்லை."
"நன்மதிப்பை உடைமையாக்கிக் கொள்வதைவிட அதற்குத் தகுதியாவது சிறப்பு."
"நன்மதிப்பும் சுகவாழ்வும் நண்பர்கள் அல்லர்."
"நன்மதிப்பு நடத்தையை மாற்றும்."
"நன்மதிப்பு விழைபவன் நன்மதிப்புக்குரியவன் அல்லன்."
"நேர்மையான உழைப்பில்தான் நன்மதிப்பிருக்கும்."
"நன்மதிப்புடன் ஓய்வு பெறு."
"நம்பிக்கையே மனிதனை உயிருடன் வைத்திருப்பது."
"நம்பிக்கை இல்லாவிட்டால் இதயம் வெடித்துவிடும்."
"நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு."
"நல்வரவை நலிவடையச் செய்யாதே."
"நல்விருந்து ஓம்புபவனின் விருந்தாளி விருந்தோம்பலைக் கற்றுக்கொள்வான்."
"நல்ல கணவன் செவிடனாயிருக்க வேண்டும் நல்ல மனைவி குருடாய் இருக்க வேண்டும்."
"நீ அறியாதது உன்னைச் சேதப்படுத்தாது."
"நேர்மையாளனை மனதில் பொன்போல் வைப்பர் பொதிந்து கொடுமையாளனை மனதில் வையார் மண்போல் வீசி எறிந்து."
"நேர்மையற்ற சமாதானத்தினும் நேர்மையான போர் மேலானது."
"நீதியைக் கருணையால் பக்குவப்படுத்து."
"நீ வியாபாரத்தைக் கவனி உன்னை வியாபாரம் கவனிக்கும்."
"நேரத்தைக் கொல்வதாக மனிதன் சொல்வான். ஆனால் நேரம் மனிதனை மௌனமாய்க் கொல்கிறது."
"நம்மை அறிவதே நமக்கறிவாகும்."
"நம் அறிவில் பாதியை நாம் அல்லல்பட்டு பெற வேண்டும் சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடாது."
"நிலத்தின் மீது கட்டியிருப்பது நிலத்தோடு போகும்."
"நிலம் வைத்திருப்பவன் கூலியாட்களும் வைத்திருக்க வேண்டும்."
"நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் நீ அழுதால் நீ மட்டுமே அழ வேண்டும்."
"நன்மையில்லாததைச் செய்ய கற்காதே."
"நல்லது செய்யும் ஊதாரித்தனத்தைக் கற்றுக் கொள்."
"நல்ல வாழ்க்கை சுருக்கங்களை வரவழைப்பதில்லை."
"நீண்ட வாழ்க்கையில் துயரமும் தொடரும்."
"நெடுநாள் வாழ்பவன் கொடுந்தீமை கடக்க வேண்டும்."
"நெடிய வாழ்க்கையும் நொடிகளின் பகுதிகளே."
"நெடிது வாழ்பவன் நிறையப் பார்ப்பான்."
"நன்றாக வாழ்பவன் தொலைநோக்கு உடையவன்."
"நாம் இழந்துவிட்ட சொர்க்கங்களே உண்மையான சொர்க்கங்கள்."
"நாய் நாயைத் தின்னுமா"
"நோயைவிடப் பரிகாரம் மோசமாக இருக்கிறது."
"நாளையும் உயிர் வாழ்வோம் என்று நினைப்பவனை தவிர வயோதிகன் எவனும் இல்லை."
"நடத்தையே மனிதனை உருவாக்குகிறது."
"நடத்தையே பெரும்பாலும் அதிர்ச்டத்தை உருவாக்கும்."
"நடத்தையே மனிதர்க்கு உரைகல்."
"நாள் நீளும் வரை நீளும் மகிழ்ச்சி போல."
"நிறைய செல்வம் நீண்ட மகிழ்ச்சி."
"நளினமாய் நடனம் ஆடுவோர் எல்லாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை."
"நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல"
"நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்"
"நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை"
"பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்."
"பக்கச் சொல் பதினாயிரம்."
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம்."
"பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே."
"பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?"
"பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு."
"பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே."
"பகுமான கோழி பறந்து பறந்து முட்டை போட்டுச்சாம்"
"பகைவர் உறவு புகை எழு நெருப்பு."
"பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே."
"பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்."
"பங்காளி வீடு வேகிறபோது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு."
"பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை."
"பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?"
"பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்."
"பசித்தபின் புசி."
"பசியுள்ளவன் ருசி அறியான்."
"பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை."
"பஞ்சாங்கம் பல சாஸ்திரம் ஒசக்க இருந்து விழுந்தா ஒடம்பு நட்சத்திரம்"
"பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?"
"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்."
"பட்டணம் எல்லாம் நம்ம பட்டணந்தான் பொட்டணம் வைக்கத்தான் எடமில்ல."
"பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!"
"பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்."
"பட்டால் தெரியும் பட்ட வலி."
"பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்."
"பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல."
"பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலைங்றான்."
"பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு."
"பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்."
"பட்டும் பாழ், நட்டும் சாவி."
"படப்போட மேயிற மாட்டுக்கு பிடுங்கிப் போட்டா காணுமா"
"படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்."
"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்."
"படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம்."
"படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில்."
"படிப்பது பாகவதம், இடிப்பது பெருமாள் கோயில்."
"படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்."
"படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்."
"படையிருந்தால் அரணில்லை."
"பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்."
"பண்டம் ஒரிடம் பழி பத்திடம்."
"பண்டிதன் மகன் பரம சூனியம்."
"பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்."
"பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்."
"பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்."
"பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?"
"பணம் உண்டானால் மணம் உண்டு."
"பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்."
"பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்."
"பணம் பத்தும் செய்யும்."
"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே."
"பணம் பாதாளம் மட்டும் பாயும்."
"பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்."
"பணியாரம் சுட்ட வீட்டுக்கு பத்துவாட்டி போனாளாம் அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்"
"பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்."
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்."
"பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை."
"பதறாத காரியம் சிதறாது."
"பதறிய காரியம் சிதறும் (Haste is waste)"
"பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது."
"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து."
"பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல் என்கிறான்."
"பரட்டை பால் வார்க்கும், சுருட்டை சோறு போடும்."
"பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்."
"பரிசாரகன் நம்மாள் ஆனால், எங்கு உட்கார்ந்தால் என்ன?"
"பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்."
"பருவத்தே பயிர் செய்."
"பல துளி பெருவெள்ளம்."
"பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்."
"பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்."
"பலநாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்."
"பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்."
"பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை."
"பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை."
"பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை."
"பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே."
"பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்."
"பல்லு போனா சொல்லு போச்சு."
"பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு."
"பழகப் பழகப் பாலும் புளிக்கும்."
"பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)"
"பழம் நழுவிப்பாலில் விழுந்தாற்போல!"
"பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது."
"பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்."
"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்."
"பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்."
"பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்."
"பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?"
"பழுத்த மரம்தான் கல்லடி படும்."
"பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை."
"பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !"
"பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது."
"பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது."
"பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?"
"பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி."
"பன்றிக்குப் பின்னால் போகிற கன்றும் கெடும்."
"பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம்."
"பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை."
"பனி பெய்து குளம் நிரம்பாது."
"பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?"
"பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி."
"பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்."
"பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே."
"பாக்க ஒரு தரம் கும்புட ஒரு தரமா?"
"பாட்டி சொல்லைத் தட்டாதே."
"பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்."
"பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)"
"பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு."
"பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்."
"பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு ."
"பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு ."
"பாம்பின் கால் பாம்பறியும்."
"பாம்பு என்றால் படையும் நடுங்கும்."
"பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது."
"பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?"
"பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்."
"பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!"
"பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்."
"பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்."
"பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது."
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்."
"பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?"
"பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்"
"பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி."
"பாரியாள் ரூபவதியானால் தன் சத்துரு."
"பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்."
"பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?"
"பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்!"
"பானை பிடித்தவள் பாக்கியசாலி."
"பிச்சை எடுக்குற சோத்துல கொழஞ்ச சோறு கேட்டானாம்"
"பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்."
"பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா?"
"பிடிபிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?"
"பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!"
"பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை ."
"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டக் கதையாக..."
"புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி."
"புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்..."
"புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்."
"புடிச்சாலும் புளியம் கொம்பா புடிச்சிட்டார்"
"புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல."
"புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி."
"புத்திமான் பலவான்."
"புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு."
"புயலுக்குப் பின்னே அமைதி."
"புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்."
"புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா?"
"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது."
"புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்."
"புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்!"
"புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?"
"புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்."
"பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது."
"பூ விற்ற காசு மணக்குமா?"
"பூ வின் மற்றோருப் பெயர் பெண்."
"பூமியைப்போலப் பொறுமை வேண்டும்."
"பூவிற்றகாசு மணக்குமா?"
"பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்."
"பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்குது."
"பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போய்விடுமா?"
"பூனை குட்டியை மாத்தினாற்போல."
"பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு."
"பூனை வளர்த்த சாமியாரு பொண்டாட்டி கட்டுன மாதிரி"
"பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்."
"பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது"
"பெண் என்றால் பேயும் இரங்கும்.."
"பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!"
"பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி."
"பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்...."
"பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு."
"பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு."
"பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்"
"பெண்ணுக்கு இடம் கொடேல்."
"பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம்"
"பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்."
"பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு."
"பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்"
"பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்."
"பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!"
"பெருமையும் சிறுமையும் வாயால் வரும்."
"பெற்ற பிள்ளை இல்லாட்டியும் வச்ச பிள்ளை தண்ணி ஊற்றும்."
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு."
"பெற்றால் தான் பிள்ளையா?"
"பேச்சுப் பிடிச்ச நாயி வேட்டைக்கு உதவாது"
"பேசப் பேச மாசு அறும்."
"பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை."
"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்."
"பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்."
"பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்"
"பேராசை பெருநட்டம்."
"பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்."
"பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல..."
"பொங்கின பால் போயப்பால்"
"பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்."
"பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை."
"பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது."
"பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்."
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை."
"பொல்லாதது போகிற வழியே போகிறது."
"பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்."
"பொறி வென்றவனே அறிவின் குருவாம்."
"பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்."
"பொறுத்தார் பூமி ஆள்வார்."
"பொறுமை கடலினும் பெரிது."
"பொறுமை மிக அவசியம்"
"பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது."
"பொன் குடத்திற்கு பொட்டிட்டா பார்க்கணும்?"
"போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான்."
"போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்."
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து."
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து."
"போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?"
"போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை."
"போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்."
"பருவத்தே பயிர்செய்"
"பசி வந்திட பத்தும் பறந்து போகும்"
"படிச்சவன் பாட்டை கொடுத்தான் எழுதினவன் ஏட்டை கொடுத்தான்"
"பெண் என்றால் பேயும் இரங்கும்"
"பெண் பாவம் பொல்லாதது"
"பெண் புத்தி பின் புத்தி"
"பேராசை பெரு நஷ்டம்"
"பருவத்தே பயிர் செய்"
"பழிப்பன பகரேல்"
"பாம்பொடு பழகேல்"
"பிழைபடச் சொல்லேல்"
"பீடு பெறநில்"
"புகழ்ந்தாரைப் போற்றி வாழ்"
"பூமி திருத்தியுண்"
"பெரியாரைத் துணைக்கொள்"
"பேதைமை யகற்று"
"பையலோ டிணங்கேல்"
"பொருடனைப் போற்றிவாழ்"
"போர்த்தொழில் புரியேல்"
"பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்"
"பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்"
"பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்"
"பீரம் பேணில் பாரம் தாங்கும்"
"புலையும் கொலையும் களவும் தவிர்"
"பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்"
"பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்"
"பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்"
"பையச் சென்றால் வையம் தாங்கும்"
"பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்"
"போனகம் என்பது தான்உழந்து உண்டல்"
"போகாத இடந்தனிலே போக வேண்டாம்"
"போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்"
"பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்"
"பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்"
"பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்"
"பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்"
"புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்"
"புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்"
"பூனை வீடு தங்கும் நாய் உறவு தங்கும்"
"பூனை வெளியே போனா எலிக்கு ராசாங்கம்"
"பொன்னி வந்து பொங்கல் வைக்கும்ன்னு புள்ளையாரு காத்திருக்குமா?"
"பணத்துக்கு பத்துப்படி அரிசி அளந்தாலும் பாவி ஊடு பட்டினிதான்"
"பிலுக்குதா பிலுக்குதாம் பித்தளை; காசுக்கு ரெண்டு கத்தாழை"
"பண்ணாடி படியில் ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குறான்"
"பொழச்சது பொத்தியாம்பாளையம்; வாழ்ந்தது வள்ளியாம்பாளையம்"
"பந்தியில உட்காராதீன்னு சொன்னா எலைல ஓட்டைன்னானாமா"
"பருப்பு பதம் கெட்டதாமா; பண்ணாடி சீர் கெட்டதாமா"
"பங்காளி வூட்டுல தீ புடிச்சா குந்தாணி எடுத்து தண்ணி ஊத்து."
"புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம்"
"பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம்."
"பொழக்கிற புள்ளைய பேள உட்டு பார்த்தா தெரியாதா?"
"பழைய குருடி கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"
"போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை."
"பந்திக்கு முந்து . படைக்கு பிந்து ( அ) பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ"
"பகையாளி குடியை உறவாடி கெடு."
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்."
"புல் தடுக்கிப் பயில்வான் போல..."
"பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது."
"பசியாது இருக்க மருந்து தாரேன் பழயது இருந்தா போடு தாயேன்னானாம்"
"பொண்டாட்டின்னா புழுக்கச்சி – வப்பாட்டின்னா கொலசாமி தானாம்"
"பானத் தண்ணியில கல்ல விட்டு எரிஞ்ச மாதிரி."
"பல்லிக்கு பயந்து பாம்பு வாயில விழுந்தாபுல."
"படப்போட மேயுற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமா"
"புருசனும் பொண்டாட்டியும் சாமி ஆடுனா, புள்ள தூக்குறது யாரு?"
"புள்ள வேணுங்குறவ வாயக் கட்டணும்; புருசன் வேணுங்குறவ வயத்தக் கட்டணும்"
"பார்த்துக் கெட்டது புள்ள பாராமக் கெட்டது பயிறு"
"பூனை சிரிச்சதும் எலி பெண்டுக்கு அழைச்சதாம்"
"பூனை இருக்கிற வீட்டுலதான் எலி பேரம் பேத்தி பெத்தெடுக்குமாம்"
"பசு வேறு நிறமானாலும் பால் வேற நிறமாகுமா"
"பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு."
"படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்."
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு."
"பொது பொண்டாட்டி புழுத்து செத்தா, என் பொண்டாட்டி வீங்கி செத்தா."
"பக்கத்து இலைக்கு ஏன் பாயாசம் கேக்கற?"
"பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்."
"பிள்ளையார பிடிக்கப்போயி கொரங்க பிடித்த கதையாயிடுச்சி."
"புளி மலையில விளைந்தாலும் உரலில் குத்து பட்டுதானே ஆகவேண்டும்."
"பிஞ்சு வத்தினா புளி ஆகாது"
"பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம"
"பட்டாதான் தெரியும் பல்லிக்கு சுட்டாதான் தெரியும் நண்டுக்கு"
"பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்."
"பசி ருசி அறியாது."
"பூவும் வேணும், மீசையும் வேணும்ன கதையா இருக்கு"
"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்."
"பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தேங்காய் உடைச்சான்னா நான் ஒரு சட்டியாவது உடைக்கணும்."
"பாழாப் போன சாப்பாடு பசு மாட்டு வயிற்றில்."
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு."
"பாலைப் பார்ப்பதா? பானையைப் பார்ப்பதா?"
"பயந்தவனுக்குப் பகலும் பகை; துணிந்தவனுக்கு கடலும் அற்பம்."
"பாத்திரத்தை மாற்றினால் பாலின் நிறம் மாறுமா?"
"பேச்சுதான் வாழைப்பழம், செயலெல்லாம் எட்டிக்காய்."
"பழிப்பவனுக்கு பங்கு ரெண்டு."
"பங்காளி சொத்து பாதாளம் போனாலும் விடாது."
"புளியமூலையில மின்னினால் பொழுது முளைப்பதற்குள் மழை பொழியும்."
"பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுக்கண்டம் நமக்குத்தான்னு திங்கணும்."
"பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்."
"புள்ள குட்டி இல்லாதவன் பஞ்ச காலத்துல ராஜா, ஆடு மாடு இல்லாதவன் மழை காலத்துல ராஜா."
"புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்."
"பொண்டாட்டி கட்டிக்கிற உறவு, பொண்ணு வெட்டிக்கிற உறவு."
"பீய கடக்கக் கூட திங்கலாம், பொணம் கடக்கத் திங்கக்கூடாது."
"பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே."
"பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே."
"பகைவர் உறவு புகை எழு நெருப்பு."
"பக்கச் சொல் பதினாயிரம்."
"பசியுள்ளவன் ருசி அறியான்."
"பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்."
"பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?"
"பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?"
"படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்."
"படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்."
"படையிருந்தால் அரணில்லை."
"படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்."
"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்."
"பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்."
"பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்."
"பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்."
"பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்."
"பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?"
"பணம் பத்தும் செய்யும்."
"பணம் உண்டானால் மணம் உண்டு."
"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே."
"பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்."
"பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்."
"பதறாத காரியம் சிதறாது."
"பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது."
"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து."
"பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை."
"பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்."
"பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்."
"பருவத்தே பயிர் செய்."
"பல துளி பெருவெள்ளம்."
"பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்."
"பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்."
"பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை."
"பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்."
"பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு."
"பழகப் பழகப் பாலும் புளிக்கும்."
"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்."
"பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்."
"பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?"
"பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது."
"பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?"
"பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை."
"பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?"
"பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்."
"பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்."
"பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி."
"பாம்பின் கால் பாம்பு அறியும்."
"பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்."
"பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி."
"பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்."
"பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே."
"புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி."
"புத்திமான் பலவான்."
"புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?"
"புயலுக்குப் பின்னே அமைதி."
"புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்."
"பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது."
"பூமியைப்போலப் பொறுமை வேண்டும்."
"பூ விற்ற காசு மணக்குமா?"
"பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்."
"பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்."
"பெண் என்றால் பேயும் இரங்கும்."
"பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு."
"பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்."
"பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்."
"பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி."
"பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்."
"பெருமையும் சிறுமையும் வாயால் வரும்."
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு."
"பேசப் பேச மாசு அறும்."
"பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை."
"பேராசை பெருநட்டம்."
"பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்"
"பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்."
"பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை."
"பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது."
"பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்."
"பொறி வென்றவனே அறிவின் குருவாம்."
"பொறுமை கடலினும் பெரிது."
"பொறுத்தார் பூமி ஆள்வார்."
"பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்."
"பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது."
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து."
"போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?"
"போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்."
"பிரிவு காதலின் ஆர்வத்தை அதிகரிக்கும் வருகை வலுப்படுத்தும்."
"பூனை புறம்போனால் எலி கூத்தாடும்"
"புதிய அறிமுகங்கள் புகாத வாழ்க்கை விரைவில் தனிமைப்படும்."
"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்"
"போரில் வீரன் வெல்வது போல பெரியோர் துயரில் பெரிதும் மகிழ்வர்."
"போருக்குப் போவென்றும் திருமணம் புரியென்றும் யாருக்கும் அறிவுரை கூறாதே"
"பல்லில்லாத கிழவனும் பச்சிளம் குழந்தைதான்."
"போருக்கும் காதலுக்கும் செய்வது எல்லாமே நியாயம் தான்."
"பொதுச் சொத்து யாரையும் சேராது."
"பேராசை இழந்திடும் பெரும்பாலோரை."
"பேராசைக்கு இல்லை இரக்க குணம்."
"பெரிய கடலில்தான் பெருமீன் இருக்கும் அதில் மூச்சடக்கத் தெரியாமல் முத்தெடுக்க முயலாதே."
"பார்வைக்கு அகத்தியன் பராக்கிரமத்தில் அர்ச்சுனன்."
"பலருக்குச் சொந்தமான கழுதை ஓநாய்களுக்கு இரையாகும்."
"பட்டறைக் கல்லாய் இருப்பதைவிட சம்மட்டியாய் இருப்பது மேல்."
"பொறுமை ஒரு நற்பண்பு."
"புறங்கூறாதவனே நல்ல நண்பன்"
"பாவமே துயரத்தின் மூலம்."
"பெருந்தீங்கிற்குத் தீங்கு மேலானது"
"பாவத்தில் வீழ்வது மனிதத்தனம் அதிலேயே தங்கியிருப்பது பேய்த்தனம்."
"புதருக்கு விதையிட வேண்டாம்."
"போரில் நியாயமும் பொதுமக்கள் கருத்தும் பாதி வெற்றிக்குச் சமம்."
"போரில் தோல்வியை அடுத்தாற்போல் போரில் வெற்றி துயரமிகத் தரும்."
"பூட்டிய கதவுகளையும் திறந்திடும் அழகு."
"பண்பற்ற அழகு ஒரு சாபக்கேடு."
"பணிவில்லாத அழகு பாராட்டுப் பெறாது."
"பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் ஆக முடியாது."
"பிச்சைகாரனாய் வாழ்வதைவிட பிச்சைக்காரனாய் இறப்பது மேல்."
"பிச்சைகாரன் ஒருபோதும் திவாலாகான்."
"பார்ப்பது நம்புவதற்குச் சமம்."
"பிற்பாடு கடுந்துயர் அடைவதைவிட தற்போது துயரமடைவது மேல்."
"பறப்பதைவிட இருப்பது மேல்."
"புதரில் இருக்கும் இரு பறவைக்கு கையில் ஒரு பறவை மேல்."
"பாம்பு கடித்தால் கயிற்றைக் கண்டாலும் பயம்."
"பேசிடின் இவ்வுடல் பிணிகளின் பெட்டகம்."
"படிக்கும்படி இருப்பதே நூலின் முக்கியத் தேவை."
"பிறந்த மாத்திரத்திலே மனிதன் இறக்கத் தொடங்குகிறான்."
"பட்டினிப் பழைய சோறு மேல்"
"பல சொன்னாலும் மக்கள் மனதில் சிலவே நிற்கும்."
"பலர் அழைக்கப்படுகிறார்கள் சிலரே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்"
"பலருக்கு அழைப்பு சிலருக்கே தேர்வு."
"பரமசிவன் தலையில் இருந்தால் பாம்பும் கருடா சௌக்கியமா என்று கேட்கும்"
"பாதுகாப்பான இடத்தை அடையும் மட்டும் பகைவனையும் நட்பாக்கு."
"புயலுக்குப்பின் அமைதி."
"பிற விளக்குகளை ஏற்றித் தன்னையே அழித்துக்கொள்வதே மெழுகுவர்த்தி"
"பிறர்க்கு உதவி தன்னைத் தியாகம் செய்வதே மெழுகுவர்த்தி."
"பூனைக்கு ஒன்பது வாழ்க்கை."
"பூனை மன்னனைக் காண முடியும்."
"பகலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுவும் பேசாதே."
"பழமையைப் பாதுகாத்திடு புதுமையை அறிந்திடு."
"புதிய மதுவை பழைய குப்பிகளில் அடைக்க முடியாது."
"புதுமை எப்பொழுதும் அழகாய்த் தோன்றும்."
"பேய்ச் சுரைக்காயில் நல்ல விதை கிட்டுமா"
"பன்றியின் காதால் பட்டுப் பை செய்ய முடியுமா"
"புலிக்குப் பிறந்தது பூனையாகாது"
"பிள்ளை பெறாதவனுக்கு அன்பு தெரியாது."
"பகுத்தறிவு ஓர் இயல்பான உணர்வு அது அதிகம் இருந்தால் பேரரறிஞன்."
"பகுத்தறிவைப் பரவலாகப் பார்க்க முடிவதில்லை."
"பகுத்தறிவுக் கூர்வாள் பலன்தரும் கொடையே."
"படோடாபத்திற்கு மயங்காத ஆளில்லை."
"போதுமானது கையிலிருந்தால் போகத்திற்குக் குறைவில்லை."
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து."
"பெறமுடியாததற்கு ஏங்க மாட்டான் புத்திசாலி."
"பேசாதிருப்பதும் ஒரு கலையே."
"பேச்சு பித்தளை மௌனம் தங்கம்."
"பொன்னே துருப்பிடித்தால் போக்கிடம் ஏது?"
"பேரிடர் வீரனுக்கு உரைகல் ஆகும்."
"போரிட்டு ஓடுபவன் இன்னொரு நாள் போரிட உயிரோடிருப்பான்."
"பாலம் வந்த பிறகே கடந்து செல்"
"பல தடை கடந்தவன் வாழ்க்கையில் முன்னேறியவன்."
"பிறன்கேடு சூழ்ந்தால் தன்கேடு தானே சூழும்."
"பழக்க வழக்கமே ஈட்டிய சுபாவம்."
"பழக்க வழக்கம் வாழ வைக்கும் சட்டம் சீர் குலைக்கும்."
"பழக்க வழக்கத்தைக் கடைப்பிடிப்பதைவிட மீறுவதாலே அது பெயர்பெறுகிறது."
"பிறர் மீது சேறு பூசுபவன் தன் மீது அதிகம் பூசிக்கொள்வான்."
"பல மன்னர் சூழ்ந்தலைக்கும் மன்னன் இல்லா ஆட்சியே மக்கள் ஆட்சி."
"பேயின் பங்கைக் பேய்க்குக் கொடு."
"பேயை நினைத்த மாத்திரத்தில் வரும்."
"பேயின் வீட்டில் பேய் வராது."
"பேய்க் குணம் கொண்டவனே தீயதை நினைப்பான்."
"பரிசுகளும் தண்டனைகளும் பாதுகாப்பு அரண்கள்."
"பல பறவைகளுக்குக் குறி வைப்பவன் ஒன்றையும் வீழ்த்தமாட்டான்."
"பாணியே எண்ணத்தின் உடை."
"போதையில் மூழ்கினால் வார்த்தைகள் நீந்தும்."
"பசித்தவன் உபதேசம் கேட்கமாட்டான்"
"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்."
"பசி ஆறினால் கோபம் மாறும்"
"பசி அறியாது ருசி."
"போகப்போக எல்லாம் சரியாகும்."
"பொறுத்திரு காத்திரு."
"போகாத வலியைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும்."
"பொறையுடையார் வெற்றியடைவார்"
"பொறுத்தார் பூமியாள்வார்."
"பொறுமைக்கம் ஓர் எல்லையுண்டு."
"பத்து நண்பர் நன்மையைக் காட்டிலும் ஒரு பகைவன் தீங்கு பெரிது."
"பகைவனை நட்பாக்கிக் கொள்."
"புதிய நண்பனையும் பழைய பகைவனையும் நம்பாதே."
"பொறாமை என்றும் மனிதனைச் செழிப்பூட்டியதில்லை."
"பொறாமை தன் மீதே பொறாமைப்படும்."
"பொறாமைப்படுபவன் தன் தாழ்வைத் தானே ஒப்புக்கொள்கிறான்."
"பிறரைச் சுட முயலும் பொறாமை தன்னையே சுட்டுக் கொள்ளும்."
"பொறாமையும் சோம்பலும் மணந்தால் பெறுவது விநோதம்."
"பொறாமை பார்வையைக் கூராக்கும்."
"புதிய உண்மையைவிடப் பழைய தவறே யாவருக்கும் தெரியும்."
"பகுத்தறிவின் நீட்சியே நம்பிக்கை."
"புகழ் அடையப் பல வழியுண்டு."
"புகழ் ஒரு பூதக்கண்ணாடி."
"புகழெனின் உயிரையும் கொடு."
"பழகப் பழக மரியாதை குறையும்"
"பழகாதவரிடம் மதிப்பு மாறும்."
"பெரிய மனிதர்களின் குறைகளும் பெரிதே."
"பற்ற வைக்காவிட்டால் புகை எழாது."
"பெண்களுக்கு முதல் இடம்."
"புழுவைப் போட்டால் தான் மீனைப்பிடிக்க முடியும்."
"போலியே முகத்துதியின் மெய்யான உருவம்."
"பாதுகாப்புக்கு அறிவுறை கூறி சுய பாதுகாப்பை அசட்டை செய்வது முட்டாள்தனம்."
"பாட்டில்லாமல் கூத்தாடுபவனே முட்டாள்."
"பைத்தியமும் முட்டாளும் சாட்சியாக மாட்டார்கள்."
"பிறரை மன்னிப்பவனைக் கடவுள் மன்னிக்கிறார்."
"பொய்யான நண்பர்களைவிட தெரிந்த பகைவன் மேல்."
"பெரியோர் கேண்மை வலிமை சேர்க்கும்."
"பைசா சேர்த்தால் ரூபாய் பல ஆகும்."
"பைசாவைக் கவனித்துக் கொண்டால் ரூபாய் தானே வரும்."
"பெருத்த லாபம் உழைப்பை எளிதாக்கும்."
"பணத்தை வைத்து ஆடுபவன் அதை மதிப்பிடக்கூடாது."
"பந்தயத்தில் ஒருவன் முட்டாள் மற்றவன் திருடன்."
"பெறுவதினும் கொடுத்தல் நன்றே."
"பெரிய மனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர்."
"பெரியவனாக இருப்பதென்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது."
"பெரிய மரமே காற்றைக் கவரும்."
"பேராசைக்காரர்களுக்குக் கை நீளம்."
"பேராசை பெரு நட்டம்."
"பிச்சைக்காரர்களின் பைகளுக்கு அடிகாண முடியாது."
"பழக்கம் வலுவான காற்சட்டை."
"பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள் பிறகு கம்பி வடங்கள்."
"பாதி உலகுக்கு மீதி உலகு எப்படி வாழ்கின்றது என்பது தெரியாது."
"பாதி செய்வதைவிட செய்யாதிருப்பது மேல்."
"பெருத்த மகிழ்ச்சி பேராபத்து."
"பை செல்வத்தால் நிறைவதை விட மனம் மகிழ்ச்சியால் நிறைவது மேல்."
"பிறந்ததுமே சாவு நிச்சயம்"
"பதறிய காரியம் சிதறிப் போகும்"
"பழைய வெறுப்பு சலிப்புறாது."
"பல கரங்கள் பணியை இலகுவாக்கும்."
"பகிரங்கமாக ஒப்புக்கொள்வது ஆன்மாவுக்கு நல்லது."
"பெரும் பெருமைகள் பெருஞ்சுமைகள்."
"பெருமதிப்புக்கு உரிய பதவி ஆபத்தான பதவி."
"பட்டினி கிடக்கையில் உண்ணும் கஞ்சி எளிய நோன்புணவு"
"போலிப் புனிதம் இரட்டை அநீதி."
"பானையில் உலை கொதிக்கும்படி பணம் சம்பாதி."
"பணக்காரன் சட்டத்தை ஆள்கிறான் ஏழை அதில் அடைபட்டுச் சாகிறான்."
"பணக்காரனுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம்."
"படிப்பாளி எப்போதும் தன்னுள்ளே செல்வத்தைக் குவிப்பான்."
"பணத்தைக் கடன் கொடுத்தால் நண்பனை இழப்பாய்."
"பொய்கள் விரைவாய் பரவும்."
"புள்ளி விவரம் பொய் சொல்லாது ஆனால் பொய்யர் புள்ளி விவரம் சொல்வர்."
"பொய்யர்க்குச் சிறந்த ஞாபக சக்தி வேண்டும்."
"போலி அன்புக்காகவே ஓநாய் ஆட்டை விழுங்குகிறது."
"பொன்னையும் காதல் விவகாரத்தையும் மூடி மறைத்திட முடியாது."
"பணிகளில் பார்கலாம் நேசத்தையும் விசுவாசத்தையும்."
"பொறாமையின்றிக் காதல் இல்லை."
"பழங்காதல் துருப்பிடிக்காது பளபளக்கும்"
"புத்திசாலியாய்ப் பிறப்பதைவிட அதிர்ச்டக்காரனாய்ப் பிறப்பது மேல்."
"பிறவிப் புத்திசாலி எவனும் இல்லை."
"பெரும்பான்மை கையில் அதிகாரம்."
"பெரும்பான்மையே வலிமை."
"பொருத்தமானவளைத் திருமணம் செய்"
"பொருத்தம் பார்த்துத் திருமணம் புரி."
"புல் தடுக்கிப் பயில்வான் போல"
"பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ"
"போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை"
"பிள்ளையார பிடிக்கப்போயி குரங்க பிடித்த கதையாயிடுச்சி"
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"
"பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு"
"படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்"
"போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே"
"புயலுக்குப் பின் அமைதி"
"புரட்டாசிக்கருக்கல் கண்ட இடத்து மழை"
"மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்."
"மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்."
"மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி."
"மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை."
"மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்."
"மடை திறந்த வெள்ளம் போல ......"
"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?"
"மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு."
"மண்டையுள்ள வரை சளி போகாது."
"மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது."
"மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை."
"மணலை கயிறாக திரிப்பது போல. .."
"மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை."
"மத்தளத்திற்கு இரு புறமும் இடி."
"மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும்."
"மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்."
"மதில் மேல் பூனை போல ."
"மதுபிந்து கலகம்போல் இருக்கிறது."
"மந்திரத்தால் மாங்காய் விழாது!"
"மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்."
"மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு."
"மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்"
"மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?"
"மரத்தாலி கட்டி அடிக்கிறது."
"மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?"
"மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்"
"மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்."
"மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்."
"மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்."
"மருந்தும் விருந்தும் மூன்று வேளை."
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்."
"மருந்தே யாயினும் விருந்தோடு உண்."
"மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்."
"மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல."
"மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும்."
"மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம்."
"மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்பூரம் ."
"மலை ஏறினாலும் மச்சினன் உதவி தேவை."
"மலை வாயில பொழுது, மக்கள் வாயில சோறு."
"மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்"
"மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?"
"மவுனம் கலக நாசம்."
"மழை விட்டும் தூவானம் விடவில்லை!"
"மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?"
"மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்"
"மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்."
"மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே."
"மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு."
"மனம் உண்டானால் இடம் உண்டு."
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு."
"மனம் உண்டானால் வழி உண்டு."
"மனம் கொண்டது மாளிகை."
"மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை."
"மனம் போல வாழ்வு."
"மனமுண்டால் மார்க்கம் உண்டு"
"மனமுரண்டிற்கு மருந்தில்லை."
"மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை"
"மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி."
"மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!"
"மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்."
"மாடம் இடிந்தால் கூடம்."
"மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?"
"மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?"
"மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?"
"மாடு தொட்டிலிலே மனுசன் வட்டிலிலே"
"மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது."
"மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி"
"மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்."
"மாதா பிதா செய்தது மக்களைக் காக்கும்."
"மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்."
"மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல்."
"மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது,"
"மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை."
"மாமியார்க்குச் சாமியார் இவள்."
"மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்."
"மாரடித்த கூலி மடி மேலே."
"மாரி யல்லது காரியம் இல்லை."
"மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி."
"மாரிக்காலத்தில் பதின்கலமோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி."
"மாரியல்லது காரியம் இல்லை."
"மாரியாத்தாளை பெண்டு பிடிக்கிறவனுக்கு பூசாரி பொண்டாட்டி எம்மாத்திரம்"
"மாரைத்தட்டி மனதிலே வை"
"மாவு இருக்கிற மனதைப்போல், கூழில் இருக்கும் குணம் ."
"மாவுக்குத் தக்க பணியாரம்."
"மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்)"
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!"
"மாற்றானுக்கு இடங் கொடேல்."
"மானங்கெட்ட நாயி நேத்து வந்த ஈனங்கெட்ட நாய எட்டி எட்டி பாத்துதாம்"
"மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு."
"மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?"
"மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன ?இறங்கி என்ன ?"
"மானைக் காட்டி மானைப் பிடிப்பார்."
"மிகச் சிறிய பிரச்சினை/விடயத்திலும், சுமுகமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் முரண்டுப் பிடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் பிரிந்துக் கிடப்பது என்றுப் பொருள்...முள்ளின் முனை எவ்வளவு சிறியது!...அதில் மூன்று பின்னங்களை உண்டாக்குவது எப்படி சரியல்லவோ அப்படி என்பதாம்..."
"மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது."
"மிதமிஞ்சிய சம்போகத்தில் ஈடுபட்டு வீரியத்தை அதிக அளவில் இழப்பவன், பற்பல உடற் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிகவருந்துவர் என்றுப் பொருள்"
"மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?"
"மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்."
"மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை."
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல."
"மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது."
"மீதூண் விரும்பேல்."
"மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?"
"மீன் வித்த காசு நாறுமா?"
"முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?"
"முகத்துக்கு முகம் கண்ணாடி"
"முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு."
"முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?"
"முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்."
"முட்டாளுக்கு கிரீடமா இருக்குறதவிட அறிவாளிக்கு செருப்பா இருக்கலாம்"
"முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது."
"முட்டிக்கு போனாலும் மூன்று பேர் ஆகாது.....(முட்டி என்றால் பிச்சை)"
"முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்."
"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!.."
"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல."
"முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?"
"முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)"
"முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!"
"முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்."
"முதல் கோணல் முற்றுங் கோணல்"
"முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு"
"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா"
"முப்பது நாளே போ, பூவராகனே வா."
"முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை."
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!"
"முயற்சி திருவினை ஆக்கும்."
"முருங்கை பருத்தால் தூணாகுமா?"
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல."
"முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு?"
"முள்ளு முனையிலே மூணு குளமாம்!"
"முள்ளுமேல் சீலைபோட்டால் மெல்ல மெல்லதான் வாங்கவேண்டும்."
"முள்ளை முள்ளால் எடு."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."
"முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?"
"முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)"
"முன் ஏர் போன வழிப் பின் ஏர்."
"முன் வைத்த காலைப் பின் வைக்காதே!"
"முன் வைத்த காலைப்பின் வைக்கலாமா?"
"முன்கை நீண்டால் முழங்கை நீளும்."
"முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்."
"முன்ன பேயாமல் கெடுக்கும், பின்ன பேஞ்சு அழிக்கும்."
"முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"
"மூச்சுல ஒரு படி அரிசிய முழுசாப் போட்டு வடிக்கலாம்"
"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்"
"மூட கூட்டுறவு முழுதும் அபாயம்."
"மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்."
"மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்."
"மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம்."
"மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது"
"மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்."
"மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்."
"மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை."
"மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்."
"மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்."
"மெளனம் மலையைச் சாதிக்கும்."
"மேஞ்ச மாட்டக் கெடுத்துச்சாம் மெனக்கெட்ட மாடு"
"மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்."
"மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிரி"
"மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்."
"மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்"
"மைத்துணன் உதவி மலைபோல"
"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்."
"மொழி தப்பினவன் வழி தப்பினவன்"
"மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்."
"மோரை பெருக்கு, நெய்யை உருக்கு."
"மௌனம் கலகநாசம்."
"மயிரே தலைமுழுகு மாட்டேன் சனிக்கிழமைங்கிற மாதிரி"
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"
"முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை"
"மதியாதார் வாசல் மிதியாதே"
"மரம் ஏறும் கரட்டான் அது போடும் குட்டி வம்ச விருத்திடா"
"மண் பறித்து உண்ணேல்"
"மனந்தடு மாறேல்"
"மாற்றானுக் கிடங்கொடேல்"
"மிகைபடச் சொல்லேல்"
"மீதூண் விரும்பேல்"
"முனைமுகத்து நில்லேல்"
"மூர்க்கரோ டிணங்கேல்"
"மெல்லினல்லாள் தோள்சேர்"
"மேன்மக்கள் சொற்கேள்"
"மைவிழியார் மனையகல்"
"மொழிவ தறமொழி"
"மோகத்தை முனி"
"மாரி அல்லது காரியம் இல்லை"
"மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை"
"மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது"
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"
"மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்"
"மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு"
"மேழிச் செல்வம் கோழை படாது"
"மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு"
"மொழிவது மறுக்கின் அழிவது கருமம்"
"மோனம் என்பது ஞான வரம்பு"
"மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்"
"மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்"
"மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்"
"மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே."
"மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்"
"மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்"
"மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்"
"முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்"
"மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்"
"மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்"
"மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்"
"மௌனம் சம்மதம்"
"மௌனம் கலக நாஸ்தி"
"மௌனம் பாதி சம்மதம்"
"மௌனம் மலையைச் சாய்க்கும்"
"முண்டச்சி பெற்றது மூன்றும் அப்படியே"
"முயற்சி இல்லாது வாழ்வு துடுப்பு இல்லாத படகு போல"
"முக்காலமும் காகம் முழுகிக் குளித்தாலும் காக்கை கொக்காகுமா"
"முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை"
"முத்திலும் சொத்தை உண்டு பவழத்திலும் சொத்தை உண்டு"
"மூப்புக்குச் சோறும் முறத்துக்குச் சாணியும் இடு"
"மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும் முப்பது இலைகள் குப்பையில் விழட்டும்"
"மூடாத உடமை முக்காற் காசும் பெறாது"
"மூடர் கூட்டுறவு முழுவதும் அபாயம்"
"மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான்"
"மெல்லின் நல்லாள் தோள் சேர்க"
"மெதுவாகத்தான் ஓடை பெருகி ஆறாகிறது"
"மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்"
"மேல் உதடு இல்லாதவன் புல்லாங்குழல் ஊத ஆசைப் படலாமா"
"மேனா மினுக்கியைக் கொள்ளாதே மேட்டுக் கழனியை வாங்காதே"
"மேற்கே மழை பேய்ந்தால் கிழக்கே வெள்ளம் வரும்"
"மை விழியார் மனை அகல்"
"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல"
"மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்"
"மொழிந்தால் அது அறமொழி"
"மொழி தப்பியவன் வழி தப்பியவன்"
"மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்"
"மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பதேன்"
"மோசம் நாசம் கம்பளி வேஷம்"
"மச்சான் செத்தா மயிறாச்சு கம்பளி நமக்காச்சு"
"மாரியல்லாது காரியம் இல்லை"
"மயித்தைக் கட்டி மலையை இழுத்தானாம் வந்தா மலை போனா மசுறு"
"மலை ஏறுனாலும் மச்சான் தயவு வேணும்"
"மா பழுத்தால் கிளிக்காகும் வேம்பு பழுத்தால் காக்கைக்காகும்"
"மாதா வயிறு எரிய வாழான் ஒருநாளும்"
"மானத்தின் மேலாடை ஒழுக்கமே"
"மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்"
"மானங்கெட்டவன் ஊருக்குப் பெரிய மனுசன்"
"மிதிபட விரும்பாத புற்று தன் மேல் காளானை வளரவிடாது"
"மின்னுக்கெல்லாம் வறட்சி பின்னுக்கு மழை"
"மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"
"மின்னுவதெல்லாம் பொன்னாகுமா"
"மீனை விரும்பாத பூனையா ஆணை விரும்பாத பெண்ணா"
"மீன் இல்லாக் குளத்தில் வலை வீசுவது வீண் வேலை"
"மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா"
"மீகாமன் இல்லாமல் மரக்கலம் ஓடாது"
"முண்டனுக்கு இரண்டு ஆள்"
"முள்ளுப் போட்ட கொல்லைக்கு மூன்று வழி"
"முதலையும் மூர்க்கனும் தான் கொண்டது விடாது"
"முற்றின மரத்திலதான வயிரம் இருக்கும்"
"முழு மூச்சுடன் இறங்கினால் முடியாதது ஒன்றுமில்லை"
"முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி"
"முன் ஏர் போன வழி பின் ஏர் போகும்"
"முதல்நாள் சமைத்த கறி அமுதெனினும் உண்ணாதே"
"முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது"
"முட்டாளுக்கு மூணு வேளையும் பழைய சோறு"
"முகத்துக் அஞ்சி மூத்தாரோடு போனால் அகமும் நாசம் குலமும் நாசம்"
"முள்ளு மேல சேலை பட்டால் மெல்ல மெல்ல எடுக்கணும்"
"மருந்துக்கு அடிமையாவதை விட மனைவிக்கு அடிமையாகலாம்"
"மலையைப் பார்த்து நாய் குரைத்தால் மலைக்குச் சுமையா நாய்க்குச் சுமையா"
"மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு"
"மந்திரம் கால் மதி முக்கால்"
"மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்தான்"
"மனிதனை மனிதன் அறிவான் மடநாயை தடிக்கொம்பு அறியும்"
"மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் கொட்டம் அடங்கட்டும்"
"மருந்துக்குத் தெரியுமா மருத்துவன் குணம்"
"மரம் சுட்டால் கரியாகும் மயிர் சுட்டால் என்னாகும்"
"மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்கலாம் கங்கை தீட்டானால் எங்கே மூழ்குவது"
"மழை பெய்வதும் பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கும் தெரியாது"
"மனப்பொருத்தம் இருப்பின் மற்ற பொருத்தம் வேண்டாமே"
"மடியிலே கனமிருந்தால் வழியிலே பயமிருக்கும்"
"மரக்கட்டை மாதமெல்லாம் குட்டையில் ஊறினாலும் முதலையாக முடியாது"
"மனசாட்சி இல்லையென்றால் மனுசனும் பன்னிதான்"
"மழையறியா நதியா நதியறியா மழையா"
"மது உள்ளே போனால் மனது வெளியே வரும்"
"மருந்தேயானாலும் விருந்தோடு உண்"
"மரத்தை இலை காக்கும் மானத்தை பணம் காக்கும்"
"மனத்திலிருக்கம் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே"
"மேய்க்காமல் கெட்டது மாடு பார்க்காமல் கெட்டது காடு"
"மாரிக் காலத்தில் பதின்கல மோரும் கோடைக் காலத்தில் ஒருபடி நீரும் சரி"
"மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது"
"மாமியார் உடைச்சா மண்குடம்; மருமவ உடைச்சா பொன் குடம்"
"முள்ளிக்கா சோத்துக்கு மூலை ஒதுங்கி நிக்குறா; கள்ளிக்கா சோத்துக்கு கதவு ஒண்டி நிக்குறா"
"முக்கி முக்கி இடிச்சவளுக்கு மூணு கொலுக்கட்டை; எட்டி எட்டி பார்த்தவளுக்கு ஏழு கொலுகட்டை"
"மொளச்சு மூணு எலை உடுல."
"மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா?"
"மேயுற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதையா"
"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்."
"மாமியா செத்த ஆறாம் மாசம் மருமகளுக்கு கண்ணுல தண்ணீ வந்துச்சாம்."
"மூங்கில் காட்டுக்குள்ளார ரகசியம் பேசினாமாதிரி."
"மச்சித் தானியமும் குறையக்கூடாது. மக்கள் முகமும் வாடக் கூடாது"
"மூக்கு இருக்கிற வரை சளியும் இருக்கும்"
"முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்"
"மக வரமுன்ன பூட்டிக்க கழட்டிக்க; மருமக வரமுன்ன உண்டுக்க திண்ணுக்க"
"முடி உள்ள மகாராசி முன்சடை போடுவா,பின்சடை போடுவா; மொட்டைத் தலைக்காரி என்ன செய்ய முடியும்"
"மூளை செய்யாததை முழங்கால் செய்யும்."
"மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும்."
"மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்."
"மடியில கனம் இருந்தால்தானே மனசுல பயம் இருக்கும்."
"மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்."
"மத்தளத்துக்கு இரு புறமும் அடி."
"மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்."
"மான் என்று சொன்னால் புள்ளியா குறைந்துவிடும்?"
"மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்."
"மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை."
"மேயற ஆடு பில்ல கொம்புல கட்டிக்கிட்டா போகுது?"
"மீன் குஞ்சிக்கு நீந்தக் கத்துத் தரனுமா?"
"மானம் போனாப் போகுது, என் தொப்ப ரொம்பனா போதும்."
"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே."
"மழை நின்றும் தூரல் நிற்கவில்லை."
"மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்."
"மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்."
"மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி."
"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?"
"மண்டையுள்ள வரை சளி போகாது."
"மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்."
"மத்தளத்திற்கு இரு புறமும் இடி."
"மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்."
"மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு."
"மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்."
"மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்."
"மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்."
"மருந்தும் விருந்தும் மூன்று வேளை."
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்."
"மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்."
"மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?"
"மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்."
"மவுனம் கலக நாசம்."
"மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்."
"மழை விட்டாலும் தூவானம் விடவில்லை."
"மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே."
"மனமுரண்டிற்கு மருந்தில்லை."
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு."
"மனம் உண்டானால் வழி உண்டு."
"மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை."
"மனம் போல வாழ்வு."
"மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி."
"மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை."
"மாடம் இடிந்தால் கூடம்."
"மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?"
"மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?"
"மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது."
"மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்."
"மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்."
"மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்."
"மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்."
"மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை."
"மாரடித்த கூலி மடி மேலே."
"மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி."
"மாரி யல்லது காரியம் இல்லை."
"மாவுக்குத் தக்க பணியாரம்."
"மாற்றானுக்கு இடங் கொடேல்."
"மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?"
"மானைக் காட்டி மானைப் பிடிப்பார்."
"மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது."
"மின்னுவது எல்லாம் பொன்னல்ல."
"மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?"
"மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை."
"மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது."
"மீதூண் விரும்பேல்."
"முகத்துக்கு முகம் கண்ணாடி"
"முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?"
"முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்."
"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?"
"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா"
"முதல் கோணல் முற்றுங் கோணல்"
"முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்."
"முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை."
"முருங்கை பருத்தால் தூணாகுமா?"
"முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்."
"முள்ளை முள்ளால் எடு."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."
"முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?"
"முன் ஏர் போன வழிப் பின் ஏர்."
"முன்கை நீண்டால் முழங்கை நீளும்."
"முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?"
"முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"
"மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்."
"மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை."
"மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்."
"மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்."
"மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்."
"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே."
"மொழி தப்பினவன் வழி தப்பினவன்."
"மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்."
"மெளனம் மலையைச் சாதிக்கும்."
"மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்."
"மூச்சடக்கிக் காட்டினால்தான் முனியென ஏற்பாரா"
"மேல் விழுந்து பூசிக்கொண்டால் மேவாது நட்பு."
"முனைப்பான விளைவுகளே விபத்துகள் ஆகும்."
"முற்றிய பிறகு பெற்ற அறிவுரை தந்திடும் வேதனை."
"முதுமை எண்ணுகிறது இளமை துணிகிறது."
"முதுமை துன்பம் தரும் சக பயணி."
"முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது."
"முதுமை எரிச்சலூட்டும் விருந்தாளி."
"முதுமை பக்குவத்தின் அடையாளம்."
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல."
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"
"மௌனம் கோப அழிவிடம்"
"முட்டை பொறியும் முன் குஞ்சுகளை எண்ணாதே"
"மனக்கோட்டை கட்டாதே."
"மோசமானதை எதிர்பார் சிறந்ததனைக் கைப்பற்று."
"முள்ளில் ரோசா."
"முயற்கொம்பு மான்கொம்பு."
"மற்போர் இடுவோர்க்கு மயிற்பீலி உதவாது சொற்போர் இடுவோர்க்கு உவமைகள் உதவா."
"முகம் சுளிக்கும் வாதமே மோசமான உரையாடல்."
"முதுகு முறியும் வரைதான் சுமையைத் தாங்க முடியும்."
"மோசமான காவல்காரனுக்குத் திருடன் கண்ணில் படமாட்டான்."
"முதல் தாக்குதல் பாதி வெற்றி."
"மௌனமாயிருந்தாலும் அழகு பேசிவிடும்."
"மனிதன் நடுங்கும் பகைவருள் முதன்மையானதும் மோசமானதும் படுக்கை ஒன்றே."
"மகா வித்வானும் அரிச்சுவடியில்தான் தொடங்க வேண்டும்."
"முடித்தல் என்பது தொடங்குவது ஆகும்."
"முடியும் என்று நம்புபவன் முடித்துக்காட்டுவான்."
"மெல்ல முடியாத அளவுக்கு கடிக்காதே."
"மேற்குடி மக்களால் நற்பயனும் உண்டு தீப்பயனும் உண்டு."
"மலர்கள் பூத்தால் வசந்தம் தொடங்கும்."
"மனித உடலினும் புனிதம் வேறில்லை."
"மழைக்கு முன் குடையைச் சீர்செய்"
"முன் எச்சரிக்கை உள்ளவன் தவறுசெய்வது அரிது."
"மாறும் தன்மை ஒன்றே மாறாது என்றும் நிற்கும்."
"மாற்றமே இயற்கையின் நியதி."
"மாற விரும்புவது பாதுகாப்பின் அறிகுறி."
"முடியைப் பொசுக்கிக் கரியாக்க முடியுமா"
"மலடிக்கு வருமா மழலைமேல் அன்பு"
"மழலைச்செல்வமே ஏழையின் செல்வம்."
"மனைவி வரும்வரையே மகன் வாழ்நாள் எல்லாம் மகள்."
"மேலே ஏறாதவன் கீழே எப்படி விழுவான்."
"முடியை எட்ட அடியில் தொடங்கு."
"மழையோ வெயிலோ வருவது வரட்டும்."
"மேலிருந்து வருவதை மறுத்துவிடாதே."
"முயலுடன் சேர்ந்தால் ஓடிப்போ நாயுடன் சேர்ந்தால் வேட்டையாடு."
"முகஞ்சுளிப்பவனுக்கு நல்வரவில்லை."
"மரியாதை கொடுதது மரியாதை வாங்கு."
"மிச்சம் வைக்காத இடத்தில் எதுவும் நிரம்பாது."
"மற்றவர் சொன்னதை நினைவுகூர்வது உரையாடல் அல்ல மற்றவர் நினைவு கூர விரும்புவதை உரைப்பதே உரையாடல்."
"மார்பில் விழுப்புண் பெறுபவனே வீரன்."
"மகனை ஒன்றுக்கும் உதவாதவனாய் வளர்ந்திருந்தால் திருடனாவான்."
"முடியும் போதே மகளுக்கு மணம் முடித்திடு."
"மரணம் நாட்காட்டி பார்க்காது"
"மரணத்திற்கில்லை நாளும் கோளும்."
"மருத்துவரையும் எதிர்த்து வென்றிடும் மரணம்."
"முதல் மூச்சே மரணத்தின் தொடக்கம்."
"முடியும் விதம் நல்ல மரணம் காட்டிடும்."
"மனிதன் ஒருமுறை மட்டுமே சாவான்."
"மரணம் எல்லாக் கடனையும் அடைத்திடும்."
"மரணம் நம் நல்லதை இழக்கச் செய்வதைவிட உண்மையில் கெட்டதிலிருந்து விடுவிக்கும்."
"மரணம் யாரையும் விட்டு வைக்காது."
"முதலில் தகுதி பெறு பின்னர் விரும்பு."
"முதலில் விரும்பு பின்னர் அடை."
"மனிதர் பலராயின் கருத்துப் பலவாம்."
"மனங்கள் ஒரே மாதிரியானால் வகைகள் விலைபோகா."
"முரட்டுக் குதிரைக்கு வலுத்த கடிவாளம்."
"மனதில் பதிய வேண்டும் என உடை உடுப்பவள் மனதில் பதியாமலே போய்விடுவாள்."
"மொந்தைக் குடியன் மொடாக் குடியனாகி விடுவான்."
"மதுவில் நம்பிக்கை உள்ளது."
"மண்ணாள்வோனுக்கு வேண்டும் ஆயிரம் காதும் கண்ணும்."
"மதிய உணவின் பின் சற்று ஓய்வுகொள் இரவு உண்டபின் ஒரு கல் நட."
"முடிவு நம் கையில் இல்லை இறைவன் கையில்."
"முடிவிலிருந்தே நாம் தொடங்குகிறோம்."
"முடிமகனும் குடிமகனும் சம மகனே."
"முன்னுதாரணமே உபதேசத்தைவிட மேலானது."
"மற்றவர்கள் தவறுகண்டு தான் கற்பதே நல்லது."
"மக்கள் ஆதரவு புகழாகாது."
"மக்கள் ஏமாளிகள் என்பதற்குப் புகழே சான்று."
"மலியும் பொருள்களுக்கு மவுசு குறையும்."
"முன் உணர்வான அச்சமே பாதுகாப்பின் தாய்."
"மனச்சான்று தன் தவற்றுக்குச் செலுத்தும் வரியே அச்சம்."
"முயல் தேட கான் பணியாதே."
"மறைத்து வைப்பவன் கண்டுபிடிப்பான்."
"மனம் நினைப்பதை முகத்தில் காணும் கலை அரிது."
"முந்தி வந்தவனுக்கு முதலில் சோறு."
"முதன்மையானதற்கு முதலிடம் கொடு."
"முதலில் சிந்தி பிறகு பேசு."
"முதலில் சோதி பின்னர் நம்பு."
"முதல் அபிப்பிராயமே சிறந்த அபிப்பிராயம்."
"மீன் எப்பொழுதும் தூண்டில் பின்தான் செல்லும்."
"மீன் பிடித்த பின் வலைக்கு என்ன வேலை"
"முகத்துதி செய்பவனுக்கு விரோதிகள் இல்லை."
"முகத்துதி செய்வது எளிது திருப்திப்படுத்துதல் கடினம்."
"முட்டாள்களின் உணவு முகத்துதியே."
"மலருடன் கூறு."
"மலர்களைச் சேகரி மொட்டுகளை விட்டுவிடு."
"மலர்கள் வார்த்தைகள் குழந்தைக்குக் கூடப் புரியும் வார்த்தைகள்."
"மலர்களைத் தேடினால் மலர்களைக் காண்பான்."
"மற்றவர் முட்டாள்தனத்தில் ஆதாயம் தேடு."
"மதி மீது காதல் நிதி தராது."
"முட்டாள்தனம் ஒரு தீராத நோய்"
"முட்டாள்தனத்தைப்போல் தீராத நோய் இல்லை."
"முட்டாளின் பணம் விரைவில் அவனைப் பிரிந்து விடும்."
"முட்டாள் தன் மண்டையை உடைத்துக்கொள்ளத்தானே தடி எடுப்பான்."
"முட்டாளும் மௌனியானால் அறிவாளி."
"முட்டாள் பிடித்த சட்டி விரைவில் சூடாகும்."
"முட்டாளுக்கு வழங்கப்படும் அறிவுரை ஒரு காதில் நுழைந்து மறு காதில் வெளியே வந்துவிடும்."
"முட்டாள்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்"
"முட்டாள்கள் முற்றிலும் மடிந்து விடவில்லை."
"முட்டாளுடன் சேர்ந்து சிரிப்பதைவிட அறிவாளியுடன் சேர்ந்து அழுவது மேல்."
"முட்டாளுக்கே அதிர்ச்டம் அடிக்கும்."
"முட்டாளைக் கடை வீதிக்கு அனுப்பினால் முட்டாளாகவே திரும்புவான்."
"முட்டாள் மற்றவர்களையும் முட்டாளாக்குவான்."
"முட்டாள்களின் உபதேசம் முக்தி தராது."
"முன்னெச்சரிக்கை ஒரு பாதுகாப்புக் கவசம்."
"மோசமான நிலைமைக்குத் தயாராகு நல்ல நிலை தானே தன்னைக் காத்துக்கொள்ளும்."
"மழை தொடங்குமுன்னே ஓட்டையை அடை."
"மன்னிப்பதை விட மறப்பது நன்று."
"மன்னிப்போம் மறப்போம்."
"மறக்க வேண்டும் என்பதால் மறக்கிறோமே தவிர தானாகவே மறப்போம் என்பதால் இல்லை."
"மன்னிப்பவனே வெற்றி பெறுகிறான்."
"மன்னிப்பு குற்றவாளிகளை உற்பத்தி செய்யும்."
"மன்னிப்பதை விடத் தவம் வேறில்லை."
"முட்டாள் அதிர்ச்டம் முட்டும்."
"மதிப்பும் ஆதாயமும் ஒரே கோணியில் இராது."
"மேதைமை பைத்தியம் போன்றது."
"மேதைமை முக்கியமாக சக்தியின் தொழிலே."
"மற்றவர்களுக்குக் கொடுப்பவன் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான்."
"மனிதர்கள் போவார்கள் வருவார்கள் நான் என்றும் இருப்பேன்."
"மேலைநாடு போயின் தாளாத செல்வம்."
"மனிதன் நினைக்கிறான் கடவுள் முடிக்கிறார்."
"மனிதன் விரும்புகிறான் கடவுள் முடிவு செய்கிறார்."
"மனிதன் முடிந்ததைச் செய்கிறான் கடவுள் விரும்பியதைச் செய்கிறார்."
"மேல் இருந்து ஒழுகும் ஒரே பாத்திரம் அரசுதான்."
"மனிதனுக்கே நன்றி சொல்லாதவன் கடவுளுக்கு நன்றி சொல்லமாட்டான்."
"மாமனிதர்களாகப் பிறக்கிறார்கள் சிலர் சிலர் மாபெறும் மனிதர்களாக ஆக்கப்படுகிறார்கள் சிலர் மாபெறும் மனிதத்தனம் திணிக்கப்படுகிறது."
"முயன்று இயல்பாவதே பழக்கம்."
"மனிதர்கள் பலவற்றைப் பகுத்தறிவால் செய்யாமல் பழக்கத்தாலேயே செய்கின்றனர்."
"முழுசை விடப் பாதி பெரிது."
"மகிழாத உள்ளம் ஏழை உள்ளமே."
"மகிழ்ச்சி கிடைத்ததும் தீர்த்துவிடாதே."
"முடிந்த பொழுது மகிழ்ச்சியாயிருந்து விடு ஏனெனில் நீ நீண்ட காலமாக இறக்கும் நிலையிலுள்ளாய்"
"மகிழ்ச்சி பொறாமையை வரவழைக்கும்."
"மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவனே உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறான்."
"மகிழ்ச்சியாயிருப்பவருக்கு சேவை செய்பவனே மகிழ்ச்சியாக இருப்பான்."
"மெதுவாக அவசரப்படு."
"மகிழ்ச்சியில்லாதவர்களை விட்டு விலகும் கடைசிப்பொருள் நம்பிக்கையே."
"மிக நல்லதே நடக்கும் என நம்புவோம்."
"மிக நல்லது நடக்கும் என நம்பு படுமோசமானதற்குத் தயாராயிரு."
"முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து."
"மணாளனைப் போலவே மனைவி."
"மனதின் இருளே அறியாமை."
"மிகச் சிறந்தவற்றையும் தவறாகப் பயன்படுத்தலாம்."
"முள்ளில்லாத ரோசா நல் ரோசா இல்லை."
"முட்டாள்களின் அகராதியில்தான் முடியாது என்ற சொல்லிருக்கும்."
"மற்றவன் பானையில் என்ன கொதிக்கிறது என்று விசாரிக்காதே."
"முதலாளியும் தொழிலாளியும் சமம்."
"மகிழ்ச்சி மகிழ்ச்சியை மகிழ்விக்கும்."
"மகிழ்ச்சியைச் சிறையிலடைக்காதே!"
"மகிழ்ச்சியே மாமருந்து."
"மன்னனுக்கு என்றும் மரணம் இல்லை."
"மன்னன் என்றும் மன்னனே."
"மன்னன் தவறே செய்திட மாட்டான்"
"மன்னர்களுக்கு அடிமைகள் அவசியம் தேவை."
"மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கும் வேற்றுமை இல்லை."
"மூன்று மணி என்பது செய்ய விரும்பியதைச் செய்ய எப்போதும் அதிகப் பிந்தியான அல்லது அதிகம் முந்தியான நேரம்."
"மன்னன் நெறிப்படியே சட்டம் செல்லும்."
"மற்றவர் அனுபவத்தில் கற்பது நன்று."
"முதுமையிருப்பதன் பொருள் இதயத்தில் ஞான ஒளி பெற்றுள்ளாய் என்பதாகும்."
"மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது."
"மகிழ்ச்சியை மறந்திருக்கும் காலம் வரை வாழ்த்தவர்களே நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்."
"மதிப்பும் காதலும் ஒருபோதும் விற்பனைச் சரக்கல்ல."
"மறைந்துள்ள பாதைகளை காதல் அறியும்."
"மனம் இருந்தால் மார்க்கமுண்டு"
"மதிப்பில்லாத இடத்தில் காதல் போய்விடும்."
"மனிதன் மனிதனை தின்று பிழைத்திடலாமா"
"முயலோடு ஓடுபவன் நாய் கொண்டு வேட்டையாட முடியாது."
"மனிதர்கள் வளர்ந்த பிள்ளைகளே."
"மனிதனே விவகாரங்களின் நாயகன்."
"மனிதன் ஒரு சமுதாய விலங்கு."
"மகிழ்சியான இதயம் நாளெல்லாம் நன்கு இயங்கும்."
"மகிழ்ச்சியாகவும் புத்திசாலியாகவும் இரு."
"மகிழ்ச்சியாக விருந்தளிப்பவன் சந்தோசமான விருந்தாளிகளைப் பெறுவான்."
"மனிதனே அனைத்துக்கும் அளவுகோல் ஆவான்."
"மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்"
"மூளை செய்யாததை முழங்கால் செய்யும்"
"மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும்"
"முதலைக் கண்ணீர் வடிப்பது போல"
"யதார்த்தவாதி வெகுசன விரோதி."
"யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?"
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்."
"யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்)."
"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே."
"யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே."
"யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்."
"யானைக்கும் அடி சறுக்கும்"
"யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்."
"யானைப் பசிக்கு சோளப் பொரி."
"யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து உள்ள வையின்னானாம்"
"யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை."
"யதா ராஜா ததா பிரஜா"
"யதார்த்தவாதி வெகுஜன விரோதி"
"யானைக்கும் அடி சறுக்கும்"
"யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே"
"யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன்"
"யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்"
"யாம் பெற்ற பயன் இந்த வையகம் பெறுக"
"யானை அசைஞ்சு தின்னும் வீடு நின்னு தின்னும்"
"யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ள வை"
"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்."
"யார் கடன் வைத்தாலும் மாரி கடன் வைக்காதே"
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்."
"யார் ஆற்றுவார்? நாள் ஆற்றும்."
"ய்க்கு இடம் கொடேல்."
"யானைக்கும் அடி சறுக்கும்."
"யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்."
"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே."
"யாரிடமும் குரோதம் கொள்ளாதே எல்லோரிடமும் அன்புகொள்."
"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்."
"யாரையும் அதிகம் நேசிக்கிறோமோ அவரிடம் குறைவாகவே சொல்கிறோம்."
"யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் வரும்."
"ராங்கி மிஞ்சி ரூம் தேடுகிறது; ஆக்கிப்போட ஆள்தேடுகிறது."
"ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது."
"ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி."
"ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்."
"ரிஷிப் பிண்டம் ராத்தாங்காது"
"ருசி கண்ட பூனை உறிக்குத் தாவாமல் இருக்குமா"
"ராவுத்தரே கொக்கா பறக்கிறபோது குதிரை கோதுமை ரொட்டி கேட்டிச்சாம்"
"ரோசக்காரனுக்கு கடனக் குடு; மழுமாரிக்கு பொண்ணக் குடு"
"ருத்திராட்சம் தரித்தால் முனிவனாகிவிட முடியாது"
"ராசா மெச்சியவள் ரம்பை"
"லொட லொட என ஆடும் லாடத்திற்கு ஆணி அறைய வேண்டும்."
"வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்."
"வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது."
"வடக்கே கருத்தால் மழை வரும்."
"வட்டி ஆசை முதலுக்கு கேடு."
"வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம் அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்"
"வணங்கின முள் பிழைக்கும்."
"வணங்குன புல்லு தைக்கும்."
"வண்ணாத்தி மூத்திரம் தண்ணியில"
"வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்."
"வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?"
"வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான்."
"வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!"
"வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான்."
"வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!"
"வந்தன்னைக்கு வாழையில மறுநா தைய இல மூணாம் நா கையில"
"வந்தா வரவுல வை வராட்டி செலவுல வை."
"வரவு எட்டணா செலவு பத்தணா."
"வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு."
"வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)"
"வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை"
"வருந்தினால் வாராதது இல்லை."
"வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்."
"வருமுன் காப்பதறிவு."
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்"
"வல்லான் வகுத்ததே வாய்க்கால்"
"வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?"
"வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று."
"வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது"
"வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்."
"வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல....."
"வளவனாயினும் அளவறிந் தளித்துண்"
"வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை."
"வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்"
"வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்."
"வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாய் ....."
"வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை."
"வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு."
"வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்."
"வாய்க்கேற்ற கை"
"வாய்ச்சொல் தலசுமை (வாய்ச்சொல் தலமூட்ட)"
"வாயிலிருக்கிறது வழி!"
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்."
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.(பிழைத்துக்கொள்ளும்)"
"வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்."
"வாழ்வும் தாழ்வும் சில காலம்."
"வாழு, வாழ விடு."
"வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்."
"வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்."
"வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்குமுண்டோ?"
"வாழையடி வாழையாக ........."
"வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது"
"விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?"
"விடிய விடிய வெகுமானம் விடிஞ்சா அவமானம்."
"விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்."
"விண் பொய்த்தால் மண் பொய்க்கும்."
"வித்தரக்கள்ளி(விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு குத்திட்டாம் ."
"வித்தைக்கு அழிவில்லை."
"விதி எப்படியோ மதி அப்படி."
"விதியை மதியால் வெல்லலாம்"
"விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?"
"விந்து விட்டான், நொந்து கெட்டான்!"
"வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?"
"விரலுக்குத் தகுந்த வீக்கம்."
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்."
"விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?"
"விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?"
"வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக."
"விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்"
"விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்சலம்"
"விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?"
"விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்"
"விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமா?"
"விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது."
"விளையும் பயிர் முளையிலே தெரியும்."
"விற்கப்போனால் குதிரை விலை, வாங்கப்போனால் ஆனை விலை."
"விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு"
"வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்"
"வீட்டில் எலி வெளியில் புலி."
"வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்!"
"வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை"
"வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை."
"வீட்டுக்கு வீடு மண் வாசற்படி"
"வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது."
"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்."
"வீடு கெடக்குற கெடையில எட்டுக்கோட்டைச் சிரிப்பாணியாம்"
"வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது."
"வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்."
"வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை."
"வீம்புக்கு ஊம்பினாற் போல!"
"வெக்கங்கெட்ட பயல் விருந்துக்குப் போனானாம், கூட ஒரு சொக்கன் குத்தவைக்கப் போனானாம்."
"வெட்கபடுற வேசியும் வெட்கபடாத பொண்டாடியும் உதவமாட்டார்கள்"
"வெட்டரிவாளுக்கு விரையலா காய்ச்சலா."
"வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்."
"வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு."
"வெட்றவன தான ஆடு நம்பும்."
"வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல...."
"வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!"
"வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்."
"வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்."
"வெண்ணை போல் உழவு, குன்று போல் விளைவு"
"வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல...."
"வெந்த முகத்தைக் காட்டி விருந்தாளிய அனுப்பாத"
"வெயிலின் அருமை நிழலில் தெரியும்!"
"வெளங்தாவன் வேலைக்கு போனான்னாம் வேலெ ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம்."
"வெளஞ்சா வள்ளி திருமணம் வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்"
"வெள்ளத்த தான ஈ மொய்க்கும்."
"வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்."
"வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்."
"வெளுத்ததெல்லாம் பாலல்ல."
"வெறுங்கை முழம் போடுமா?"
"வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்"
"வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல ."
"வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல ."
"வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்-னு பேரு வச்சது மாதிரி."
"வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்."
"வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!"
"வேதாரண்யம் விளக்கழகு"
"வேலிக்கு ஓணான் சாட்சி."
"வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு."
"வேலியே பயிரை மேய்ந்தாற் போல..."
"வேலில போனா ஓணான எடுத்து வேட்டில உட்ட கதையா"
"வேலிலா போற ஓணான வேட்டிக்குள்ள உட்டாப்ல."
"வேலை இல்லா மாமியா மருமவனை போட்டு ராராட்டினாளாம்"
"வேலை வரும்போதுதான் பேல வரும்."
"வேளைக் கள்ளிக்குப் பிள்ளை சாக்கு."
"வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது."
"வைக்கப்போருல நாய் படுத்தாற்போல தலைவர் உள்ளார்"
"வைக்கோற் போர் நாய் போல."
"வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை."
"வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி."
"வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது."
"வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?"
"வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு."
"வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது."
"வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு."
"வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை"
"வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே,"
"வீரியம் பேசவான் காரியம் செய்யான்"
"வீதியில போகிற வம்பை விலைக்கு வாங்காதே"
"வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள உட்டானாம்"
"வீடு வாழ்ந்தால் நாடு வாழும்"
"வீட்டுச் செல்வம் மாடு தோட்டச் செல்வம் முருங்கை"
"விள்ளி அறிவாளோ காமரசம்"
"வெளுத்ததெல்லாம் பாலாகுமா? கறுத்ததெல்லாம் தண்ணீராகுமா?"
"வெற்றுப் பானை சத்தம் செய்யும்"
"வெறும் வாயை மெல்கிறவன் அவல் கிடைத்தால் விடுவானா"
"வெறும் வாயை மெல்றவனுக்கு அவல் கிடைச்ச கதையாம்"
"வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தததைப் போல"
"வெட்கமும் கூச்சமும் வறுமைக்கு விரோதி"
"வெட்கத்துக்குப் புரிகிறது சட்டத்துக்குப் புரியாது"
"வெட்கப்படும் வேசியும் வெட்கங்கெட்ட சம்சாரியும் காரியத்துக்கு ஆகாதவர்கள்"
"வெற்றியும் சாதனையும் அவனவன் காரியத்தில"
"வெற்றியும் தோல்வியும் வெகு சகஜம்"
"வேலை செய்தால் கூலி வேஷம் போட்டால் காசு"
"வேலையைப் பார்த்து பெண்ணை எடு சாலையைப் பார்த்து ஊருக்கு நட"
"வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு"
"வேளை அறிந்து பேசு நாளை அறிந்து பயணம் செய்"
"வேகமாக முடிவெடுப்பதை விட விவேகமாக முடிவெடு"
"வேகத்துக்கும் தேவை விவேகம்"
"வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்"
"வேண்டாத மருமக கைபட்டாலும் குத்தம் கால்பட்டாலும் குத்தம்"
"வைக்கத் தெரியாம வைக்கப் போரில் வச்சானாம்"
"வைத்தியர் பிள்ளை நோயாளி வாத்தியார் பிள்ளை கோமாளி"
"வைகறைத் துயில் எழு"
"வையார்க்கு இன்பம் இல்லை பொறுத்தார்க்கு துன்பம் இல்லை"
"வௌவால் அடித்துத் தின்னும் அணில் கடித்துத் தின்னும்"
"வைத்தியன் காய்கறிக் கடைக்குப் போனது போல"
"வஞ்சகம் பேசேல்"
"வல்லமை பேசேல்"
"வாதுமுற் கூறேல்"
"வித்தை விரும்பு"
"வீடு பெறநில்"
"வெட்டெனப் பேசேல்"
"வேண்டி வினைசெயேல்"
"வைகறை துயிலெழு"
"வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்"
"வானம் சுருங்கின் தானம் சுருங்கும்"
"விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்"
"வீரன் கேண்மை கூர் அம்பாகும்"
"வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை"
"வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை"
"வைகல் தோறும் தெய்வம் தொழு"
"வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்"
"வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்"
"வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்"
"வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்"
"வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்"
"வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்"
"வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்"
"வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்"
"வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்"
"வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்"
"வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்"
"வண்ணான் நாவிதன் வாத்தியார் மருத்துவச்சி மருத்துவன் கூலி கொடாதவர் கேலி பெறுவர்"
"வாய் உள்ளவன் வாசற்படி தாண்டி வருவான்"
"வாய்ச் சொல் தலைச்சுமை"
"வாழாத பொண்ணுக்கு வாய் ஜாஸ்தி விளையாத கொள்ளுக்கு வேலை ஜாஸ்தி"
"வாய்க் கொழுப்பு சீலையில் ஒழுகுதாம்"
"வாதம் தோற்றால் வசவு உண்டாகும்"
"வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு"
"வாடகைக் குதிரை களைப்பு அடையாது"
"வாழ்வு சிறிது கலை பெரிது"
"வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளாதே"
"வாணியன் ஆசை கோணி கொள்ளாது"
"வாழை வடக்கீனும் வான் கழுகு மேற்கீனும்"
"வாழ்வும் சில காலம் தாழ்வும் சில காலம்"
"வில் வளைவதும் வேங்கை பதுங்குவதும் வேலையாகத்தான்"
"வில்லிக்கு ஊற்றும் தண்ணீரை வேலி மேல் ஊற்று"
"விதி வழியே மதி செல்லும்"
"வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?"
"விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராவணன் சித்தப்பா என்றானாம்"
"விரும்புவதை பெற முடியாவிட்டால் பெற முடிந்ததை விரும்பு"
"விரை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்"
"வில்லம்பை விட சொல்லம்பே வேதனை தரும்"
"விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகாது"
"விரும்பியது தவறின் கிடைத்ததை விரும்பு"
"வில்வம் தின்பார் பித்தம் போக பனம்பழம் தின்பார் பசி போக"
"விறகு கோணல் ஆனாலும் நெருப்புப் பற்றாதோ"
"விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதா"
"வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்"
"வீதிக்கு ஊத்துற தண்ணீரைக் கூட வேலி மேல ஊத்து"
"வருவது வழியில் நில்லா வழியே ஏகுக வழியே மீளுக"
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்"
"வளர்த்த கடா மார்பில் பாய்கிறது"
"வழுவழுத்த உறவினும் வைரம் பற்றிய பகை வேண்டும்"
"வடக்குப் பார்த்த மச்சு வீட்டை விட தெற்கே பார்த்த குச்சு வீடு நல்லது"
"வடக்கத்தி யானையும் வயிற்று வலியையும் நம்புவது ஆகாது"
"வயிறு நிரம்பினால் பானையை மூட மாட்டானாம்"
"வயிற்றைக் கட்டியவனுக்கு ஆம்படையான் வாயைக் கட்டினவனுக்குப் பிள்ளை"
"வரப்பே தலையணை வாய்க்காலே பஞ்சு மெத்தை"
"வதந்தி வாந்தியை விட வேகமானது"
"வட்டில் நிறைய மீனைக் கண்டால் வயிற்றுக்குக் கொண்டாட்டம்"
"வளைந்த மூங்கில் அரசன் முடி மேலே வளையாத மூங்கில் கழைக்கூத்தன் காலின் கீழே"
"வாசல் திண்ணையில புருஷன் கிடக்கான் வலுவா இருக்கிறவன் புறக்கடையில"
"விடிஞ்சாத் தெரியும் அத்தையா மனைவியான்னு"
"வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட முள்ளு ஏறுச்சாமா"
"வாழைப்பழத்தை கொண்டு போனவ வாசப்படியில வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல"
"வெண்ணெய் உருண்டு வரையில தாளி உடைஞ்ச கதையாட்டம்."
"வாழமாட்டாதவன் வவானி மேல போறானாம்மா; பொழக்கமாட்டாதவன் பொதன்கெழம சந்தை மேல போறானாமா"
"வெட்டிலைன்னா எங்ககப்பன் பட்டிலன்னு"
"வாழ்ந்தவன் கெட்டா வல்லி ஓட்டுக்கு ஆக மாட்டான்; பொழச்சவன் கெட்டா பொரி ஓட்டுக்கு ஆவ மாட்டான்"
"விடிய விடிய வேங்காத்தா; விடிஞ்சு எந்திரிச்சு தூங்காத்தா."
"வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்"
"வேலம்பட்டெ வலியப்போக்கும் – ஆலம்பட்டெ பித்தத்த நீக்கும்"
"வெறும் கழுதக்கி வேசம்கட்டி ஆடுன கதெ"
"வட்டுக்கருப்பட்டியில ஈ மொச்சாபல"
"வாய்க்காலுக்கும் வரப்புக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரிதான்."
"வேலியில போகிற ஓணானை சீலயில நுழைஞ்சிக்கோன்னு சொல்லுவானேன். பிறகு அது குத்துது குடையுதுன்னு கத்துவானேன்"
"வெதை ஒண்ணு போட சுரை ஒண்ணா முளைக்கும்?"
"வெல்லந் தின்னவனை விட்டுட்டு வெரல் சூப்பினவனை புடிச்சிட்டு போனா எப்படி?"
"வன்மம், வைராக்கியம் தர்மத்தின் பலனையும் விழுங்கும்."
"வருவது வழியில நிக்காது, போறது போவாம இருக்காது."
"வயிற்றுச் சோத்துக்காரனுக்கு வலம் வந்ததுதான் மிச்சம்."
"வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது."
"வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க."
"வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்."
"வாழப் பழத்தில் ஊசி ஏத்துவது போல்"
"வெல்லம் இருக்கும் இடத்தில்தான் ஈ மொய்க்கும்."
"வெண்கல பூட்ட உடச்சி விளக்கமாத்த திரிடியத போல்."
"வீட்டில் அடங்காதது ஊரில் அடங்கும்."
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு."
"வேலியில் இருக்கும் ஓணானை வேட்டிக்குள் எடுத்துவிட்ட கதையாட்டம்"
"வீதியில போற சனியனை வீட்டுக்குள் கூப்பிட்டு வந்ததுபோல்"
"வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வரனும்."
"விருந்தாளி வந்தா வறுசட்டி வச்சி வறுப்பான்."
"வாழ்த்த வாழ்த்த வைரக்கல்லு திட்ட திட்ட தெய்வக்கல்லு."
"வைக்கப்போரில் ஊசியைத் தேடுவதுபோல."
"வீரியம் பெரிதல்ல; காரியம்தான் பெரிது."
"வாழந்து கெட்டவங்க வறுவோட்டுக்குக் கூட ஆகமாட்டாங்க."
"விறகு தூக்குபவனுக்கு தலைவலி வந்தால் விறகால் அடித்தால் சரியாப்போயிடும்."
"வண்ணான் முன்னால சீலைய போட்டுட்டு கொக்கு பின்னால போனா, அது எப்படிக் கொடுக்கும்?"
"வாழ்ந்து அறுத்தாலும் தப்பில்ல; காய்ஞ்சி இடிஞ்சாலும் ஒன்னுமில்ல."
"வாய்க் கொழுப்பு சீலையால ஒழுவுது."
"வடக்கே வாழ்வு, தெற்கே தேய்வு."
"வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது."
"வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கி அட்டிகையை வித்து வட்டி கட்டினானாம்."
"வானத்தில் இருக்கும் சனியனை ஏணி வைத்து இறக்கினாளாம்."
"வீதியே போற இட்றத்த விருந்துக்குக் கூப்பிட்டானாம்."
"வேலியில கடந்த ஓணானை வேட்டியில எடுத்து விட்டுக்கிட்ட கதையாட்டம்."
"வலைக்கு முன்ன ஏன் கல்ல போடற"
"வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்."
"வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது."
"வடக்கே கருத்தால் மழை வரும்."
"வட்டி ஆசை முதலுக்கு கேடு."
"வணங்கின முள் பிழைக்கும்."
"வரவு எட்டணா செலவு பத்தணா."
"வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.வருந்தினால் வாராதது இல்லை."
"வருமுன் காப்பதறிவு."
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."
"வளவனாயினும் அளவறிந் தளித்துண்."
"வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று."
"வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்."
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்."
"வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு."
"வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்."
"வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்."
"வாழ்வும் தாழ்வும் சில காலம்."
"வாழு, வாழ விடு."
"விண் பொய்த்தால் மண் பொய்க்கும்."
"விதி எப்படியோ மதி அப்படி."
"வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?"
"விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?"
"விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?"
"வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக."
"விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?"
"விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது."
"விளையும் பயிர் முளையிலே தெரியும்."
"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்."
"வீட்டில் எலி வெளியில் புலி."
"வெட்டு ஒன்று துண்டிரண்டு."
"வெறுங்கை முழம் போடுமா?"
"வெளுத்ததெல்லாம் பாலல்ல."
"வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்."
"வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு."
"வருந்தினால் வாராதது இல்லை."
"வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்."
"விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்."
"வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?"
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்."
"வாராது இருப்போர் வழிமுறை பேணார்."
"வாய்ச்சொல்லைவிட செயலின் குரலே உரக்க ஒலிக்கும்."
"வெற்றிச் செயலே விளைபயன் ஆகும்."
"விவேகம் எச்சரிக்கும் அவிவேகம் செயல்படும்"
"விரைவாகப் படியேறுபவர் திடீரென வீழ்வர்"
"வெற்றி பெறுமுன் எக்காளமிடாதே."
"வைத்திருப்பதைவிட வாய்ப்புக்கு மதிப்பு அதிகம்."
"வாள் பிடித்தால் பேடி வீரனாகிவிடமாட்டான்"
"வார்த்தைகள் கடுப்பாகவும் கசப்பாகவும் இருந்தால் காரணம் வலுவற்றது."
"வாதம் பேசல் எளிது பேதம் இன்றி உரையாடல் அரிது"
"வாழ்க்கைக்கு வடிவம் அளிப்பதே கலையின் நோக்கம்."
"வாழ்வு சிறிது வளர்கலை பெரிதே!"
"வழி தவறுவதை விட வழிகேட்பது மேல்"
"வாயுள்ள பிள்ளை வழி தேடிக் காணும்."
"விதியின் விளையாட்டை யாரால் வெல்ல முடியும்?"
"வெறும் அழகு சோறு போடுமா"
"விரைவில் உறங்கி விரைவில் எழுபவன் ஆரோக்கியமும் செல்வமும் அறிவும் அடைவான்."
"வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை அன்று."
"வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்."
"விரும்புவதை விரைவில் நம்புகிறோம்."
"வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்."
"வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல்."
"விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்"
"வீண்பெறுமை பூக்கிறதே தவிரக் காய்ப்பதில்லை."
"வாய்ப்பு இரு தரம் கதவைத் தட்டாது."
"வீரனே காப்பாற்றுவான்."
"வீரம்மிக்க புத்துலகே தீரம்மிக்க மக்களையுடையது."
"வாணிபம் என்பது பிறர் பணம்."
"வியாபாரம் என்ற பெயரில் ஏமாற்று அல்லது ஏமாறு."
"வெங்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல."
"வாலிபம் இன்பத்தால் நிறையும் வயோதிகம் கவலையால் நிரம்பும்."
"வாய் சர்க்கரை கை பொக்கரை"
"விரிசலைச் சரிசெய்து விட்டால் உடைவது தப்பும்"
"வருமுன்னர் காக்காவிட்டால் வாழ்க்கை பாழாம்."
"விதை எப்படியோ பயிர் அப்படி."
"வேட்டைப் பருந்து புறாக்குஞ்சு பொறிக்காது."
"வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்."
"வாடிக்கையாளர் கணிப்பே சரி."
"விலை கேட்கவே அஞ்சுபவன் நல்லதைக் குறைந்த விலைக்கு வாங்க முடியுமா"
"வந்தது வரட்டும் எதுவருமென்று யாருக்குத் தெரியும்?"
"வழக்கறிஞரின் உடையில் வரும் புகார்கள் பொய்களாகும்."
"வாய்ச்சொல் வீரர் செயல்வீரர் ஆகார்."
"வீழாது ஏறும் நம்பிக்கையுடன் வினையாற்று."
"வெறுப்பைக் காட்டுவதே கண்டனத்தின் அறிகுறி."
"வரலாறு இல்லாத நாட்டிற்கு வந்திடும் மகிழ்ச்சி."
"விரக்தி கோழையும் வீரனாக்கும்."
"வீரனுக்கு வாள் தேவையில்லை."
"வீழ்ந்தாலும் வீரன் அடி பணிய மாட்டான்."
"வீரமும் விடா முயற்சியும் அனைத்தையும் வெல்லும்."
"விவேகத்திலும் வீரம் அருஞ்செயல் புரியும்."
"வீரமும் விவேகமும் மனிதனின் மாபெறும் பண்புகள்."
"வல்லாங்கு பேசினாலும் பொல்லாங்கு செய்யாதவன்."
"விரும்பியபோது மகனுக்கு மணம் முடி"
"வறுமையில் கொடியது கடனே."
"வாய் ஒன்று சொல்லும் கையொன்று செய்யும்"
"வார்த்தைகள் வெறும் நீர்க் குமிழ்கள் செயல்களே தங்கத் துளிகள்."
"விரைவில் தொடங்கினால் விரைந்து முடியும்."
"வேகமாய் ஓடினால் மூச்சிறைக்காதர்"
"விரும்பியது விரைவில் கிட்டும்."
"வருத்தம் இன்றேல் நட்டம்."
"வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை."
"வாலிபத்தை நன்கு ஆண்டால் வயோதிகம் தானே ஆளும்"
"வாலிபத்தைக் கட்டுப்படுத்தினால் வயோதிகம் தானே கட்டுப்படும்."
"விரும்பியபடி சாப்பிடு அளவாகக் குடி."
"விவேகம் மறைப்பதை குடிபோதை வெளிப்படுத்தும்."
"வருதப்பட்டால் தான் கற்க முடியும்"
"வட்ட மேசையில் இடச் சண்டை இல்லை."
"வெண்ணிலா வழங்கிடும் எல்லோர்க்கும் தண்மையை."
"விடுபட்டவையும் செய்த பிழைகளும் நீங்கலாக."
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்"
"விசுவாசமற்ற வேலையே மரணத்திற்கு சமம்."
"வீழ்ச்சி வரும் பின்னே கர்வம் வரும் முன்னே."
"வீரச் செயல்கள் வீசும் நறுமணமே புகழ்."
"வளர்வதைக் காண்பவன் வருந்தி உழைப்பான்."
"விதி தேர்வது உறவு நாம் தேர்வது நட்பு"
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு."
"வெறும் பேச்சு தூக்கி எறியப்படும் முகத்துதி சிம்மாசனத்தில் அமர்த்தப்படும்."
"வருமுன் அறிபவன் புத்திசாலி."
"வீரனை அதிர்ச்டம் விரும்பிச் சேர்ந்திடும்."
"வாழ்க்கை விளக்கைவிட மேதமை விளக்கு அதிக வேகமாக எரிகிறது."
"விவேகத்தோடு கொடுப்பவன் நேரடியாகப் பயன்பெறுவான்."
"வம்பளப்பு மறைமுகமாக அனுபவிக்கப்படும் ஒரு தீமை."
"வம்பனை நம்பாதே."
"வேகம் விவேகம் அல்ல"
"வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது."
"வீழ்ந்து விட்டவன் தாழ்ந்தவனுக்கு உதவ முடியாது."
"வீரர்கள் உண்டாக்கப்படுகிறார்கள் பிறப்பதில்லை."
"வரவேற்புக்கு உரியவன் நல்விருந்தாளியாவான்."
"வெண்ணெய் திருடும்போது பூனை கண்ணை மூடிக்கொள்ளும்."
"வெட்ட விரும்பும் கரத்தையே முத்தமிடுவோர் பலர்."
"வேலையில்லாததால் சோம்பேறிகளுக்கு ஓய்வில்லை."
"வெட்கமின்மேயே அறியாமையின் தாய்."
"வீட்டுப் குப்பையை வெளியே போட்டுக் கிளறாதே!"
"வள்ளல் ஆவதற்கு முன் நேர்மையாளனாய் இரு."
"வாயை மூடிக்கொள் கண்களை அகலமாய்த்திற."
"விதை விதைத்தால் பயிர் விளையும் அன்பு விதைத்தால் அன்பு வளரும்."
"வாரிசுகள் இல்லாமையால் நிலம் தொலைந்ததில்லை."
"வெற்றி பெற்றோர் சிரிக்கட்டும்."
"வீட்டையும் நிலத்தையும் விடக் கற்பது மேல்"
"விரைவில் கற்றது விரைவில் மறக்கும்."
"வாழ்க்கை ஒரு புனிதப் பயணம்."
"வாழ்வோ குறுகியது காலமோ விரைகிறது."
"வாழ்க்கை ஆரம்பமாவது நாற்பதிலே."
"வாழ்க்கையில் பயணம் செய்கையில் வழியிலும் வாழ்ந்து காட்டுவோம்."
"வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது."
"வாழ்க்கை குறுகியதே ஆனாலும் இனிது."
"வாழ்க்கை சுகபோகமானதன்று"
"வாழ்க்கை ரோசா மலர்ப் படுக்கை அன்று."
"வறுமை இதயத்தை கனக்கச் செய்கிறது"
"வாழு வாழ விடு."
"வாழ்கிறவர்கள் காண்பார்கள்."
"விசிறிய தீயும் கட்டாயக் காதலும் இன்றுவரை நன்கு நடைபெற்றதில்லை."
"விசுவாசமே பணத்தினும் மதிப்பு வாய்ந்தது."
"வல்லான் வகுத்ததே வாய்க்கால்."
"வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்"
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்"
"விண் பொய்த்தால் மண் பொய்க்கும்"
"வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி"
"வலைகளும் திமிங்கலங்களை சிறைபிடிக்க வீசப்படுவதில்லை"
"வக்கத்தவனுக்கு திக்கெல்லாம் பெருமை"
"ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி"
"ஜாடிக்கேத்த மூடி."
"ஜென்மத்தில் பிறந்தது செருப்பால அடிச்சாலும் போகாது."
"ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?"